சட்டசபையில் நடந்தது என்ன? அறிக்கை கேட்கின்றார் ஆளுநர்

சட்டசபையில் நடந்தது என்ன? அறிக்கை கேட்கின்றார் ஆளுநர்

எப்படியாவது ஒருவரை பதவியில் வைத்துவிட்டு பறந்துவிடலாம் என நினைத்து செயல்பட்ட ஆளுநர் ஏன் அறிக்கை கேட்கின்றார்?

அறிக்கை கேட்கின்றார் என்றால் ஆளுநர் பதறுகின்றார் என்றே பொருள்

ஏன் பதறுகின்றார்? பதற வைப்பது திமுக‌

ச‌ட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை 2 முறை முன்மொழிந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இது சட்டப்படி தவறாகும், அவைக் காவலர்கள் போர்வையில் காவல்துறை அதிகாரிகளை உள்ளே அனுப்பியுள்ளனர். முதல்வரே இதைச் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இந்த பாயிண்டுகள் சாதாரணம் அல்ல, திமுக கோர்ட்டுக்கு சென்றால் முதலவருக்கும், ஆளுநருக்கும் பெரும் நெருக்கடி ஏற்படும்

அதாவது சட்டத்தை மீறி அரசும், சபாநாயகரும் செயல்பட்டிருப்பதை திமுக சுட்டிகாட்டி நிற்கின்றது

சட்டசபையின் ஏன் பிரச்சினை வந்தது என்பதனை இந்த குற்றசாட்டுகளிலே சாமர்த்தியமாக சொல்லாமல் சொல்கின்றது திமுக‌

தனக்கே நெருக்கடி வந்திருப்பதை அறிந்த ஆளுநர் அறிக்கை கேட்டிருக்கின்றார்

திருப்பங்களை ஓரளவு எதிர்பார்க்கலாம்…