சத்திரபதி சிவாஜி : 44

சத்திரபதி சிவாஜி : 44

// அக்கா, அவனுக்கு மலை எலி என்ற பெயர் பொருத்தமானது, அவன் சாதாரண எலி அல்ல, எப்படியெல்லாம் குடைகின்றான் தெரியுமா? //

// இங்கு ஈரானியர்கள், போர்ச்சுகீசியர்கள் என யார்யாரோ வந்து அரசு அமைத்து, எங்கிருந்தோ வந்த‌ உங்களுக்கு கட்டுபட்டு நிற்கும்பொழுது இந்த மண்ணின் மகனாகிய நான் ஒரு இந்து அரசனாக சிறிய ராஜ்ஜிய மன்னனாக இருந்துவிட்டால் என்ன பிரச்சினை //

// அங்கு மதம் பிரச்சினையே இல்லை பெரியவரே, அங்கு இஸ்லாமிய மன்னன் அல்லாமல் பவுத்த மன்னன் சமண மன்னன் ஜெராஸ்ட்ரிய மன்னன் இருந்தாலும் நான் இந்நாட்டு கலாச்சார வணக்கத்தைதான் தெரிவித்திருப்பேன் //

// நான் இஸ்லாமுக்கோ இஸ்லாமியருக்கோ எதிரானவன் அல்ல, இந்துவாக பிறந்ததால் அம்மதத்தை நேசிக்கும் எளியவன் ஆனால் என் நாட்டில் எந்த மசூதியினையும்நான் இடிக்கவில்லை, எந்த இஸ்லாமியினையும் நான் மதத்துக்காக கொல்லவுமில்லை, என் படையிலே இஸ்லாமியர்கள் உண்டு //

//எங்கிருந்தோ வந்து ஆக்ரா கோட்டையில் அவுரங்கசீப்பையே எதிர்த்துவிட்டு, இப்பொழுது எந்த ஷாயிஸ்ட்கானை வெட்டி அவன் மகனை கொன்றானோ அவன் தங்கை வீட்டுக்கே வர எவ்வளவு தைரியமும் துணிவும் இந்த சிவாஜிக்கு இருக்க வேண்டும்//

//சிவாஜி நீங்கள் என்னை நம்பி காபூல் வரலாம், மாறாக இதனை மறுத்தால் இக்கோட்டையினை விட்டு வெளிவரவும் முடியாது அதே நேரம் இதனை காரணம் காட்டியே உங்களை சிறையில் அடைக்கலாம் இல்லை கொன்றும் போடலாம் //

// நம் அடிதளம் இந்துராஜ்ஜ்யம் அமைப்பதில் இருக்கின்றது, நாம் நம் இந்து ராஜ்ஜியத்துக்காக நம் பக்கம் எவ்வளவும் போராடலாம் சமரங்களை செய்யலாம் //

//அந்த பெரும் பொன்னை அவன் பார்த்த வகையிலே அவன் கண்களிலே இருந்த பேராசையினை உணர்ந்து கொண்டான் சிவாஜி//

//நான் சக்கரவர்த்தி அவுரங்கசீப்பின் மகள் நிசா, செப் உன் நிசா, உங்களைத்தான் //

//அக்கா அவன் அடிபட்ட புலி, அவன் உள்மனம் நிச்சயம் கொதித்து கொண்டிருக்கும். இப்பொழுது அவனை தெற்கே அனுப்பினால் அவன் நிச்சயம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவான்

அவனை அங்கேவிட இது சரியான தருணம் அல்ல, ஜெய்சிங் முழு தக்காணத்தையும் வென்று அமைதி திரும்பட்டும் அப்பொழுது இவனை அனுப்பலாம், இப்பொழுது அனுப்பினால் அவன் இன்னும் குழப்புவான் போர் குழம்பும்//

// அவன் இங்கு இருக்கபிடிக்கவில்லை என்றால் அலகாபாத் கோட்டைக்கு அனுப்புவேன் அங்கு நம் சிறைகாவலன் பஹ்துர் கான் அவனை நன்கு கவனித்து கொள்வான்” என வஞ்சக சிரிப்பொன்றினை சிரித்தான்//

அந்த திட்டத்தை வழக்கம் போல் மனதோடு வஞ்சகமாக திட்டமிட்ட அவுரங்கசீப் இரு நாட்களில் அதாவது மே மாதம் 19 வாக்கில் அந்த விஷயத்தை ஒரு உத்தரவாக ராம்சிங்கிற்கு இட்டான்

அவுரங்கசீப் அழைத்ததை அடுத்து அவனை காண சென்றான் ராம்சிங், “ராம்சிங் இன்னும் சில தினங்களில் ஆப்கான் நோக்கி நீயும் சிவாஜியும் படைக்கு தலமை தாங்கி செல்லவேண்டும், ராட் அண்டரஸ் கானும் உங்களோடு வருவான், அங்கு நடக்கும் கலவரங்களை அடக்கி நம் ஆட்சியினை இன்னும் விரிவாக்க வேண்டியது உனக்கு இடபட்டிருக்கும் கட்டளை

விரைவில் இதற்கான உத்தரவும் நிதி மற்றும் படை ஏற்பாடும் உனக்கு அறிவிக்கபடும்” என்றான்

ராம்சிங் இதனை எதிர்பார்க்கவில்லை ஆனால் தனக்கும் சிவாஜிக்கும் ஒரே இடத்தில் வேலை என்பது அவனுக்கு ஒரு திருப்தியாய் இருந்தது, செய்தியினை சிவாஜிக்கு சொல்ல சென்றான்

சிவாஜி விஷயத்தை கேட்டதும் அதிர்ந்தான், கொஞ்சம் யோத்த‌ பின் புன்னகைக்க சொன்னான் “ராம்சிங் என்னை விரைந்து முடிக்க உங்கள் அரசன் திட்டமிட்டுவிட்டான், நான் இந்த போரில் கலந்து கொள்ள போவதில்லை” என்றான்

ராம்சிங்குக்கு தூக்கிவாரி போட்டது

இப்பொழுது சிவாஜி மொகலாயத்துக்கு கட்டுபட்ட தளபதி, அப்படிபட்ட தளபதி சக்கரவர்த்தி கைகாட்டும் இடத்துக்கு பாய வேண்டும், சிவாஜி அதனை மறுத்தால் அவனை கொல்லவும் சக்கரவர்த்திக்கு உரிமை உண்டு.

