கோவையில் மற்றொரு நிர்மலா தேவி…
நிர்மலா தேவி மாணவிகளுக்கு தவறான வழிகாட்டினார் என ஆளாளுக்கு பொங்கினார்கள், யாரை எல்லாமோ இழுத்து கட்டினார்கள்
விவகாரம் எங்கெல்லாமோ போய் ஆளுநர் கூட்டம் போடும் அளவிற்கும், அங்கேயும் கன்னத்தை கிள்ளினார் என மறுபடியும் எரியும் அளவிற்கு சென்றது
இன்னும் நிர்மலா விவகாரம் பரபரப்பு தீரவில்லை
ஆனால் கோவையில் பெண்கள் விடுதி ஒன்றில் இதே நிகழ்வு நடந்திருகின்றது, விடுதி சொந்தக்காரர் செத்தே போய்விட்டார். அது கொலையா தற்கொலையா என கேட்க கூட யாருமில்லை
அந்த விடுதியின் பெண் காப்பாளர் புனிதா என்பவர் தலைமறைவாம்
அப்படியோ போ என விட்டும் விட்டார்கள்
போகிற போக்கில் நிர்மலா தேவி அவ்வளவு மோசமில்லை என்ற அனுதாபத்துடன் அந்த அம்மணி சிறைவிட்டு வரும் போல