சசிகலாவை பொறி வைத்து பிடித்த மத்திய அரசு : செய்தி
சசிகலாவை பொறுமையாக காத்திருந்து பொறி வைத்து பிடித்த மத்திய அரசு : செய்தி
இவர்களுக்கு இதுவே வேலையாகிபோனது, ஒரு மண்ணாங்கட்டியும் கண்டுகொள்ளமாட்டார்கள், ரூபா போன்ற நேர்மமையான அதிகார்கள் உண்மையினை வெளிகொணர்ந்தால் நாங்கள் தான் பொறிவைத்தோம் என வந்து நிற்பார்கள்
அப்படி பொறி வைப்பவர்கள், அப்பல்லோ மர்மத்தை வெளிகொணர்ந்தால் என்ன? செய்யமாட்டார்கள். இனி என்றொவது ஒரு நாளில் மர்மம் வெளிவந்தால் மோடி மேஜிக் என்பார்கள்
எல்லா இடத்திலும் இதே அட்டகாசம், இதோ எல்லையில் சீனா மல்லுகட்டுகின்றது, நாளை அவர்களே விலகிசென்றால் உடனே இது எங்களின் மாபெரும் வெற்றி என கொஞ்சமும் வெட்கமின்றி சொல்வார்கள்
இப்பொழுது சசிகலாவினை பிடித்துவிட்டோம் என்பது போல
சரி, சசிகலா பெங்களூர் சிறையில் தகிததித்தோம் செய்து மாட்டிகொண்டார் அல்லவா? பொறி வைத்து பிடித்தாயிற்று அல்லவா? இனி என்ன செய்வீர்கள் என கேட்டால் பதிலே வராது
அதிகாரிகளுக்கு இடையிலான போட்டி காரணமாக சசிகலா மீது புகார் கொடுக்கிறார்கள்: டிடிவி தினகரன்
இது உண்மையாக இருக்கலாம், ஒரு அதிகாரிக்கு ஒரு கோடி கொடுத்துவிட்டு இன்னொரு அதிகாரிக்கு 2 கோடி கொடுத்தால் போட்டிவராமல் என்ன செய்யும்?
அதிகாரிகளுக்குள் இவர்களின் லஞ்ச பணம் தொடர்பாக சண்டை வந்திருக்கலாம், அதனால் விஷயம் கசிந்திருக்கலாம்
எனக்கும் ஒரு பங்கு தருகின்றீர்களா இல்லையா என மிரட்டிவிட்டு யாரோ விஷயத்தை வெளிசொல்லிவிட்டார்கள்
இதனைத்தான் அன்னார் சொல்லவருகின்றார்,
அது என்ன போட்டி என இவர் சொல்லாததாலும், சொல்லியிருப்பவர் தினகரன் என்பதாலும் எளிதாக முடிவு செய்யலாம்,
அதாவது இவர்கள் கொடுத்த பணத்தில் அதிகாரிகளுக்கு இடையே நடந்த பங்கீடு போட்டிதான் சசிகலா சிக்கலுக்கு காரணம்
முதன்முறையாக உண்மையினை சொன்ன தினகரனுக்கு வாழ்த்துக்கள்