வெட்டாத வாளும், பாயாத குதிரையும், அடங்கா தளபதியும் மன்னனுக்கு ஆகாது என்பது அரசபாடம்

நிலமையினை கொஞ்சம் எடுத்து சொன்னான் ராம்சிங், “சிவாஜி கொஞ்சம் யோசியுங்கள், இங்கு நான் உங்களோடு வருவேன், என் சேனை முழுக்க வரும். அந்த ராட் அண்டர்ஸ் கான் என்பவன் உங்களை அணுகாதவாரு அவன் நம் பக்கமே வராதவாறு நான் பாதுகாப்பு தருகின்றேன்” என சாத்தியங்களை சொன்னான் ராம் சிங்

இதனை தன் பிரதானிகளுடன் ஆலோசித்து சொல்வதாக ராம்சிங்கிடம் சொல்லி அனுப்பினான் சிவாஜி , ராம்சிங் விடைபெற்றான்

சிவாஜி தன் பிரதானிகளை வரவழைத்தான். ரகுநாத் பந்த், திரையம்பக் பந்த், ஜீவ மகேலா, பகர்ஜி நாயக் என எல்லோரும் வந்திருந்தார்கள்

சிவாஜி தொடர்ந்தான் “நாம் மொகலாயருக்கு கட்டுபட்ட தளபதி என்றாலும் நம் அடிதளம் இந்துராஜ்ஜ்யம் அமைப்பதில் இருக்கின்றது, நாம் நம் இந்து ராஜ்ஜியத்துக்காக நம் பக்கம் எவ்வளவும் போராடலாம் சமரங்களை செய்யலாம்

அதை விடுத்து அவுரங்கசீப் சொன்னதற்காக நமக்கு சம்பந்தமில்லா ஆப்கன் எல்லைக்கு சென்று சண்டையிட்டால் நம் கொள்கைக்கு அது முரணானது, அதுவும் நமக்கு அந்நியமான பகுதியான ஆப்கனுக்கு நம்மை அவுரங்கசீப் அனுப்புகின்றான் என்றால் அவனிடம் மோசமான திட்டம் இருக்க வேண்டும்

இதனால் நமக்கு இருப்பது நாம் தப்பி செல்லும் வாய்ப்பு அல்லது நிலமையினை சரியாக்கி அந்த படையில் இருந்து நம்மை விடுவித்து அரச அனுமதியுடன் நம் இடம் திரும்பி செல்வது

இந்த இரண்டில் ஒன்றுதான் இப்பொழுது நாம் தேர்ந்தெடுக்கமுடியுமே தவிர காபூலுக்கு சென்று மாட்டிகொள்வது மடத்தனம், இங்கு நான் செத்தாலும் நம் பக்கம் செத்தாலும் அந்த சாவு வீணாகாது ஆனால் அனாதையாக ஆப்கனில் சாவது என்பது யாருக்கும் பலனற்றது

யுத்தத்தில் கொல்லபட்டான் சிவாஜி என்பதோடு என் கதையினை முடிக்க பார்க்கின்றான் அவுரங்கசீப்

இந்த யுத்தத்துக்கு செல்வது போல் சென்று இடையில் நான் தப்பமுடியுமா என்றால் சிக்கல்தான் என்னை நிச்சயம் கொல்வார்கள் நனே அவுரங்கசீப்புக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தது போலாகும், ஒரு வேளை தப்பினாலும் அது இன்னும் பல சிக்கலகளை ஏற்படுத்தும், காரணம் சாம்பாஜியினை இங்கே வைத்துவிட்டுத்தான் என்னை அனுப்புவார்கள், நான் தப்பினாலும் சாம்பாஜி பிணையாய் இருப்பான்”

இப்படி பல வகை கோணங்களை அவன் எடுத்து சொல்லி, அங்கிருந்து தப்பமுடியுமா என பகர்ஜியிடம் கேட்டான்.

சிவாஜியின் உளவுதுறை தலைவனான பகர்ஜிக்கு உடனே அங்கிருந்து சிவாஜி தப்பும் சாத்தியம் இல்லைஎன்பது புரிந்தது. மிக மிக வலுவான காவல் ஏற்பாடுகள், சிவாஜியினை கண்கொத்தி பாம்பாக கவனிக்கும் அவுரங்கசீப்பின் உளவுதுறை, கோட்டை மதிலை தாண்டமுடியா சூழல், கனத்த காவல் எனும் நிலையில் கோட்டை வாயில் ஒன்றுதான் வழி என்றாலும் அவுரங்கசீப் அதற்கு அனுமதி மறுப்பு என எல்லா இடமும் தப்பிக்க வழி இல்லா வகையில் இருந்தது

“மன்னரே, உடனே தப்பித்து செல்ல வழியே இல்லை. எதிர்பாரா நேரம் தப்பி செல்வதுதான்வழி அதற்கும் கால அவகாசம் எடுக்கும். அதனால் இப்போது ராஜதந்திரமாக ஏதும் செய்து நிலமையினை ஆறபோடுவதுதான் வழி” என்றான் பகர்ஜி

அவனின் இதர பிரதானிகளும் அதையே சொன்னார்கள், சிவாஜி யோசிக்க தொடங்கினான். அவன் திட்டம் முழுக்க காபூல் செல்லும் திட்டத்தில் இருந்து தன்னை விடுவித்து ராய்காட் கோட்டைக்கு செல்வதிலேதான் இருந்தது

சிவாஜி மறுநாள் ராம்சிங்கிடம் விசாரித்தான், “ராம்சிங், மொகலாய சாம்ராஜ்யத்தில் படையெடுப்பை யார் உறுதி செய்வார்கள்? மன்னன் மட்டும் உத்தரவிட்டால் போதுமா இல்லை சபை ஒப்புதல் வழங்க வேண்டுமா?”

