சசிகலா குடும்பத்தில் நடராஜனுக்கு பின் சர்ச்சைகள் வெடிக்கின்றன
சசிகலா குடும்பத்தில் நடராஜனுக்கு பின் சர்ச்சைகள் வெடிக்கின்றன என்கின்றன செய்திகள்
அதாவது மன்னார்குடி குடும்பம் என சசிகலா, தினகரன், திவாகரன், இளவரசி, என இரு டஜன் நபர்களை தமிழகம் அறியும், சொத்து குவித்து சுருட்டினார்கள் என கைக்காட்டபடுவது இவர்கள்தான்
ஆனால் ஜெகஜால கில்லாடி நடராஜனின் குடும்பமும் பெரிது, அவர் பெயரிலும் ஏகபட்ட சொத்துக்கள் வாங்கிபோடபட்டது
சசிகலா குடும்பம் எனும் நெல்லுக்கு பாய்ந்த நீர் நடராஜன் குடும்பம் எனும் புல்லுக்கும் பாய்ந்தது, அல்லது தேனெடுத்த நடராஜன் புறங்கையினை நக்கினார்
இதில் நடராஜன் சொத்த்துகளும் அவரின் பினாமியான உடன்பிறந்தவர்களின் சொத்துக்களும் சசிகலாவிற்கு வரவேண்டும் என்பது மன்னார் குடி லாபி
இதோ பாருங்கள் சசிகலா தம்பதியருக்கு குழந்தையில்லை, சொத்து சுருட்டலில் நடராஜன் தான் வழிகாட்டி. ஜெயா முதுகுபின்னால் பதுங்கியது தவிர சசிகலா ஒன்றும் செய்யவில்லை அதனால் நடராஜன் வழி சொத்து எங்களுக்கு, சசிகலா வழி சொத்து உங்களுக்கு என பங்கு பிரித்தது நடராஜன் குடும்பம்
தியாக தலைவி இப்பொழுதும் சிறையில் இருப்பவர், அவர் செய்த தியாகம் அப்படி, அதனால் அவருக்கே முழு சொத்தும் என மன்னார்குடி மல்லுகட்டுகின்றது
5 வயதில் இருந்தே வியர்வையில் நடராசனும் 10 வயதில் இருந்தே தலையில் விற்கு சுமந்து சசிகலா உழைத்த சொத்து அல்லவா? அதனால் போட்டி வலுக்கின்றது
சசிகலா தரப்பிற்கு பெரும் ஆதாரம் இல்லா நிலையில் பினாமி சொத்தை மீட்க முடியாமல் பரோலை ரத்து செய்யும் முடிவில் இருக்கின்றாராம் சசிகலா
காலம் எவ்வளவு விசித்திர ஆட்டங்களை எல்லாம் ஆடுகின்றது, கொள்ளையடிக்கும் வரை ஒற்றுமையாய் இருந்த குடும்பம் பங்கு வைக்கும்பொழுது எப்படி எல்லாம் அடித்துகொள்கின்றது
இப்படி எல்லாம் அவர்களின் ஏராளமான சொத்துகணக்கும் சண்டையும் பற்றிய செய்தி வரும்பொழுதெல்லாம் தலைவன் எம்.ஆர் ராதா கேட்ட அந்த கேள்விதான் நினைவுக்கு வரும்
“டேய் ராமசந்திரா, உனக்கெல்லாம் எதுக்கு அரசியல்?”
இந்த சொத்து சிக்கலால் சசிகலா மனமுடைந்து சிறை செல்ல தயாராகிவிட்டார்கள் என்கின்றார்கள்
இனி லஞ்சம் கொடுத்து 15 நாள் பரோலை 5 நாட்களாக மாற்றி சிறைசென்றார் சசிகலா என சர்ச்சை வரலாம்