சசிகலா குவித்த சொத்துக்களை மீட்கின்றார்களாம்

இந்த ரைடில் நடக்கும் விஷயம் என்ன? சசிகலா குவித்த சொத்துக்களை மீட்கின்றார்களாம்

சசிகலா யார் மூலமாக குவித்தார்? சாட்சாத் ஜெயலலிதா மூலமாக, எதற்காக நிச்சயம் ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்பதற்காக‌

ஜெயா மறைந்து 1 வருடம்தான் ஆகின்றது, ஒரு வருடத்திற்குள்ளா இவ்வளவு சொத்துக்கள் வந்தன?

ஆக இவை எல்லாம் ஜெயாவின் கண்ணசைவில் குவிக்கபட்ட சொத்துக்கள், இல்லாவிட்டால் இவ்வளவு பணங்களை ரகசியமாக குவிக்க அவசியமே இல்லை. அப்படி குவிக்கபட்ட சொத்துக்களில் கொஞ்சம் சசிகலா குடும்பத்திற்கு சென்றிருக்கலாம்

நெல்லுக்கு பாய்ந்தது புல்லுக்கும் பாய்ந்திருக்கின்றது

தமிழகத்தை ஆண்ட ஜெயாவிற்கு இந்த 190 இடங்களும் தெரியாமலா இருந்திருக்கும்?

ஜெயா இருக்கும் வரை இம்மாதிரி ரைடு நடத்தினார்களா? இல்லை அவர் இருந்தால் நடத்தியிருப்பார்களா? சத்தியமாக இல்லை

ஆக பார்பணிய ஜெயலலிதா குவித்த சொத்தை, சசிகலாவின் சொத்து என சொல்லி ஜெயலலிதா பெயரை அமைதியாக்குகின்றார்கள் அல்லவா?

இதன் பெயர்தான் ஆரிய சூது …

நல்லவர்கள் ஜெயா பெயரை அல்லவா முன்னிறுத்த வேண்டும், சசிகலா அவருக்கு ஒரு பினாமி அல்லவா? ஆனால் ஜெயா பெயரை முன்னிறுத்த‌ நிறுத்தமாட்டார்கள்

ஏன் என்றால் அப்படித்தான்.

சசிகலா கும்பலால் மட்டும் இதனை வாய்விட்டு சொல்ல முடியுமா? இது ஜெயாவின் அனுமதியோடு நடந்தது என சொன்னால் சட்டம் சசிகலாவினை நெருங்க முடியும்?

ஆனால் பரிதாபம் சசிகலா கும்பலாலும் அப்படி சொல்லிவிட முடியாது.

இப்படி சொல்லவேண்டிய தைரியமும் பொறுப்பும் எதிர்கட்சியான திமுகவிற்கு இருக்கின்றது, ஆனால் சொல்லமாட்டார்கள்

காரணம் அதிமுக அழிவதை திமுக விரும்பாது

இதெல்லாம் இங்குள்ள அரசியல்..


நாஞ்சில் சம்பத் என்பவர் சத்தமே இல்லை

ரெய்டில் அவரின் இனோவா காரினை தூக்கி சென்றிருக்கலாம், அது அல்லாது மனிதர் அமைதி ஆக மாட்டார்

இப்பொழுது எங்கோ முல்லைக்கு தேர்கொடுத்த பாரி போல மனிதர் கெத்தாக நடந்துகொண்டிருக்கலாம்