ராம்சிங் சொன்னான் “இங்கு திட்டங்களை வகுப்பதும் செயல்படுத்துவதும் முழுக்க மன்னனுடையதே, இறுதி முடிவும் அவனுடையதுதான்

ஆனால் சபை ஓரளவு ஏற்றுகொள்ளகூடிய காரணங்களை சொன்னால் சக்கரவர்த்திக்கு நெருக்கடி உண்டாகும், இதனால் ஒரு சில திட்டங்கள் மறுபரீசிலனை செய்யபடும், முன்பு அப்படி நடந்திருக்கின்றது”

சிவாஜி மெல்ல கேட்டான், “ராம்சிங், அப்படியானால் அவ்வளவு சக்திகொண்ட நபர்கள் அந்த அவையில் யார்?”

ராம்சிங் சொன்னான் “மன்னனின் ராஜாங்க அதிகாரி ஜாபர்கான், அந்த முல்லா முகமது அமீன் இருவரும் மொகலாயத்தில் சக்தி வாய்ந்தவர்கள், முல்லா அகமது அமீனின் செல்வாக்கு ராணுவ தளபதி வரை உண்டு, அவர்களை மீறி ஒரு படை அனுப்புவது சக்கரவர்த்திக்கு கொஞ்சம் சிரமமானது”

புன்னகைத்த சிவாஜி சொன்னான் “ராம்சிங், நான் அவர்களிடம் பேசி பார்க்கலாமா?”

ராம்சிங் சிவாஜியினை வினோதமாக பார்த்தான் “சிவாஜி , நீங்கள் நிதானத்தில் இருக்கின்றீர்களா? அந்த ஜாபர்கானின் மனைவியின் அண்ணன் அந்த ஷாயிஸ்ட்கான் அவன் விரல்களை வெட்டியவர் நீங்கள், அன்று சபையில் ஒரு இந்துவாக நின்றவர் நீங்கள்

ஒரு இந்துவினை அவர்கள் காபீர்கள் என்றுதான் சொல்வார்கள், அதுவும் அந்த முல்லா மிகபெரிய மதவாதி

இதனால் ஜாபர்கானையும் முல்லாவினையும் நீங்கள் சந்திப்பது நடக்காத காரியம், அவர்கள் உங்களோடு பேசுவதும் எதிர்பார்க்கமுடியா ஒன்று” என்றான்

சிவாஜி புன்னகைத்து சொன்னான் “முயற்சித்து பார்க்கின்றேன் ராம்சிங், சாவின் கடைசி படியில் இருப்பவன் அந்த ஒரு முயற்சியினையும் ஏன் விட்டுவைக்க வேண்டும்?”

“என்னை நம்பி காபூலுக்கும் வரமாட்டேன் என்கின்றீர்கள், இங்கே அந்த அவை தலைவர்களை காணபோகின்றேன் என்கின்றீர்கள், எனக்கு ஒன்றுமே புரியவில்லை” என அங்கலாய்த்து கொண்டான் ராம்சிங்

சிவாஜி விரக்தியாய் சொன்னான் “உனக்கு தந்தை ஒரு மன்னன், நீயும் இளவரசன் ஆனால் மொகலாயருக்கு சேவகம் செய்தே பழகிவிட்டீர்கள். ஆனால் என் தந்தை மன்னன் அல்ல, நானோ இந்துக்களுக்கு ஒரு நாட்டை ஸ்தாபிக்க இந்தபெரும் போரில் இறங்கி இப்பொழுது சிக்கிகொண்டேன். எனக்கு ஆதரவோ உதவியோ யாருமில்லை

என் கடைசி முயற்சி இது, சிவனருள் இருந்தால் நடக்கட்டும்” என்றவன் தொடர்ந்தான்

“ராம்சிங், நான் சில நாட்கள்தான் ஆக்ராவில் இருக்க வேண்டும் என கருதி வந்தேன், இங்கு இப்படியெல்லாம் நான் முடக்கபடுவேன் என நினைக்கவே இல்லை என் கையில் இருந்த பொன்னெல்லாம் தீர்ந்துவிட்டது

எனக்கு கொஞ்சம் பொன் கொடுத்தால் நான் புனே சென்றதும் உன் தந்தையிடம் கொடுத்துவிடுவேன், எனக்கு ஆக்ராவில் வேறு யாரையும் தெரியாது” என்றான்

“நீங்கள் என் விருந்தாளி உங்களுக்கு இல்லாமல் யாருக்கு?” என்ற ராம்சிங் அவனிடம் இருந்து விடைபெற்று சென்று தன் வேலைக்காரன் தேஜ்சிங்கிடம் பெரும் பொன்னும் பொருளும் கொடுத்து அனுப்பினான்

சிவாஜி அழைத்து வந்த சிறுசேனை வெளியில் இருந்தது , சிவாஜியின் பிரதான சபையோர் வந்திருந்தார்கள் அவ்வகையில் சிவாஜிக்கு செலவு அதிகம், அவர்கள் தேவைகள் யானை குதிரை பராமரிப்பு என பெரும் செலவும் இருந்ததை ராம்சிங் அறிவான், அதனால் யோசிக்கவில்லை. நிரம்ப கொடுத்தான்

அது 66 ஆயிரம் ஹான்களுக்கு நிகராய் இருந்தது பெரும் பொன் அது

அது கிடைக்கபெற்றதும் தன் உளவாளி பகர்ஜி நாயக்கை வரசொல்லி அவனோடு விவாதித்தான் சிவாஜி , ஜாபர்கானின் வீடு, முல்லா தங்கியிருக்கும் இடம் என எல்லா தகவலையும் கொட்டினான் பகர்ஜி

