சசிகலா மதுவிலக்கினை செய்வாரா?
சசிகலா மதுவிலக்கினை செய்வாரா? என்றொரு பேச்சு ஓடிகொண்டிருக்கின்றது
தனக்கு எழுந்திருக்கும் பெரும் எதிர்ப்பினை அமைதியாக்க அவர் சில அதிரடி குளிர்விப்பு நடவடிக்கைகளை எடுத்தே தீரவேண்டும் என்பது அவர் விதி
அப்படி அவர் மதுகடைகளை மூடவும் வாய்ப்பு உண்டு
ஆனால் நாட்டில் கொஞ்சமா மது வாடிக்கையாளர் இருக்கின்றார்கள், மூடிய இரு வாரத்தில் பெரும் பிரளயமாக அவர்கள் வெடிப்பார்கள்.
மதுவிற்கு பழகிவிட்டவர்கள், திடீரென கடை அடைக்கபட்டால் வேறுவிதமான சிக்கலை எதிர்கொள்வார்கள், அது பெரும் சமூக சிக்கலாக மாறும்.
ஆக மதுகடைகளை முற்றிலுமாக மூடுதல் என்பது இன்றைய யதார்த்ததிற்கு முரணானது, அது நிச்சயம் பல பின் விளைவுகளை அரசுக்கு ஏற்படுத்தும்
படிபடியாக குறைத்து ஒரு கட்டுப்பாடுக்குள் கொண்டுவரலாமே ஒழிய முற்றிலுமாக நிறுத்துவது என்பது மிக கடினமான முடிவு.
ஆனால் சசிகலா மதுகடைகளை மூடினால் ஒழிய தமிழகத்தில் முதல்வராக இருக்க முடியாது.
முதல்வர் எனும் முள்கிரீடத்தை சுமக்கபோகும் சசிகலா எப்படி இந்த நெருப்பாறினை கடக்கபோவாரோ தெரியாது.
ஒருவேளை மதுகடைகளை மூடிவிட்டு கள்ளுகடைக்கு அரசு பச்சைகொடி காட்டுமோ?
அப்படி காட்டிவிட்டால் அங்கிள் சைமன் பனையேறி கோலத்தில் மரமேறி கள் இறக்குவார். தமிழன் பனை தமிழருக்கே, தமிழன் தென்னை தமிழருக்கே என்ற கோஷம் முழங்க அவர்கள் மரமேறலாம்.
ஒவ்வொருவர் முதுகிலும் தமிழண்டா எனும் பட்டை தொங்கலாம்..
அங்கிள் சைமன் சாமுண்டி சரத்குமாராக பனைஏறும் கோலத்தினை இந்த அரசு காட்ட போகின்றது
எப்படியோ தமிழர்களுக்கு தமிழ் கள் கிடைக்க வாய்ப்பு இருக்கின்றது