சசிகலாவிற்கு 5 நாள் பரோல்

சசிகலாவிற்கு 5 நாள் பரோல், இன்று சென்னை வருகின்றார்

“ஓஓ ஒரு தென்றல் புயலாக வருதே…. “

(புதுயுக மகள் இவள் அணிகின்ற வளையல்கள் சிறையினை உடைத்துவிடும்..)


பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் சென்னை வரும் சசிகலாவை வரவேற்கத் தமிழகம் முழுவதிலுமிருந்து . பல ஆயிரம் தொண்டர்கள் சென்னை விமான நிலையத்துக்கு வர வேண்டும் : கட்சி தலமை உத்தரவு

ஆமாம், சத்தியாகிரக போராட்டத்திற்காக சிறை சென்று, செக்கு இழுத்துவிட்டு, படாத சித்திரவதை எல்லாம் பட்டுவிட்டு வெளிவரும் தியாக தலைவி அல்லவா?

பலகோடிபேர் சேர்ந்து வரவேற்கத்தான் வேண்டும்

ஒரு மோசடி குற்றவாளி சிறை சென்றுவிட்டு பரோலில் வருகின்றார், இவருக்கு இத்தனை ஆடம்பர வரவேற்பு என்றால் கொஞ்சமேனும் அவர்களுக்கு வெட்கமில்லை?

உலகம் நாணி சிரிக்கின்றது.


“இதுபோன்றதொரு அரசை நான் பார்த்ததேயில்லை” : ஆர்.நல்லக்கண்ணு

பாருங்கள் மிஸ்டர் நல்லகண்ணு, கோமாளி ராமசந்திரன் ஆட்சியினை எல்லாம் கண்ட நீங்களே இப்படி ஒரு அரசை பார்த்ததில்லை என்றால், நாங்கள் மட்டும் பார்த்திருப்போமா?