கோவை மாவட்டம் நெகமம் அருகே ஒரு பெரும் சோகம் நிகழ்ந்திருக்கின்றது

கோவை மாவட்டம் நெகமம் அருகே ஒரு பெரும் சோகம் நிகழ்ந்திருக்கின்றது

தாய் தந்தை இல்லா பெண் ஒருத்தி பாட்டிவீட்டில் வளர்ந்திருக்கின்றார், அவளுக்கு 17 வயது. அந்த வயதில் வரவேண்டிய காதலும் வந்திருக்கின்றது

காதல் வந்தது தவறல்ல, அது பொருத்தமில்லாத ஒருவன் மீது வந்திருக்கின்றது

மதமும் ஜாதியும் குறுக்கே நிற்க இருவரும் தற்கொலை செய்ய முடிவெடுத்திருக்கின்றாகள்

அப்பொழுது அப்பெண் அது வலிக்கும் என‌ அஞ்சியிருக்கின்றாள், அந்த பாதகன் தீ ஊற்றி இருவரும் செத்துவிடலாம் என திட்டம் சொல்லியிருகின்றான்

எப்படி?

உன் மீது ஊற்றிகொள் அதன் பின் நான் உன்னை கட்டிபிடித்து சாகின்றேன் என சொல்லியிருக்கின்றான்

அந்த பேதைபெண்ணும் அப்படியே செய்திருக்கின்றாள், அவளை எரியவிட்டு அவன் ஓடியிருக்கின்றான்

அப்பெண் கருகிவிட்டாள்

இதில் சந்தேகத்திற்கு இடமில்லை, அப்பெண்ணிடம் அவன் உண்மையாக பழகவில்லை, அவளை கழற்றிவிட திட்டமிட்டிருக்கின்றான் அது பலிக்கவில்லை எனும்பொழுது அவளின் பலகீனத்தால் அவளை கொன்றுவிட்டான்

இப்பொழுது சிக்கிவிட்டானாம்

இருவரும் சேர்ந்துசாக முடிவெடுத்துவிட்டு அவன் மட்டும் தப்பிப்பது நியாயமில்லை

அவனையும் கொளுத்துவதுதான் சரி என அந்த ‍பகுதி மக்கள் சொல்லிகொண்டிருக்கின்றார்களாம்

காதல் என்பது புனிதமானது, காதல் தோற்றால் சாதல் எனும் ஒருவித கொள்கை இங்கு திணிக்கபட்டிருக்கின்றது

காவியமும், திரையுலகமும் அதனை பிடித்து நிறுத்திகொண்டிருக்கின்றன‌

அது மாற்றபட வேண்டும், காதல் என்பது நிச்சயம் அற்பமானது, அது உணர்வின் தூண்டல்

ஒரே காதல், தூய்மையான காதல் என்பதெல்லாம் உலகில் இல்லாதவை, அதெல்லாம் பச்சை பொய் , உருவாக்கபட்ட பிம்பங்கள்.

காதல் உருவாகவும் உடையவும் ஒரு அற்ப காரணம் போதும்

ஆனால் பாசம் என்பது நிலையானது, அது கொலை செய்யாது , வெறுக்காது, விட்டுவிட்டு ஓட சொல்லாது

இங்கு பருவத்தின் தூண்டலுக்கும் உண்மையான அன்பிற்கும் வித்தியாசம் தெரியாத மலரொன்று கருகிவிட்டது

அந்த அபலைபெண்ணிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

பருவ வயதினர்கு பாலியல் கல்வியும், தன் மன குழப்பங்களை தீர்க்க வழிகாட்டிகளும் அவசியம், இல்லாவிட்டால் இதற்கு தீர்வு இல்லை

வெளிநாட்டு பெண்கள் இப்படி காதலில் தோற்று தற்கொலை செய்கின்றார்கள் என எங்காவது செய்தி உண்டா?

அவர்கள் தெளிவாக இருக்கின்றார்கள், அவர்கள் உடைகளில் தாராளம் இருக்கலாம் ஆனால் மனதளவில் குழப்பமில்லாதவர்கள்

எல்லா நாட்டு பெண்களிடமும் வெட்கம் இருக்கின்றது, நாணமும் இருக்கின்றது. ஆனால் எது தனக்கு சரி, எது தனக்கு பொருத்தமில்லாதது என்பதில் மிக சரியாக மனதளவில் இருக்கின்றார்கள்.

அவர்களுக்கு வெட்கமில்லை, நாணமில்லை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது

யாரிடம் தன் வெட்கத்தை காட்ட வேண்டும் என்றும், யாரிடம் தன் தைரியத்தை காட்டவேண்டும் , எதனை கண்டுகொள்ளாமல் கடந்து செல்லவேண்டும் என்பதில் மிக தெளிவாக இருக்கின்றார்கள், அப்படி வளர்க்கபடுகின்றார்கள்

அந்த தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை சரியான பாதையில் நடத்துகின்றன‌

பொருந்தாதவன் என்றால் தூக்கி எறியவும், பொருந்த கூடியவன் என்றால் அவனுடன் 100 ஆண்டுகள் வாழவும் அவர்கள் தயங்குவதில்லை

இங்கு பெண்ணியம் சரியாக செயல்பட வேண்டுமானால், இளம் பெண்கள் நல்ல விதமாக பாதுக்காகபட வேண்டுமென்றால் இந்த காதல் எனும் மாயையில் இருந்து அவர்களை மீட்கவும், எது சரியான காதல் என புரிய வைக்கவும் அவர்களுக்கு வழிகாட்டுதல் வேண்டும்

இல்லாவிட்டால் இப்படி ஜென்சிபிரியாக்கள் உருவாகி கொண்டிருப்பதை தடுக்க முடியாது.

(அவள் அபலைபெண் உயிராக நினைத்த காதலன் சொன்னவுடன் கொளுத்திகொண்டாள், அவனும் உடன் வருவான் என நம்பியிருக்கின்றாள்

இதுவே தோழர் Devi Somasundaram என்றால் என்ன நடந்திருக்கும்?

தோழரிடம் அவர் காதலன் ((அப்படி ஒரு பயலும் இருக்க வாய்ப்பில்லை, கழுத்தில் சங்கிலிகட்டி அலைய எவனுக்கு துணிவு இருக்கின்றது?)) 
கொளுத்திக்கொள் கண்ணே நானும் உன்னோடு வருகின்றேன் என்றால் என்ன ஆகியிருக்கும்

மவனே நீ முதலில் கொளுத்து, அதில தப்பிச்சிட்டா விஷம் குடி, அதிலும் தப்பினால் நானே அடித்து கொல்கின்றேன் என சொல்லியிருக்கமாட்டாரா?

இந்த துயரம் நடந்திருக்கும்? )