அப்பொழுது பல விவகாரங்கள் தெரியவந்தன, என்னதான் மொகலாயம் பெரும் வல்லரசு என்றாலும் உள்ளூர லஞ்சமும் ஊழலும் பெருகியிருந்தன, எல்லோரும் தகுதிக்கு ஏற்றபடி லஞ்சம் வாங்கும் ஆசாமிகளாக இருந்தார்கள்

மொகலாயம் பணம் புழங்கும் சுரங்கம் என்பதைவிட அங்கு இருந்ததெல்லாம் அன்னியர்கள், எல்லோரும் கிடைத்த வாய்ப்பில் சம்பாதிக்க வந்தவர்கள் என்பது கவனிக்கதத்து. அதுவும் ஷாஜகானிடம் இருந்து அரசு அவுரங்கசீப்பிடம் சிக்கியதில் திடீர் வாய்ப்பு பெற்றவர்களும் உண்டு, அவர்கள் விரைவாக சம்பாதிக்க பல குறுக்கு வழிகளை கையாண்டார்கள்

லஞ்சமும் ஊழலும் அங்கு அதிகமாய் இருந்தது.

அப்படிபட்டவர்களை வளைத்து கொடுக்க வேண்டியதை கொடுத்து ஜாபர்கானுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றான் சிவாஜி

நல்ல தொகையினை பெற்று கொண்ட ஊழியர்கள் சிவாஜியின் கோரிக்கையினையும் அவன் பல விஷயங்களை விவாதிக்க விரும்புவதையும் சொல்லி அவன் மனதை மாற்றினார்கள், சிவாஜி ஜாபர்கானுக்கு அளித்த பரிசு என வைர மோதிரமெல்லாம் காட்டினார்கள்

சிந்தித்து பார்த்தான் ஜாபர்கான் ” சிவாஜி ஒன்றும் இப்பொழுது தண்டனை பெற்றிருக்கும் கைதி அல்ல, அவன் மேல் பெரும் அரச‌ குற்றசாட்டு ஏதுமில்லை, மாறாக ஆக்ரா கோட்டையில் ஒரு கவுரவ விருந்தாளியாகத்தான் தங்க வைக்கபட்டிருக்கின்றான், மொகலாயமே அவனை தண்டிக்காமல் விருந்தாளியாக வைத்திருகின்றது.

ஆனானபட்ட அவுரங்கசீப்பே அவனை வெட்டி கொல்லவுமில்லை, சிறையில் அடக்கவுமில்லை

அப்படிபட்டவனிடம் பேசுவது ஒன்றும் மொகலாயத்துக்கு துரோகம் ஆகாது” என சிந்தித்தவன் சிவாஜியினை வரசொன்னான்

சிவாஜி புன்னகைத்தான், பெரும் விலை உயர்ந்த நகைகளும் பொன்னும் தட்டில் எடுத்து கொண்டான், ஆக்ராவின் இனிப்பு வகைகளையும் பழங்களையும் எடுத்து கொண்டு அவன் வீட்டிற்கு விரைந்தான்

அவனைவர சொன்ன ஜாபர்கான் குழப்பத்திலும் அதே நேரம் ஆச்சரியத்திலும் இருந்தான்

“எங்கிருந்தோ வந்து ஆக்ரா கோட்டையில் அவுரங்கசீப்பையே எதிர்த்துவிட்டு, இப்பொழுது எந்த ஷாயிஸ்ட்கானை வெட்டி அவன் மகனை கொன்றானோ அவன் தங்கை வீட்டுக்கே வர எவ்வளவு தைரியமும் துணிவும் இந்த சிவாஜிக்கு இருக்க வேண்டும்

கொஞ்சமும் சாவு பற்றிய பயமோ அச்சமோ இவனுக்கு இல்லையா? எப்படி இவனால் இப்படி தைரியமாக இயங்க முடிகின்றது

இப்பொழுது வருபவன் என்ன கோரிக்கை கொண்டு வருவான்? ஒருவேளை நம் கழுத்தில் கத்தி வைப்பானோ, வாள்முனையில் இழுத்து செல்வானோ இல்லை ஏதும் குழப்பம் விளைவிப்பானோ என பல வகையில் சிந்தித்தவன் காவலை வலுபடுத்தியிருந்தான்

ஷாயிஸ்டாகானின் மனைவியும் ஜாபர்கானின் மனைவியுமான பேகம் கொந்தளித்து கொண்டிருந்தாள், தன் அன்னனை அவமானபடுத்தி விரட்டியனுடன் என்ன பேச்சு என ஆத்திரமடைந்தாள், அவளை அடக்கிவிட்டு “அவன் வரட்டும் பார்க்கலாம்” என சொல்லிகொண்டிருந்தான் ஜாபர்கான்

சிவாஜி பெரும் பொன்னோடும் பொருளோடும் வந்து அவற்றை ஜாபர்கான் முன்னால் வைத்து வணக்கம் தெரிவித்தான், அந்த பெரும் பொன்னை அவன் பார்த்த வகையிலே அவன் கண்களிலே இருந்த பேராசையினை உணர்ந்து கொண்டான் சிவாஜி

அந்த பொன்னை தொட்டுபார்த்தபொழுது ஜாபர்கானுக்கு வந்த புன்சிரிப்பினை சிவாஜி குறித்து கொண்டான்

“சொல்லுங்கள் சிவாஜி, என்ன பேசவேண்டும்” என்றான் ஜாபர்கான்

“பிரதான அமைச்சர் ஜாபர்கான் அவர்களே, நான் சில விஷயங்களுக்காக வருத்தம் தெரிவிக்க விரும்புகின்றேன்

ஷாயிஸ்ட்கானுக்கும் எனக்கும் தனிபட்ட மோதல் ஏதுமில்லை, எம் மக்களை அவர் துன்புறுத்தியவிதமும் விளைநிலம் அழிக்கபட்ட வகையும் எனக்கு பெரும் சிக்கலாயின, அப்பொழுதும் நான் அவரை வெட்ட வேண்டும் என வாள்வீசவில்லை, அந்த இரவில் அவரை சரியாக வெட்டி வீழ்த்தியிருக்க என்னால் முடியும்

