சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு தொகுதியில் ஆயிரம் சிக்கல்
சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு தொகுதியில் ஆயிரம் சிக்கல், அப்படி வகையாக சிக்கியிருப்பவர் ராதாபுரம் எம்.எல்.ஏ இன்பதுரை
ராதாபுரம் தொகுதி அப்பாவு என்பவருக்கு குத்தகைக்கு விடபட்டிருந்தது, இதனை கணித்த கலைஞர் அவரை கட்சியில் சேர்த்தும்கொண்டார், ஆனால் கடந்த தேர்தலில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார் அப்பாவு
உதயகுமார் இரோம் ஷர்மிளாவிற்கு அன்றே தோற்று எச்சரிக்கை செய்தார், ஷர்மிளாதான் கவனிக்கவில்லை
இன்பதுரை வெற்றியினை தக்கவைக்க பெரும் போராட்டம் நடத்தவேண்டிய கட்டாயத்தில் கடும் உழைப்பினை கொடுத்தார்,
யார் வாட்சப்பில் பொதுபிரச்சினைக்கு தொடர்பு கொண்டாலும் உடனே பதில்கொடுத்தார், கலாய்த்தாலும் கண்டுகொள்ளவில்லை
அவருக்கும் நல்ல இமேஜ் தொகுதியில் வந்தது, பரவாயில்லை தொகுதியில் கவனம் செலுத்துகின்றார் எனும் நிலை வரும்பொழுதுதான் ஜெயா மறைந்தார்
அதன் பின் நடந்த காட்சிகளில் இன்பதுரை துன்பதுரையானார், டிசம்பர் 5ல் அழஆரம்பித்த அவருக்கு இன்னும் கண்ணீர் நின்றபாடில்லை
அவர் பன்னீர்செல்வத்தை ஆதரிக்கவேண்டும் என சிலர் வாட்சப் செய்தி அனுப்பினர், இப்பொழுது தொகுதிபக்கம் வந்தபொழுது சிலர் பன்னீர் பக்கம் செல்க என மனுவே கொடுக்கின்றார்களாம்
பத்திரிகைகள் இந்த மனுவிஷயத்தை பெரிதாக்குகின்றன, அன்னாரோ கண்டுகொள்ளாமல் தொகுதியில் தன் செல்வாக்கினை தக்க வைக்க குடிநீர் பிரச்சினையினை சமாளித்துகொண்டிருக்கின்றார்
பன்னீர் பக்கம் செல்லுங்கள் என மனுகொடுக்க வந்தவனிடம் இவர் உள்ளம் திறந்து கொட்டியிருக்கலாம், எப்படி
” என்னை என்ன செய்ய சொல்கின்றீர்கள், அம்மாவின் விசுவாசி பன்னீர் பக்கம் செல் என்கின்றீர்கள், அவர் உண்மையான அம்மா விசுவாசி என கண்டீரா?
ஜெயா செத்தபின் தீபா, சந்திரன், பன்னீர், சசிகலா புஷ்பா என எத்தனைபேர் இங்கே வாருங்கள் என அழைக்கின்றார்கள், செல்ல முடியுமா?
கட்சிக்கு வெளியே இத்தனை கும்பல், கட்சிக்குள் நீ தினகரன் அணியா, சசிகலா அணியா, மகாதேவன் அணியா, போயஸ் தோட்டத்துகாரன் அணியா என ஆயிரம் கேள்விகள்
கட்சிக்குள்ளும் அங்கு போ,இங்கு போ என அழைக்கின்றார்கள், கட்சிக்கு வெளியேயும் அங்கு போ, இங்கு வா என்றால் நான் என்ன பைத்தியகாரனா?
நீர் போட்டது ஒருவோட்டு, வாரும் நான் எங்கும் செல்லவிலை. நாம் இருவரும் கட்சி தொடங்கலாம், சரியா. கட்சி தொடங்கி ஆட்சி பிடித்துவிடுவோம?
முன்பாவது வாக்குவித்தியாசம் 49 வோட்டுகள், இப்படி செய்தால் மொத்தமே 49 வோட்டுகள்தான் விழும்.
நான் அணி மாறினால் தொகுதி பிரச்சினை தீர்ந்துவிடுமா?
நான் முதலமைச்சர் அணியில் இருப்பதால்தான், இதோ இப்படி எல்லாம் ஓடி தொகுதியின் குடிநீர் பிரச்சினை முதல் பல பிரச்சினைகளை தீர்க்கமுடிகின்றது,
நான் பன்னீர் அணிக்கு சென்றுவிட்டால், உண்ணாவிரதம், எதிர்ப்பு, டெல்லி பயணம் என சுற்றிகொண்டே இருந்தால் தொகுதிக்கு என்ன செய்யமுடியும்? என்ன திட்டம் கொண்டுவரமுடியும்?
அப்படி சென்று தொகுதி சீரழிந்தாலும் என்னைத்தானே குற்றம் சொல்வீர்கள்?
நான் பன்னீர்பக்கம் சென்றுவிட்டால் பழனிச்சாமியிடம் ஏதும் தொகுதிக்கு கோரிக்கை வைக்கமுடியுமா? அப்படி நடந்தால் முறையிட நீர் என்ன கவர்ணாரா, இல்லை வந்து வணங்கி கண்ணீர் விட்டு அழ நீர் ஜெயா சமாதியா?
அதனால் 4 திட்டங்களை செய்ய இந்த அணியில் இருக்கின்றேன் போதுமா?, மீறி நான் பன்னீர் அணிக்கு செல்லவேண்டுமென்றால் அவரை முதலமைச்சர் ஆக்கிவிட்டு வருகின்றீர்களா? அதன் பின் பேசலாம்
கட்சிக்குள்ளும் அணி, கட்சிக்கு வெளியிலும் அணி, எல்லோரும் அழைத்தால் ஒரு எம்எல்ஏ என்ன செய்வான், எம்.எல்.ஏ ஆனது தவறா?
ஜெயா ஆன்மா என்னிடம் வந்து உண்மை விசுவாசி யாரென சொல்லட்டும், அதன் பின் பார்க்கலாம்..
ஆக ராதாபுரம் தொகுதி ம்க்களே, நான் இன்னும் இங்கு நீடித்திருப்பது தொகுதி நலனுக்காக, உங்களுக்காக
உங்களுக்கு பல திட்டங்களை பெற்றுதரும் நல்லவிஷ்யத்திற்காக, பன்னீருக்காக அரசை பகைத்து உங்களை நிர்கதியாக்க நான் விரும்பவில்லை
தொகுதி பிரச்சினையினை பேசுங்கள், எவ்வளவும் பேசுங்கள். கட்சி பிரச்சினையினை என்னிடம் பேசி என்னாக போகின்றது?
ஒன்றும் ஆகபோவதில்லை…
அம்மா இத்தொகுதியினை பற்றி கண்ட கனவினை எல்லாம் நான் நிறைவேற்ற வேண்டாமா? அம்மாவிற்காகதானே எனக்கு வாக்களித்தீர்கள்?
அம்மாவின் கனவினை நிறைவேற்றவே நான் உழைத்துகொண்டிருக்கின்றேன்
உங்களில் நான். உங்களுக்காகவே நான்”
இப்படி சொல்லியிருந்தால் அந்த மனு கொடுத்தவர் அப்பக்கம் நின்றிருப்பார்?,
அதன் பின் எவனாவது வாட்சப்பில் பேசுவான்..