கோஹினூர் வைரத்தை மீட்போம்

ஒரு துரதிருஷ்டத்தின் அடையாளம். 02

காகதீய பேரரசு தென்னகத்தின் உச்சத்தில் இருந்தது, இன்றளவும் அதன் சாதனை பெரிது, கோஹினூர் வைரம் கிடைக்கபெற்று கொஞ்சகாலத்தில் சரிந்தது.
அதன்பின் மாலிக்காபூர் டெல்லி எடுத்துசெல்ல, அதுவரையில் மிக பலம்பொருந்திய கில்ஜி அரசர்களில் மிக முக்கியமானவரான அலாவுதீன் கில்ஜி சிக்கலில் மாட்டினார், அதாவது வடக்கே மங்கோலியரிடம் அவர் பெரும் எதிர்பினை சந்திக்க வேண்டி இருந்தது.
அவர் காலத்திற்கு பின் டெல்லியினை ஆண்ட லோடியிடம் அது சிக்கியது, ஆனால் சொற்ப காலத்திலேயே, மொகலாயரான பாபரிடம் ராஜ்ஜியத்தை இழந்தார் லோடி.
பாபரும் டெல்லியில் பெரும் எதிர்ப்பினை சந்நித்தார், ஆனால் திரும்பிசெல்லும் திட்டம் இல்லை. அரசை ஸ்தாபித்த அவருக்கு பெரும் சிக்கல் மகன் ஹூமாயுனின் வடிவத்தில் வந்தது, பெரும் கடவுள் நம்பிக்கையாரான அவர், மகன் உயிருக்கு பதிலாக தன் உயிரை எடுக்க மன்றாட அப்படியே நடந்தது. அதாவது நிறைவான மரணம் இல்லை.
அதன் பின் ஹூமாயுன் இந்த வைரத்தினை வைத்திருக்க, ஷெர்ஷாவிடம் ஆட்சியினை இழந்து ஓடி திரிந்தார், பாபரின் மகனாக இருந்தும் விதி அவரை ஓடவிட்டது, இக்காலத்தில் வைரம் பாரசீகம் சென்றது. இதன் பின் ஹூமாயுன் மறுபடிம் பேரரசன் ஆனார்.
வைரத்தை வாங்கிய பாரசீக மன்னனின் ஆட்சி குலைந்தது, பின் தக்காண நிஜாமிடம் விற்கபட்டது. கொஞ்சநாளில் கடும் சிக்கலில் மாட்டிய நிஜாம் அதனை ஷாஜகானிடம் வழங்கினார்.
இந்தியாவின் சாலமோன் எனும் அளவிற்கு கட்டக்கலையில் சாதித்து கொண்டிருந்தவர் ஷாஜகான், அவரின் ரசனை அப்படி. கொஞ்சநாளில் ஒளரங்கசீப்பினால் படாதபாடு பட்டு, சிறையில் கைதியானார். நெஞ்செல்லாம் ஆற்றாமையும், கண்ணெல்லாம் ஏக்கமுமாக நொந்து மறைந்தார்.
அதன்பின் டெல்லி முகமது மன்னரை படாத பாடு படுத்தி வைரத்தை பாரசீகம் கொண்டு சென்றார் நாடிர் ஷா. இரண்டாம் அலெக்ஸாண்டர் எனும் அளவிற்கு பராக்கிரமசாலி, ஆனால் உள்வீட்டு தகராறால் பாகுபலிபோல வஞ்சகமாக கொல்லப்ட்டார்.
அதன்பின் சீக்கிய மாமன்னனிடம் வந்தது வைரம், ஒப்பற்ற தலைவன் ரஞ்சித்சிங் அதனை கொண்டாடினார், ஆனால் 59 வயதில் திடீர் நோயில் மறைந்தபின் அது ஆங்கிலேயர் வசமானது.
அது பிரிட்டன் அரச குடும்பத்திற்கு சென்றபின் அங்கும் குழப்பங்கள் தோன்றின, பிரிட்டன் அரசு கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரம் இழந்தது. உலகத்தினை ஆண்ட, சூரியன் மறையாத சாம்ராஜ்யம் பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் முடக்கபட்டது.
இன்றைய ராணி எலிசபெத் காலத்தில் அது இந்திய அரசுடன் வழக்கினை சந்திக்கின்றது.
இப்படியாக அதன் துரதிருஷ்ட வரலாறு பெரிது, மீட்டே திருவோம் என இந்திய கலாச்சார அமைப்புக்கள் அரசு ஆதரவுடன் களமிறங்குகின்றன. மீட்டுவிட்டால் என்ன நடக்கும்? பொதுவாக இந்த வைரம் வைத்திருப்பவர்களை வீழ்த்தும் துரதிருஷ்டம் உள்ளதாக சொல்லபடுவதால் இந்தியாவில் அரசியல்வாதியோ அல்லது தொழிலதிபரோ தொடகூட சாத்தியமில்லை.
ஆதலால் திருச்செந்தூர் வைரவேல், மரகத லிங்கம் வரிசையில் இந்த வைரம் நிச்சயம் சேராது.
தஞ்சாவூர் கோயில் செண்டிமெண்டிற்கே அஞ்சி ஓடுபவர்கள், இந்த வைரத்தின் கதை தெரிந்தால் அருகில் செல்வார்கள்? செல்லமாட்டார்கள். ஆனால் இந்தியாவின் பெரும் அடையாளம் இந்த வைரம்.
தென்னகம் அப்படியான வைரங்களை கொடுக்கும் பகுதியாகத்தான் இருந்திருக்கின்றது, கோல்கொண்டா போன்ற பகுதிகள் மட்டும் அல்ல. களக்காடு மலையிலும் முன்பு நீலக்கல் வைரம் அபூர்வமாக கிடைத்தாக சில செய்திகள் உண்டு.
எப்படியோ அந்த வைரம் பாஜகவினரின் சாதனையாக மீட்டெடுக்கபட்டால் அதன் ராசி அவர்களை அழித்துகட்டிவிடும் என்பதால் கொண்டு வந்தால் நாட்டுக்கு மிக நல்லது
முற்றும்..
No automatic alt text available.