நான் அவர் கைகைகளில் ஒரு காயத்தை ஏற்படுத்திவிட்டு அவர் வாளை அகற்றத்தான் வாளை வீசினேன், ஆனால் வேலைக்காரி குறுக்கே புகுந்து அவரை காப்பாற்றியபொழுது அவரின் விரல் அறியாமல் வாளில் பட்டுவிட்டது அத்தோடு அவர் போர்வையில் சுருட்டபட்டார் எனக்கு பேச வாய்ப்பில்லை

அவரின் மகன் அங்கிருந்தது பற்றி எனக்கு தெரியாது, மோதலில் அவன் கொல்லபட்டது பற்றி வருத்தம் அடைந்தேன்

ஜாபர்கான் நான் அவரை வெட்டினேனே தவிர அங்கிருந்து ஒரு துளி பொன்னையோ ஒரு பெண்ணையோ கூட தொடவில்லை என்பதை அறிவீர்கள், ஒரு எச்சரிக்கைக்கு சென்ற இடத்தில் விபரீதமாகிவிட்டது

ஷாயிஸ்ட்கானால் 3 வருடமாக நான் இழந்தது அதிகம், அதைத்தான் சூரத்தில் வசூலித்து கொண்டேன், இப்பொழுதும் ஜெய்சிங்குடன் மோத எனக்கு அதிக நேரமாயிராது, நான் முடிந்தளவு போரை தவிர்க்க நினைக்கின்றேன் அதனால் ஒப்பந்தத்திற்கும் வந்தேன்

இப்பொழுது என்னை ஒரு மன்னனாக அழைத்து இங்கு என்னை ஒருமாதிரி கையாள்கின்றார் உங்கள் சக்கரவர்த்தி, நான் இந்துக்கள் முறையில் இந்துஸ்தான சக்கரவர்த்திக்கு வணக்கம் சொன்னது தவறாம், அது போக என்னை 4ம் வரிசையில் நிற்க வைத்து அவமானபடுத்தினார்கள்

ஜாபர்கான், நான் ஒரு காலமும் மொகலாயருக்கு எதிரி அல்ல, இஸ்லாமுக்கும் எதிரி அல்ல அது ஏனோ உங்களுக்கு புரியவே இல்லை

நான் பிஜப்பூர் சுல்தானுக்கு எதிராகத்தான் போராட கிளம்பி ஒரு சிறிய இந்துராஜ்யம் அமைத்து கொண்டேன், அது மொகலாயத்துக்கு கட்டுபட்டது, ஆனால் அது ஒரு இந்து ராஜ்ஜியம் எனவும் என்னை அந்த ராஜ்ஜியத்தின் தலைவன் என அங்கீகரியுங்கள் என்றுதான் கேட்கின்றேன், அது எப்படி தவறாகும்?

இங்கு ஈரானியர்கள், போர்ச்சுகீசியர்கள் என யார்யாரோ வந்து அரசு அமைத்து, எங்கிருந்தோ வந்த‌ உங்களுக்கு கட்டுபட்டு நிற்கும்பொழுது இந்த மண்ணின் மகனாகிய நான் ஒரு இந்து அரசனாக சிறிய ராஜ்ஜிய மன்னனாக இருந்துவிட்டால் என்ன பிரச்சினை?

இப்பொழுது என்னை காபூலுக்கு அனுப்ப போகின்றாராம் சக்கர்வர்த்தி, அங்கு நான் இறந்தால் என்னாகும்? நாட்டின் எல்லா மன்னர்களுக்கும் உங்கள் சக்கரவர்த்தி மேல் அவநம்பிக்கை வரும், இந்துக்களிடையே அதிருப்தி வரும் பெரும் கொந்தளிப்பு ஏற்படும்

அப்படியே என்னை புனேவுக்கு அனுப்பாமல் ஆப்கனுக்கு உங்கள் சக்கரவர்த்தி அனுப்பினால் தக்காணத்தினை முழுக்க வெல்லும் அவர் கனவு பாழாகும், பெரும் எதிர்ப்பில் மொகலாயம் பின்னடையும்

ஜாபர்கான் உங்களுக்கு ஒரு உறுதிமொழி சொல்கின்றேன், என்னை புனேவுக்கு திரும்ப அனுமதித்தால் நான் ஜெய்சிங்கொடு சேந்து கன்னியாகுமரி முனை வரை மொகலாயத்தை நீட்டித்து தருகின்றேன், பிஜப்பூர் கோல் கொண்டா என இரு சுல்தானியங்களையும் நான் ஒழித்து தருகின்றேன்

அப்படியே உங்கள் மொகலாயத்துக்கு என் மேல் வைக்கபடும் குற்றச்சாட்டுக்கு ஈடாக 2 கோடி தருகின்றேன், 40 லட்சம் ஹான் எனும் புரந்தர் ஒப்பந்த பணத்தை 2 கோடி ஹானாக மாற்றுகின்றேன்’

இதனை சபையில் எடுத்து சொன்னால் உங்களுக்கு மட்டும் பல லட்சம் ஹான்களை என்னால் தரமுடியும்”

அந்த கடைசி வாஎத்தையினை கேட்டதும் ஜாபர்கானின் கண்கள் அகல விரிந்தன, ஏற்கனவே சிவாஜி கொட்டிய தங்கத்தில் குழம்பியிருந்த அவன் 2 கோடி ஹான், பல லட்சம் ஹான் என்ற வார்த்தைகள் விழ விழ அப்படியே மனதால் விழுந்தான்

ஆனால் உடனே அதை காட்டிகொள்ளாமல் “சக்கரவர்த்தி உங்கள் மேல் கடும் ஆத்திரத்தில் இருக்கின்றார் உடனே என்னால் எதுவும் பேசமுடியாது, ஆனால் ஆப்கன் திட்டத்துக்கு ஒப்புதல் வாங்கும் விவாதத்தில் நான் பேசிபார்க்கின்றேன்

சரி, எனக்கு பல லட்சம் ஹான் தருவதாக சொன்னாயே நம்பலாமா?” என திருப்பி கேட்டான்

“என் உயிர் எனக்கு முக்கியம் ஜாபர்கான், அதற்கு என் ராஜ்ஜியத்தையே தருவேன். இப்பொழுது நான் திரும்பி செல்ல வேண்டும், சென்றபின்னும் நான் மொகலாய சேவகனாகத்தான் இருப்பேன், அப்பொழுதும் உங்கள் தயவு தேவைபடும், உங்களிடம் பகைக்கமுடியுமா? பகைத்தால் நிம்மதியாக ராய்காட்டில் இருக்க முடியுமா?”

