சசிகலாவிற்கு ஆதரவாக …..

சசிகலாவிற்கு ஆதரவாக பல பத்திரிகைகள் வரிந்து கட்டி எழுதுகின்றன, சில பத்திரிகைகள் அனைத்து பக்கத்திலும் சசிகலா செய்தி வருமாறு பார்த்துகொள்கின்றன‌

அன்னை தெரசாவிற்கு பின் இந்தியா கண்ட தியாக பிம்பம் எனும் அளவிற்கு சில பத்திரிகை அழிச்சாட்டியம் தாளவில்லை

ஒன்று புரிகின்றது

இன்றைய டிஜிட்டல் காலத்திலே, இந்த முகநூல் காலத்திலும் இப்படி எல்லாம் எழுதி ஒரு தலைவரை உருவாகக் நினைக்கும் பத்திரிகைகள்..

அந்த காலத்தில் எப்படி எல்லாம் எழுதி அறவே தகுதி இல்லாதவர்களை எல்லாம் பெரிய தலைவர்களாக, பெரும் பிம்பங்களாக ஆக்கியிருப்பார்கள் என தெரிகின்றது

அண்ணாவும், கலைஞரும், எம்ஜிஆரின் வள்ளல்தன்மை போன்றவையும், ஜெயாவின் சில பிம்பங்களும் இப்படி எல்லாம் ஊதிபெரிதாக்கபட்டவை என்பது நன்றாக புரிகின்றது

தமிழக அரசியல்வாதிகள் எப்படி உருவாக்கபட்டார்கள், அதில் பத்திரிகைகள் பங்கு என்ன? என்பதை தமிழக மக்கள் உணர்ந்துகொண்டிருக்கும் பொன்னான தருணமிது

விட்டுவிடாதீர்கள், இனி இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காது, இந்த தருணத்தை வழங்கிய அம்மா அவர்களுக்கு கண்ணீரோடு நன்றிகள்


இந்த பகுத்தறிவு, தன்னம்பிக்கை, தன் முனைப்பு, வாழ்வில் வெற்றிபெறுவது எப்படி என சொல்லிகொண்டும்

தலைவிதி என ஒன்றும் இல்லை , கடவுள் இல்லை. உழைப்பு மனிதனை உயர்த்தும் என யாராவது சொன்னால், இன்னும் சொல்லிகொண்டிருந்தால்

அவன் காதினை திருகி பன்னீர்செல்வத்தையும், சசிகலாவினையும் காட்ட வேண்டும்

அவர்கள் முன் ஜென்மபுண்ணியமா? இல்லை 8 கோடி தமிழரின் பூர்வ ஜென்ம சாபாமா? என தலை குழம்பியிருக்கும் நேரம் இது.

எம்ஜிஆர் கட்சி வளர்க்கும்பொழுது சசிகலா எங்கிருந்தாரோ, ஜெயா ஆட்சியினை கைபற்றும்போது பன்னீர் எங்கிருந்தாரோ?

இல்லை அடுத்த 10 ஆண்டுகளுக்கு பின் வரும் முதல்வர் எங்கு பரோட்டா தட்டுகின்றாரோ அல்லது கழுதை மேய்க்கின்றாரோ தெரியவில்லை

இதெல்லாம் மானிட அறிவிக்கு எட்டுவதில்லை, எட்டவும் எட்டாது

ஆக விதியினை நம்பாதவர்கள் பன்னீர்செல்வத்தை பாருங்கள், இன்னும் நம்பிக்கை வராவிட்டால், அது உங்களுக்கு வரவே வராது.


உடலால் தூரமாக செல்ல செல்ல,

மனதால் சொந்த மண் நெருங்கிகொண்டே இருக்கின்றது….

மானிட விசித்திரம்..