சசிகலா நீதிபதி முன் ஆஜராகவில்லை
தமிழகத்தில் எதெல்லாமோ விவாதிக்கபடுகின்றது, ஆனால் ஒரு விஷயத்தை எந்த ஊடகமும் எழுதவில்லை
ஜெயலலிதா என்றொருவர் முன்பு முதல்வராக இருந்தார் பலருக்கு நினைவிருக்கலாம், அவர் அப்பல்லோவில் சிலமாதம் இருந்து இறந்தும் போனார்
அது மர்ம மரணம் என அவரை அடக்கம் செய்தபின்புதான் பலர் சொன்னார்கள், அதுவும் பதவி இழந்தபின்புதான் பன்னீர் செல்வம் என்பவருக்கும் சந்தேகம் வந்தது, இவ்வளவிற்கும் ஜெயா அப்பல்லோவில் இருந்தபோது அவர்தான் முதல்வர்
அந்த ஜெயாவின் மரணத்தை விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி என்பவரை நியமித்தார்கள், அவரும் ஒவ்வொருவராக விசாரித்தார்
விசாரிக்க வேண்டியது சசிகலா எனும் ஒரே நபரைத்தான் என்றாலும் ஆறுமுகசாமி எல்லோரையும் விசாரித்து சசிகலா பக்கம் வந்தார்
அங்கே தான் வந்தது சிக்கல்
சசிகலா இப்பொழுது சிறையில் தியாக வாழ்வு வாழ்பவர் என்றாலும் ஆறுமுக சாமியின் பொறுமையினை எப்படி எல்லாம் சோதிக்கமுடியுமோ அப்படி எல்லாம் சோதிக்கின்றார்
வழக்கையே 18 வருடம் இழுத்த கும்பல் அவ்வளவு சீக்கிரம் வருமா
தலைவலி, சசிகலா பல் துலக்குகின்றார், சசிகலா ஊதுபத்தி உருட்டுகின்றார் என சில நாட்கள், சசிகலா அறையினை பெருக்குகின்றார், துணி துவைக்கின்றார் என சில நாட்களை கடத்தினார்கள்
பின் ஆறுமுகசாமி சீற, மவுனவிரதம் என சிலவாரங்களை கடத்தினார் சசிகலா
இன்னும் அவர் நீதிபதி முன் ஆஜராகவில்லை
கவனியுங்கள், மும்பை சிறையின் இந்திராணி ஒரே நிமிடத்தில் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக வாக்குமூலம் கொடுக்க முடிகின்றது
ஆனால் சசிகலா வாயிலிருந்து ஒரு வார்த்தையினை ஆறுமுகசாமியால் வாங்கமுடியவில்லை
ஏன் என்றால் இதுதான் அரசியல், பல மர்மங்களை உள்ளடகிய அரசியல்
சிறையில் இருந்தாலும் சசிகலா பலரை மிரட்டிகொண்டே இருக்கின்றார் என்பதுதான் உண்மை
நிச்சயம் சசிகலா பேசத்தான் நினைப்பார், ஆனால் அவர் வாய்திறந்தால் யாருக்கோ ஆபத்து என்பதால் அவரை பேச சிலர் விடவில்லை என்பது மட்டும் புரிகின்றது
ஏராளமான மர்மங்களின் முடிச்சாகாக் சசிகலா பெங்களூர் சிறையில் நடமாடிகொண்டிருக்கின்றார் , நிச்சயம் அவருக்கும் மறைமுக அச்சுறுத்தல் இருக்கலாம்.
இதுபற்றி யாரவது பேசுவார்களா என்றால் இல்லை, ஏனென்றால் ஜெயாவின் உண்மை விசுவாசி என ஒருவர் கூட இல்லை