“என்னால் முடிந்ததை செய்கின்றேன்” என்றான் ஜாபர்கான் ஆனால் மனதால் அவன் சிவாஜிக்கு ஏதோ செய்யவிரும்புவதை அவன் கண்கள் காட்டின‌

“ராய்காட்டுக்கு தகவல் அனுப்பியிருக்கின்றேன் பணம் வந்த்தும் உங்களை கூடுதல் அன்பளிப்போடு சந்திக்கின்றேன், தென்னாட்டு முத்துமாலை ஒன்று தரட்டுமா?” என சிவாஜி கேட்டதும் புன்னகைத்தான் ஜாபர்கான்

இனி நாம் நண்பர்கள் என அவனை கட்டிதழுவிய சிவாஜி விடைபெற்றான், சிவாஜியிடம் பெரும் தொகை கறந்துவிடுவது என்றும் சபையில் சிவாஜிக்கு சார்பாக எதையாவது செய்யலாம் என முடிவெடுத்தான் ஜாபர்கான்

“பணம் உலகின் சக்திவாய்ந்த ஆயுதம் பகர்ஜி” என்றபடி திரும்பிய சிவாஜி மறுநாள் முல்லாவினை சந்திக்க திட்டமிட்டான்

முல்லா முகமது அமீன் என்பவன் சர்வ சக்திவாய்ந்த பொறுப்பில் இருந்தவன், அவன் காசுக்கு ஆசைபடமாட்டான் என்பதை அறிந்த சிவாஜி வேறுவகையில் வளைத்தான்

முல்லா மிகசிறந்த மார்க்க அறிஞர் என்பதையும் அவரின் விளக்கமும் போதனையும் உன்னதமானவை என்பதையும் தான் கேள்விபட்டதாகவும் அவரை காணமுடிந்தால் சில விளக்கங்களை கேட்கலாம் என்றும் தன் தாத்தா மாலோஜிக்கே ஒரு சூபி ஞானி வழிகாட்டியாக இருந்தார் என்பதையும் முல்லாவின் ஆட்கள் மூலமாக முல்லா காதுக்கே கொண்டு சென்றான்

அதற்கு வழக்கம் போல் அவனின் பொன்னும் செல்வமும் பயன்பட்டது, முல்லா வியப்பில் ஆழ்ந்தார், “ஒரு காபீர் விளக்கம் கேட்டால் சொல்வது நம் கடமை அல்லவா?” என சிவாஜியினை சந்திக்க இசைவு தெரிவித்தார்

சிவாஜி அவரை எளிய காணிக்கையோடு சந்தித்தான், முதற்கட்டம் அவரிடம் ஆசீர்வாதம் வாங்கினான், அவனின் பண்பும் பணிவும் முல்லாவினை கவர்ந்தன, மெல்ல பேச தொடங்கினான்

“பெரியவரே, சபையில் ஏதும் என்னால் குழப்பம் நடந்திருந்தால் மன்னித்தருள வேண்டும்” என்றான்

“அது இஸ்லாம் முறை என்பதால் அப்படி வணங்கவில்லை அப்படித்தானே” என்றார் முல்லா , அவரின் வார்த்தைகள் தூண்டில் போல் இருந்தன‌

அங்கு மதம் பிரச்சினையே இல்லை பெரியவரே, அங்கு இஸ்லாமிய மன்னன் அல்லாமல் பவுத்த மன்னன் சமண மன்னன் ஜெராஸ்ட்ரிய மன்னன் இருந்தாலும் நான் இந்நாட்டு கலாச்சார வணக்கத்தைதான் தெரிவித்திருப்பேன்

நான் இஸ்லாமுக்கோ இஸ்லாமியருக்கோ எதிரானவன் அல்ல, இந்துவாக பிறந்ததால் அம்மதத்தை நேசிக்கும் எளியவன் ஆனால் என் நாட்டில் எந்த மசூதியினையும்நான் இடிக்கவில்லை, எந்த இஸ்லாமியினையும் நான் மதத்துக்காக கொல்லவுமில்லை, என் படையிலே இஸ்லாமியர்கள் உண்டு

“உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் வழி எங்களுக்கு” என சொன்ன நபிபெருமானின் வார்த்தைகளை எப்பொழுதும் மதிக்கின்றேன்

நான் கப்பல் படை வைத்திருக்கின்றேன், அக்கப்பல் படையும் மெக்கா செல்லும் திருபயணிகளுக்கு பல உதவிகளை காவல்களை செய்வதை நீங்கள் அறிவீர்கள்

நான் தெற்கே பிஜப்பூரோடு நடத்துவது ஒரு உரிமைபோர், மொகலாயர் பின்னால் வந்து வடக்கே அமர்ந்தவர்கள், அவர்களோடு எனக்கு பிணக்கே இல்லை ஆனால் அவர்களுக்கு 300 ஆண்டுக்கு முன்பே வந்து எங்கள் கோட்டைகளை பிடித்து எங்களை அடிமையாக்கியவர்கள் பாமினி சுல்தான்கள், என் யுத்தம் அவர்களுடையதுதான்

மொகலாயம் இந்துஸ்தானை ஆளும் பெரும் சக்தி, அவர்களுக்கு அடங்கி கப்பம் கட்டு என்றால் கட்டபோகின்றேன், தளபதியாக இரு என்றால் இருக்கபோகின்றேன்

ஆனால் அதை எங்கள்நாட்டில்தானே செய்யமுடியும்? அதைவிடுத்து ஒரு நாட்டின் அரசனான என்னை, ஆயிரம் அலுவலும் வேலையும் கொண்ட என்னை ஆப்கனுக்கு செல் என்றால் அதுவும் தனியாக படையின்றி செல் என்றால் எப்படி?

