சசிகலா குடும்பம் தப்புவது சிரமம் என செய்திகள்
இந்த பச்சமண்ணுக்கு இன்று பிறந்தநாளாம்
ஆனால் நேற்றே பரிசு கொடுத்துவிட்டார்களாம்..
1990 95ல் சசிகலா பெரும் வில்லங்கத்தில் மாட்ட காரணமான விஷயம் அந்த வளர்ப்பு மகன் திருமணம்
அதில் வந்ததுதான் முதல் சிக்கல், அதனை தொடர்ந்து வழக்கு எல்லாம் வந்து, ஜெயாவும் தன் வளர்ப்பு மகனை போ சனியனே என விரட்டி, வழக்கில் தப்பமுடியாமல் இன்று சசிகலா உள்ளேயும், ஜெயா குற்றவாளியும் ஆனது எல்லோருகும் தெரியும்
அந்த வழக்கு நடந்துகொண்டிருக்கும் பொழுது, அதாவது 18 வருடம் இழுக்கும் பொழுது, குன்ஹாவினை சந்திக்கும் முன்னர் சசிகலா செய்த அடுத்த தவறு ஜாஸ் சினிமாவினை வாங்கியது
கடந்த அதிமுக ஆட்சியில்தான் அது வாங்கபட்டது, லீசுக்கு எடுத்தோம் என வெளியில் சொன்னாலும் உண்மையில் அது சசிகலா சொத்து
அது சர்ச்சையாகும் பொழுதே சசிகலா இன்னும் திருந்தவில்லை, இதனால் ஜெயா மிகபெரும் சிக்கலுக்கு உள்ளாவார் என பல குரல்கள் வந்தன.
அதுவும் எங்கோ பிசினஸ் பார்த்துகொண்டிருந்த விவேக் என்பவரை நிர்வாகியாக வைத்து வாங்கி என்னவெல்லாமோ செய்தார் சசிகலா
அதுவும் ஐநாக்ஸ் திரையரங்குகளை வாங்கி குவித்துகொண்டே செல்வது திரையுலகத்தை கட்டுபடுத்தும் முயற்சி என்ற குற்றசாட்டு அன்றே இருந்தது, ஆக எல்லோரும் போட்டு சாத்தியிருக்கின்றார்கள்
விவேக் வெளிநாட்டில் தொழில் செய்திருக்கலாம், ஆனால் இந்திய யதார்த்தம் அதுவல்ல, அவரை போல ஆயிரம் விவேகமானவர்கள் உள்ள நாடு இது, விடுவார்களா?
இப்போது உள்ள சிக்கல்களில் மிகபெரிய சிக்கலாக உருவெடுத்திருப்பது ஜாஸ் சினிமா சொத்துதான்
இதில் சசிகலா குடும்பம் தப்புவது சிரமம் என செய்திகள் வருகின்றன.
ஒருமுறை பட்டும் கொஞ்சமும் திருந்தாமல் செய்த தவறில் மறுபடியும் சிக்கியிருக்கின்றது மன்னார்குடி குடும்பம்