சசிகலா சொத்து பூராவும் கையகடுபத்தபட்டால்…

இந்த ரெய்டுகளில் சசிகலா சொத்து பூராவும் கையகடுபத்தபட்டாலும், வெறும் கையோடு அவர் சிறையில் இருந்து வந்தாலும் , ஒரே ஒரு அறிவிப்பில் அவரால் கோடி கோடியாக குவிக்க இயலும்

“நான் பார்த்த அரசியலும் அதன் இன்னொரு பக்கமும்” என்றொரு நூல் எழுதபோகின்றேன் என மட்டும் அறிவிக்கட்டும், எத்தனை பிரமுகர்கள்? எத்தனை தொழிலபதிகள்? எத்தனை அரசியல்வாதிகள் அவர் காலடியில் கோடிகளை கொட்டி விழுந்து கிடப்பார்கள் தெரியுமா?

அவர் வாய்திறக்க கூடாது என்பதற்காக பல்லாயிரம் கோடிகளை கொட்டி கொடுக்க ஏராளமானோர் தயார்.

அத்தனை கோடீஸ்வரர்கள் ஜாதகமும் அவரிடம் இருக்கின்றது.

30 வருடமாக அவருக்கு தெரியா அரசியல் நகர்வுகள் இல்லை. அவர் பார்வைக்கு வராத விஷயங்கள் இல்லை

அவர் அறியாத ரகசியம் இல்லை

அத்தனை மர்மங்களுக்கும் , விடை தெரியா பல கேள்விகளுக்கும் விடை அந்த சசிகலா

அவர் மட்டும் ஒரு சுயசரிதை எழுதினால் நன்றாகத்தான் இருக்கும், ஆனால் எழுதுவாரா என்பது இனி நடக்கபோகும் நடவடிக்கைகளை பொறுத்தது.

அவர் அப்படி ஒரு அறிவிப்பினை வெளியிட்டாலே போதும், பெரும் பரபரப்பு தொற்றிகொள்ளும்