அமீர் உங்களுக்கு தெரியாதது அல்ல, தென்னகம் முழுக்க தன் கட்டுபாட்டில் கொண்டுவர சக்கரவர்த்தி ஜெய்சிங்கை தெற்கே அனுப்பியிருக்கின்றார், இப்பொழுது நானும் அவருடன் அங்கே நிற்பதுதானே சரி, தென்னகம் என் சொந்த பூமி அதுவும் பிஜப்பூர் கோல்கொண்டா சுல்தான்களின் பலமும் பலவீனமும் முழுக்க அறிந்தவன் நான், என்னை அங்கே செல்லவிடாமல் ஆப்கனுக்கு அனுப்பினால் யாருக்கு நஷ்டம்

ஆப்கன் எனக்கு அந்நிய பூமி, அங்கு நான் கொல்லபடலாம் ஒருவேளை கொல்லபட்டால் அது மொகலாய சக்கரவர்த்திக்கு எவ்வளவு பெரும் அவபெயரை கொண்டுவரும்? ஜெய்சிங்குக்கு என்னபதில் சொல்வார்கள்? நாடெல்லாம் இந்துக்கள் கிளர்ந்தால் மொகலாயம் தாங்குமா?

இதைவிட ஒரு ஆபத்து இருக்கின்றது ஆமீர், அப்பக்கம் பெர்ஷிய அரசின் எல்லை உண்டு, ஒருவேளை அவர்கள் என்னை கடத்தி சென்றுவிட்டால், கடத்தி வைத்து மொகலாயம் மேல் ஏவினால்..

நான் அந்த துரோகத்தைசெய்யமாட்டேன் மாறாக அங்கேயே இறந்துவிடுவேன், எப்படியும் என் இறப்பு அங்கு நிச்சயம் என்றாகிவிட்டது, ஆனால் நான் அங்கு இறப்பதால் மொகலாயம் இழக்க போவது அதிகம், தென்னகத்தில் பெரும் குழப்பம் வரபோவதும் அதிகம்

நான் என் மனதை சொல்லிவிட்டேன், அவுரங்கசீப் என்னுடன் முகம் கொடுத்து பேசுவதுமில்லை தனியே என்னை பேச அழைப்பதுமில்லை

இப்பொழுதும் நான் சொல்கின்றேன் என்னை புனேவுக்கு திரும்ப அனுமதித்தால் 2 கோடி ஹான் பணத்தை செலுத்துவேன், அனுமதிக்காவிட்டால் ஆப்கன் சென்றாலும் சாவு இல்லை சக்கரவர்த்தி கட்டளைக்கு கட்டுபட மறுத்தான் என சக்கரவர்த்தியாலும் சாவு எது என் விதியோ அது நடக்கட்டும்

இப்பொழுது என்னை ஆசீர்வாதம் செய்து அனுப்புங்கள்” என பணிந்தான்

அந்த முல்லாவுக்கும் குழப்பமும் ஆச்சரியமும் ஏற்பட்டது, அவர் சிவாஜியினை ஆசீர்வதித்து அனுப்பினார்

இப்படியாக இருவரையும் சில நாட்களிலே சந்தித்தான் சிவாஜி, ஒருவகையில் அவர்களை குழப்பி வைத்திருந்தான்

சிவாஜி அவர்களை சந்தித்த விஷயத்தை அப்படியே அவுரங்கசீப்பிடம் முழுக்க தெரிவித்தான் உளவுபடை தலைவன் ஹூசைன், இது அவுரங்கசீப்புக்கு இன்னும் குழப்பமாயிற்று

உண்மையில் அப்பொழுது சிவாஜிக்கு ஆக்ராவில் தடை ஏதும் கிடையாது அவன் யாரையும் சந்திக்கலாம் எல்லோருடனும் பேசலாம் எனும் உரிமை வழங்கபட்டிருந்தது

அப்பொழுதும் தன்னை தேடிவந்து பேசாமல் தன் அலுவலர்களை ஏன் சந்தித்து சிவாஜி பேசினான் என்பதில் முழுக்க குழம்பினான் அவுரங்கசீப்

ஒரு சக்கரவர்த்தியாக நான் இங்கே இருக்கின்றேன், அவன் எது என்றாலும் என் காலடிக்கு அல்லவா வரவேண்டும் என்னை விடுத்து அலுவலர்களை தேடி சென்றான் என்றால் அவன் நோக்கம் என்ன? ஏதோ திட்டமிடுகின்றான் என்ன என்பதுதுதான் தெரியவில்லை என கடுமையாக சிந்தித்தான் அவுரங்கசீப்

ஆனாலும் அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை, இனியும் தாமதிக்க கூடாது சபையினை கூட்டி ஆப்கன் திட்டத்தை சொல்லி சிவாஜியினை அனுப்பி நேரம் பார்த்து ராட் அண்டர்ஸ்கானை சிவாஜியினை போட்டு தள்ள சொல்லிவிடவேண்டியதுதான், இனியும் அவனை விட்டுவைக்கமுடியாது

சிவாஜி ராம்சிங்கை நம்பி செல்லட்டும், இடையில் அவரச வேலையாக ராம்சிங்கை பின் இழுத்துவிட்டு சிவாஜியினை முடித்துவிடலாம் அவன் மகனை இங்கே பொம்மை இளவரசனாக வளர்த்து பின் ராய்காட்டுக்கு நம் பொம்மையாக அனுப்பலாம் என திட்டமிட்டான்

1666 மே மாதம் 22ம் தேதி சபை கூடிற்று, சிவாஜியின் தந்திரம் சரியாக வேலை செய்தது

அவுரங்கசீப் மனதோடு வைத்திருந்த ஆப்கன் திட்டத்தை அங்கு ஆலோசிக்க மெல்ல மெல்ல சிக்கல்களை சொல்ல தொடங்கினான்

