சசிகலா உறவினர்கள் இல்லத்தில் நடைபெற்ற சோதனைகள் நிறைவு

சசிகலா உறவினர்கள் இல்லத்தில் நடைபெற்ற சோதனைகள் நிறைவு

ஒரு வழியாக பெரும் புயல் என தாக்கிவிட்டு சசிகலா குடும்பத்தை அலறவிட்டு சென்றிருக்கின்றது வருமானவரி துறை

அடிக்கடி ஆங்காங்கு கருப்பு பணத்தின் மீது நடத்தபடும் ரெய்டுகள் புதிதல்ல, இம்முறை பெரும் பட்டாளம் இறங்கியது அவ்வளவுதான்

ஆனால் இதனால் கருப்புபணம் ஒழியுமா?

பெரும் கருப்புபணம் எங்கிருக்கின்றது?

அறக்கட்டளை என்படுபவையும், சில சாமியார்களின் மடங்களுமே மிக பெரும் கருப்புபண புதையல்கள். சில சலுகைகள் என இருக்கும் வோட்டைகளை பயன்படுத்தி எல்லா விதமான கருப்புபணமும் அங்குதான் குவிக்கபடுகின்றது

வீரமணி அறக்கட்டளை முதல் ஜக்கி சாமி 
மடம் வரைக்கும் குவிந்திருக்கும் பணங்கள் கொஞ்சமல்ல‌

அவர்களுக்கு வருமான வரியுமில்லை, குவிக்கும் சொத்துக்கு கணக்குமில்லை

அறக்கட்டளை அல்லது மடம் பெயரில் எதுவும் செய்யலாம், எந்த பணமோசடியும் செய்யலாம் என்பது இந்நாட்டின் சாபக்கேடு

ஆனால் இந்த அரசு சசிகலா குடும்பம் மீது மட்டும்தான் பாயும், சாமியார்கள் மீது பாயவா செய்யும்?