சங்கம் மிக வருந்துகின்றது

தங்க தலைவி ஆத்திரபட்டு ஒருவனை திட்டிவிட்டதாக செய்தி அறியபெற்றோம், கொஞ்சம் தாமதமாகிவிட்டதால் சங்கம் மிக வருந்துகின்றது

அதாவது எவனோ ஒரு மானிட பதர், பூமியின் பாரம், சோற்றால் அடித்த பிண்டம், அறிவு கெட்ட முண்டம், உலகுக்கே தண்டம் தலைவியிடம் உன் மகள் அழகாக இல்லை என சீண்டியிருக்கின்றான்

தலைவியிடம் உள்ள மிக நல்ல குணங்களில் ஒன்று குடும்ப கட்டமைப்பினை பேணுவது, நடிகைகளில் அவர் அளவு அப்படி யாருமில்லை

கவனித்தால் தெரியும் பெரும்பாலும் குடும்ப புகைபடமே வெளியிடுவார், பேட்டிகளில் கூட தன் மகள்களை பற்றி அடிக்கடி சொல்லிகொண்டே இருப்பார், மகள்களின்றி அவர் விமானம் ஏறியது குறைவு

அப்படி மகள்களை பார்த்து பார்த்து வளர்க்கும் தலைவி இந்த மூடன் வம்பிழுத்ததும் கொதித்துவிட்டார் அவனை கடுமையாக வறுத்தெடுத்திருகின்றார்

தலைவி இம்மாதிரி விஷயங்களை நம்மிடம் தட்டிவிட்டாலே போதும் நாம் பார்த்துகொள்வோம் , தலைவி உத்தரவிட்டால் சிரியாவின் அல்பத்தாதி என்பவனையே டிரம்புக்கு முன்பாக தூக்கியிருக்கம் சங்கம் இவனை விடுமா?

எனினும் அந்த அற்ப மானிட பதருக்கு, வாசனை தெரியா கழுதைக்கு சங்கம் சொல்லி கொள்வது இதுதான்

ஏ உலகம் அறியா அற்பனே, பெற்றவரை போல் பிள்ளைகள் வந்துகொண்டே இருந்தால் இவ்வுலகில் கடவுளின் இயக்கம் சரிவர நடக்கவில்லை என பொருள்

ஒரு தலைமுறை எழும் பொழுது அடுத்த தலைமுறை சரியும், இன்னொரு பக்கம் ஏதோ ஒரு தலைமுறை எழும்பும், உலக நியதி இது

கடவுளின் இயக்கம் அப்படி சரியாக நடக்கின்றது

மாவீரன் அலெக்ஸாண்ட, நெப்போலியனின் வாரிசுகள் அவர்களை போல் இல்லை. காந்தியின் பிள்ளைகள் ஒன்றும் அவரைபோல் வரவில்லை

ஏன் இந்திராவின் வாரிசுகளே அவரை போல் இல்லை

கம்பன், பாரதி, கண்ணதாசன் வாரிசுகள் எல்லாம் அவர்களை போல் இல்லை. அவர்களை போலவே வாரிசுகளும் வந்தால் கடவுள் படைப்பில் ஏதோ குழப்பம் என்று பொருள்

அதனால் ஒரு அற்புத பிறப்பு பிறக்கும் பொழுது அது உச்சம் பெற்று அத்தோடு சரியும் என்பதுதான் விதி, மிக சில இடங்களில் இரண்டாம் வாரிசு எழலாம் அது மிக மிக மிக அபூர்வமே

ஆக தலைவியிடம் உன்னை போல் உன் மகள் இல்லை என கேட்டால் உன்னை போல் முட்டாள் இல்லை, ஆம் கடவுளால் ஒரே ஒரு குஷ்புவினைத்தான் மானிட வரலாற்றிலே ஒருமுறை மட்டும்தான் படைக்க முடியும் அவரின் வல்லமை அவ்வளவுதான், இன்னொரு குஷ்பு வர இன்னொரு கடவுள்தான் வேண்டும்

புரிகின்றதா?

சரி இதை விட்டு நாம் சொல்வதை செய்வாயா?

நேரே மெரினா பக்கம் செல், அண்ணா கல்லறை ஓட்டினாற்போல் ஒரு கல்லறை இருக்கும் , அங்கு சென்று அய்யா உம் அறிவில் உம் மகன் ஏன் பிறக்கவில்லை? என கேட்டுவிட்டு வந்துவிடு பார்க்கலாம்

(படத்தில் இருக்கும் இந்த இழிபிறப்பே, நல்ல குடும்பத்தில் பிறக்கா நாதாரியே எம் தலைவினை சீண்டியிருக்கின்றான்

இவனை பின்லேடன் , அல்பத்தாதியினை அமெரிக்கா தேடியதை விட கடும் வேகத்தில் சங்கம் தேடுகின்றது

இவன் தலைக்கு 1 பில்லியன் டாலர் சன்மானம் வழங்கபடும்

தலையினை தவிர கண் , காது, மூக்கு, நாக்கு, கைவிரல் என ஒவ்வொன்றாக கொண்டுவந்தாலும் சிக்கல் இல்லை சில மில்லியன் டாலர்கள் ஒவ்வொன்றுக்கும் வழங்கபடும்..

எனினும் இவனை உயிரோடு பிடிக்கவே சங்கம் விரும்புகின்றது, இவனை பிடித்து தலைவி காலில் போட்டு அடித்து துவைத்து இவன் ரத்தத்தால் தலைவிக்கு பாதபூஜை செய்யாமல் சங்கம் ஓயாது.. அடங்காது)