சசிகலா உறவினர் வீடுகள், மிடாஸ் ஆலையில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை : செய்தி

சசிகலா உறவினர் வீடுகள், மிடாஸ் ஆலையில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை : செய்தி

சாலையில் லைசென்ஸ் சரிபார்க்கும் காவல்துறை சோதனை போல இந்த சசிகலா குடும்பத்து மீதான சோதனை வழக்கமாகிவிட்டது

கடற்கரையில் அலையினை கடந்து போகும் மீணவன் போல இந்த ரெய்டுகளை அசால்ட்டாக கடந்து செல்கின்றது சசிகலா கோஷ்டி

கிட்டதட்ட 300 இடங்களுக்கு மேல் சோதனை செய்தாயிற்று ஒரு தடயமும் உறுதியாக இல்லை, ஒரு சோதனையிலும் யாரையும் கைது செய்யும் அளவோ, முடக்கும் அளவோ ஒன்றுமே இல்லை

“ரெய்டுக்கா வந்திருக்ககீக‌, நினச்சோம் இருந்து சாப்பிட்டு போங்க, உங்கள பாக்க பாவமா இருக்கு, எத்தனை வாட்டித்தான் அலைவீக..” என்று அதிகாரிகளை பார்த்து சொல்லும் அளவுக்கு சசிகலா குடும்பம் பக்குவபட்டு விட்டுது.

ஒரு விஷயம் புரிகின்றது

அரசுதுறைக்கு தகவல் கொடுக்க உளவுதுறையினர் இருப்பார்கள், மிக மிக தவறான தகவல்களை கொடுத்து அத்துறையினை குழப்பி வருகின்றார்கள், சொல்லமுடியாது எல்லா இடங்களிலும் வியாபித்துவிட்ட சசிகலா குடும்பம் உளவுதுறையிலும் ஊடுருவியிருக்கலாம்

இல்லாவிட்டால் பெரும் மூளைகளை கொண்ட அத்துறை இப்படி தடுமாறாது.

நிச்சயம் இந்த ரெய்டிலும் ஒன்றும் உருப்படியாக சிக்காது, தினகரன் மறுபடியும் எங்கள் கை சுத்தம் என வெற்றி சிரிப்பு சிரிப்பார்

வருமான வரிதுறை மிக மிக தவறான கைகளால் வழிநடத்தபடுகின்றது,

விரைவில் “சார் வங்க கடலுக்கு அடியில் பெட்டியில் தங்கமாய் அடைத்து வைத்திருக்கின்றார்கள், மோடி அனுமதியொடு ஒரு நீர்முழ்கியில் சென்றால் தூக்கிவிடலாம்” என தகவல் வந்து, இந்த வருமான வரிதுறை நீர்முழ்கி கப்பலில் ஏறி கடலுக்குள் மூழ்கும் நிலை வரும்

அன்று இந்த உண்மை அவர்களுக்கு புரியும்

அதுவரை இப்படி வருமானவரிதுறை அலையவேண்டியதுதான், துரும்பு கூட கிடைக்காது.