சசிகலா நிலமையும் அப்படித்தான் உள்ளது….
“தோல்வி மனிதனுக்கு வெறியூட்டும்
வெறியில் மதிமாறும்
எதிரி அது சமயம் இடம் கண்டு அடிப்பான்
வெறி மேலும் ஓங்கும்
வெறியில் நெறிகெட்டு, அறம் கெட்டு,
தடம் மாறி படுகுழியில் வீழ்வான்
..இல்லை எதிரி விழ வைப்பான்
இந்த அநீதியில் கை தேர்ந்தவன் சகுனி..”
கர்ணன் படத்தில் என்.டி ராமராவ் இப்படி சிவாஜி கணேசனுக்கு போதித்துகொண்டிருக்கின்றார்
சசிகலா நிலமையும் அப்படித்தான் உள்ளது.
சசிகலாவும் அப்படித்தான் தோல்வியால் எழுந்த வெறியியில் மதி கெட்டு, தடம் மாறி படுகுழியில் விழுந்துகொண்டிருக்கின்றார், எந்த சகுனி சொல்லிகொடுக்கின்றானோ, அல்லது என்ன மாய விளையாட்டு நடக்கின்றதோ
அல்லது அவரின் சொந்த சகுனி புத்தியோ தெரியாது
ஆனால் ஏதாவது பரமாத்மா அவருக்கு போதித்தால் நல்லது.
மூன்றாம் முறை கூவத்தூர் சென்றார் சசிகலா
ஒரு தரம், இரண்டாம் தரம், மூன்றாம் தரம் என ஏலம் முடிக்க மூன்றாம் முறை சென்றிருப்பாரோ?
ஐபில் வீரர்களை விட அதிக தொகைக்கு ஏலம் போனவர்கள் அந்த ரிசார்ட் எம் எல் ஏக்களாகத்தான் இருப்பார்கள்
“ஆடாம ஜெயிச்சோமடா..” என அவர்கள் ஆடிகொண்டிருக்கலாம்