சசிகலா புஷ்பா தினகரன் கோஷ்டியில்
சசிகலா புஷ்பா அதிமுகவில் நிகழ்த்திய சலசலப்புகள் கொஞ்சமல்ல, ஜெயலலிதா என்னை அடித்தார் என அவர் கண்ணீர்விட்ட இரு நாட்களில் மருத்துவமனைக்கு சென்ற ஜெயலலிதா அதன் பின் வரவே இல்லை
கட்சிக்காரர்கள் ஜெயாவின் செருப்பை தாண்டி காலை கூட பார்க்க பயபட்ட நேரத்தில் , மிக தைரியமாக ஜெயலலிதாவினை எதிர்த்தவர் புஷ்பா
ராஜ்யசபாவிலே எனக்கு பாதுகாப்பில்லை, என் கட்சி தலைவி என்னை ஏதும் செய்துவிடுவார் என அழுத எம்பி அவர். அகில உலகமே அதை கண்டது. இந்தியா அதிர்ந்தது
ஜெயா நலமோடு இருந்தால் சசிகலா புஷ்பா என்ன ஆகியிருப்பாரோ ஆனால் விதி அப்பல்லோ வடிவில் புஷ்பாவினை காப்பாற்றியது
அத்தோடு விட்டாரா? அதிமுக உலகமே சசிகலாவின் ஈடு இணையற்ற தியாகத்தை எண்ணி அழுத நேரத்தில் அவர் வேலைக்காரி என சொல்லி அதிர்ச்சி கொடுத்தவர் புஷ்பா
பி.எச் பாண்டியனோடு சேர்ந்து ஜெயாசாவில் மர்மம் உள்ளது, கொலை செய்யபட்டிருக்கலாம் என்றேல்லாம் குதித்தவர் இதே புஷ்பா
அப்பொழுதும் யாராவது அம்மா புஷ்பா, “உனக்கு பாதுகாப்பில்லை என்றுதானே ராஜ்யசபாவில் அழுதாய், இன்று உன்னை மிரட்டியரே இல்லையே எப்படி?” என கேட்கவில்லை
அதன் பின் பன்னீர், பழனிச்சாமி காவடி தூக்கி கரகம் ஆடி தீமிதி திருவிழாவினை முடித்து கறிசோறு திங்க சென்றபொழுது சசிகலா புஷ்பாவினை காணவில்லை
ஆனால் திடீரென ஆர்.கே நகரில் வென்ற தினகரனுக்கு வாழ்த்து தெரிவித்தார், இப்பொழுது தினகரன் அணியில் இருந்து கட்சி கொடி எல்லாம் வெளியிடுகின்றார்
ஜெயா என்னை அடித்தார் என்றவர்தான் ஜெயாபடத்துடன் கொடி ஏற்ற வந்திருக்கின்றார்
சசிகலா வேலைக்காரி என்றவர்தான் வேலைக்காரியின் வாரிசான தினகரனை தலைவராக ஏற்றுகொண்டிருக்கின்றார்
அரசியல் ஒரு சாக்கடை என்பதில் இப்பொழுது எந்த குழப்பமுமில்லை, அதில் புழுக்கள் நெளியத்தான் செய்யும்
இதை எல்லாம் சொன்னால் திருச்சி சிவாவினை போல நம்மை முகத்தில் குத்தத்தான் செய்வார் சந்தேகமில்லை
ஆனால் நடந்த விஷயத்தைத்தான் சொன்னோம்,
இப்பொழுது சசிகலா புஷ்பாவினை இப்படி கேள்வி கேட்க வேண்டியவர் ராஜ்யசபா சபாநாயகர்
“ஏம்மா நீயா அழுத, என்னை கொல்லபோறாங்க பாதுகாப்பில்லண்ண நாடே ஒரு எம்பிக்கு பாதுகாப்பு இல்லையாண்ணு கேட்டுச்சி
இப்போ நீயா அவங்க கூட நின்னுட்டு சிரிக்கிற, எங்கள பார்த்தால் கேணைப்பயலுக மாதிரி இருக்கா, ராஜினாமா பண்ணிட்டு கிளம்பும்மா”