சசிகலா கும்பல் மிரட்டல் குறித்து பன்னீர் பரபரப்பு பேச்சு
என் இடத்தில் வேறு யார் இருந்தாலும் தற்கொலை செய்திருப்பார்கள் : சசிகலா கும்பல் மிரட்டல் குறித்து பன்னீர் பரபரப்பு பேச்சு
தற்கொலை செய்யும் அளவு என்ன மிரட்டினார்கள்? சொத்து கணக்கினை வெளியிடுவோம் என மிரட்டினார்களா? அப்படி எல்லாம் செய்யும் கும்பல் அல்ல அது. சொத்து அவர்களுக்கு விஷயமே அல்ல
ஆக சசிகலா கும்பல் என்ன சொல்லியிருக்கலாம், “பதவியினை விட்டு போய்விடு” என சொல்லியிருக்கலாம், “விரட்டினால் நான் செத்துவிடுவேன்” என பன்னீர் மிரட்டியிருக்கலாம்
இது நடந்திருக்க கூடியது
எனவே இப்பொழுது பன்னீர் செல்வம் சொல்லவருவது என்னவென்றால், என்னை யாராவது துணைமுதல்வர் பதவியிலிருந்து விரட்டினாலோ அல்லது கட்சி பொறுப்பில் இருந்து விரட்டினாலோ தற்கொலை செய்வேன் என மிரட்டுகின்றாரோ என்னமோ?
ஆக பழனிச்சாமி கோஷ்டியும், மோடி கோஷ்டியும் மிக கவனமாக இருப்பது நல்லது, தற்கொலைக்கு தூண்டிய வழக்கு பாயலாம் ஜாக்கிரதை.
தமிழ் மொழிக்கு ஆதரவான பேசிய மோடியின் கூற்று பெருமிதம் தருகிறது – கவிஞர் வைரமுத்து
அதானே, இவர் ஓடிவந்து அப்படி சொல்லாவிட்டால் தான் ஆச்சரியம், ஆனாலும் ஆண்டாள் கொடுத்த அடி இன்னும் தெளியவில்லை போல