சங்கத்தில் குழப்பம் ஏதுமில்லை

Image may contain: 1 person, close-up

என்னாயிற்று உங்கள் சங்கம் உடைந்துவிட்டதா? ஏன் தனிதனியாக குஷ்புவிற்கு ஆதரவு தெரிவிக்கின்றார்கள்? சங்க கட்டு கோப்பு என்னாயிற்று என பலர் கேட்கின்றார்கள்

சங்கத்தில் குழப்பம் ஏதுமில்லை, இந்த Sadhu Sadhath என்பவர் நீண்டகால தலைமறைவாகிவிட்டு வந்ததுதான் சர்ச்சைக்கு காரணம்

அதாவது Sadhu Sadhath கடந்தவருடம் நீட் தேர்வு சர்ச்சை பதிவுகளால் பக்தாஸ்களால் கடுமையாக கருத்துக்களால் காயபடுத்தபட்டார் , அதில் மனம் பாதிக்கபட்டு இனி ராகுல் பிரதமரானால்தான் முகநூலில் கைவைப்பேன் என ஓடினார்

நாமும் சொல்லிபார்த்தோம் கேட்டாரில்லை, அவருக்கு சங்கத்தை விட பக்தாசும் ராகுலும் முக்கியம் என பட்டதால் சங்கம் அவரை கண்டித்துவிட்டு நகர்ந்தது

உண்மையில் முகநூல் அரசியல் பதிவுகள் இடும்பொழுது தமிழக அரசியல்வாதியாகவே மாற வேண்டும். பதிலுக்கு 
ஆளாளுக்கு பொங்குவார்கள், குதிப்பார்கள், கதறுவார்கள், மிக கொச்சையாக எல்லாம் பேசுவார்கள்

அவற்றை எல்லாம் எப்படி எடுத்துகொள்ள வேண்டுமென்றால் கலைஞர் போல் கண்டுகொள்ளாமல் செல்ல வேண்டும், இல்லாவிட்டால் நிற்க முடியாது

தமிழக அரசியல்தனமும் முகநூல் வாழ்வும் வேறல்ல‌

இந்த பக்குவம் இல்லாததால் ஓடினார் , இப்பொழுது ராகுல் பிரதமராவார் என பாஜகவினரே ஒப்புகொண்டுவிட்டதால் வந்துவிட்டார்

இதில் குஷ்பு பற்றி பதிவிடுகின்றார், வாழ்த்துக்கள்

அதாவது பாரததாயின் விடுதலைக்கு காந்தி, போஸ் என பலர் பாடுபட்டனர். அவரவர்க்கு தோன்றிய வழியில் போராடினர்

அப்படி குஷ்பு தாயின் அரசியலுக்கும் வளர்ச்சிக்கும் எப்பாதையிலும் போராடலாம் நாம் காந்தி வழி, அவர் எவ்வழியாகவும் இருக்கட்டும்

இந்த கிறிஸ்தவ சபைகள் ஒரு தந்திரம் செய்யும் அது கத்தோலிகமோ இல்லை பிரிவினையோ ஒன்றின் வழியில் இன்னொன்று குறுக்கிடாது

காரணம் யார் போதித்தால் என்ன கிறிஸ்தவம் பரவினால் சரி

அப்படி நாம் தலைவிக்காக போராடினால் என்ன? இன்னொருவர் இன்னொரு வழியில் போராடினால் என்ன?

தலைவி வாழட்டும், ஆளட்டும்

குஷ்பு என்பவரின் பூர்வீகம் தெரியாதவர்களுக்காக புது தகவலை சொல்கின்றோம்

இந்திய ஆப்கன் எல்லையாய் இருக்கும் மலையினை இந்து குஷ் மலை என்பார்கள். அதாவது இந்திய காவல் என பொருள்

அலெக்ஸாண்டர் அதை தாண்டித்தான் இந்தியா வந்தான்

அந்த இந்து குஷ் பகுதி அரசு முன்பு குஷான்கள் என அழைக்கப்ட்டு மாபெரும் அரசெல்லாம் இருந்தது

அந்த அரசின் தொடர்ச்சியாக வந்த வீர மங்கையே குஷ்பூ, குஷ்பு அந்த எலையோர‌ வம்சம் என்கின்றது ஆய்வு

இந்தியாவின் காவல் இந்து குஷ் மலை என்றால் தமிழகத்தின் பெரும் அரண் தலைவி குஷ்பு

அதற்கு சந்திரபோஸ் பாணியில் அவர்கள் ராகுலை வற்புறுத்தினால் நாம் காந்தி வழியில் வற்புறுத்துவோம்

அவர்கள் ஹமாஸ் என்றால் நமக்கு அராபத் வழி

ஆக சங்கம் ஒரு நாளும் உடையாது, துவளாது

ராகுல்காந்தி விரைவில் குஷ்புவினை தமிழக காங்கிரஸ் தலைவராக அறிவிக்காவிட்டால் சங்கம் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கும்

Bilal Aliyar , Sadhu Sadhath போன்றவர்கள் மனித வெடிகுண்டாகவும் மாறலாம்

அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொறுப்பு ராகுல்காந்திக்கே உண்டு