“சபையோர்களே, ஆப்கன் என்பது எப்பொழுதுமே வளமான‌ இந்துஸ்தானுக்கு ஆபத்தான விஷயம் என்பது எல்லோரும் அறிந்தது

நம் முன்னோர்களும் அங்கிருந்துதான் வந்தார்கள் என்றாலும் காலம் காலமாக ஆப்கானில் இருந்து தில்லிக்கு வரும் மிரட்டல் வந்து கொண்டேதான் இருக்கின்றது, பலமான மொகலாயத்தை கைபற்ற துடிக்கின்றார்கள் அவர்களுக்கு பாரசீக மன்னனும் ரகசிய ஆதரவு தெரிவிக்கின்றான்

இந்த சிக்கல் நாளுக்கு நாள் நீடிக்கின்றது, காபூல் தொடங்கி பெரும் மிரட்டல் வருகின்றது கிளர்ச்சிகள் நடக்கின்றன, கிழக்கே வங்கத்தில் நம் ஆட்சியினை நிறுத்திய ஷாயிஸ்ட்கான் தொடர்ந்து வெற்றிகளை தருகின்றார்

தெற்கே ஜெய்சிங் தலமையில் நம் படைகள் மொகலாய ஆதிக்கத்தை ஒரே குடைக்குள் கொண்டுவர பார்க்கின்றன, இந்நேரம் நாம் ஆப்கனில் கவனத்தை குவிக்க வேண்டும்” என சொல்லி நிறுத்தினான்

அவனும் சாதாரணமாக அவைக்கு வரவில்லை ஒரு ஏற்பாட்டோடு வந்திருந்தான்

அது ராஜபுத்திர மனன்ர்களுக்கும் ரத்தோர் எனப்படும் அவர்களின் உட்பிரிவுக்குமான மோதல், அந்த ரத்தோர்களில் சிலர் ஜெய்சிங்குக்கு எதிரிகளாக இருந்தார்கள்

யாராலும் அடக்கமுடியாத சிவாஜியினை ஜெய்சிங் வழிக்கு கொண்டு வந்தாலோ இல்லை தக்காணாத்தில் அவன் வெற்றிகளை குவித்தாலோ அது தங்களுக்கு அவமானம் என்றும், ஜெய்சிங் முன்னிலை பெறுவது தங்களுக்கு நல்லதல்ல என்றும் குறுகிய எண்ணம் கொண்டிருந்தார்கள்

அவுரங்கசீப் இதையெல்லாம் அறிந்துதான் இருவருக்கும் இடையில் ஒருமாதிரி அரசியல் செய்து இருவரையுமே தன் காலடியில் வைத்திருந்தான், ஜெய்சிங் சிவாஜியினை எதிர்க்க ஒப்புகொண்டது கூட இம்மாதிரி அரசியலே

அந்த ரத்தோர்களுக்கு சிவாஜியினை பிடிக்கவில்லை, ஜெய்சிங்கோடு அவர்கள் கொண்டிருக்கும் நல்லுறவு பிடிக்கவில்லை இதனால் சிவாஜியினை தொலைக்க வழிதேடினார்கள்

அவர்களைத்தான் சபையில் பேசுமாறு ஏற்பாடு செய்திருந்தான்

அவர்களும் உடனே “அதனால் என்ன வீராதிவீரன் சிவாஜி நம் அரண்மனையில் விருந்தினராக தங்கி இருக்கின்றாரே அவரை ஆப்கனுகு அனுப்பினால் என்ன?” என தொடங்கினார்கள்

அதை ரசித்தபடியே ஒன்றுமறியாதவன் போல் இருந்த அவுரங்கசீப்பை அதிரவைத்தான் தலமை பிரதானி ஜாபர்கான்

“இந்த அவைக்கு நான் ஒன்றை சொல்லி கொள்கின்றேன், சிவாஜி தன் குற்றங்களையெல்லாம் ஒப்புகொண்டிருகின்றார், புரந்தரில் சொன்னதற்கும் அதிகமாக 2 கோடி ஹான்களை தருவதாகவும் தன்னை ராய்காட்டுக்கு திரும்ப அனுப்பும்படியும் தெற்கே ஜெய்சிங்குடன் சேர்ந்து மொகலாயரை வலுபடுத்த போவதாகவும் விருப்பம் தெரிவித்திருக்கின்றார்

இதனால் அவர் தெற்கே செல்வதுதான் சரி , அவர் விருந்தினராக வந்தார் இப்பொழுது தன் தவறுக்கு பணம் கட்டவும் சம்மதிக்கின்றார், இனி அவரை அனுப்பிவிட மன்னர் சிந்திக்கலாம்” என்றான்

இதை சபை மெல்ல ஆமோதிக்க ஆரம்பித்தது

சபையின் சக்திவாய்ந்த தலைவனான முகமது அமீனும் சொன்னான் “சிவாஜி மேல் பிழை இருப்பதாக தெரியவில்லை, ஒரு இந்து மன்னனாக அவர் நடந்தது அப்படி அவமரியாதை என நமக்கு தெரிந்திருக்கலாம்

அவர் இஸ்லாமியருக்கும் இஸ்லாமுக்கும் எதிரி அல்ல, இந்துவாக அவர் அவர் மதத்தில் பற்றாக இருப்பதை யாரும் குறை சொல்லமுடியாது, இந்துக்கள் அவரை கொண்டாடும் நேரம் வலிய அவரை ஆப்கனுக்கு அனுப்புவது கொந்தளிப்பை ஏற்படுத்தும்

அதுவும் ஜெய்சிங் இங்கு விருந்தினராக அனுப்பிய ஒருவனை நாம் வலுகட்டாயமாக ஆப்கனுக்கு அனுப்பினால் வீண் குழப்பம் ஏற்படும்”

அவுரங்கசீப் அதிர்ந்தான், சிவாஜி வெளியே சென்று எம்மாதிரி வலைகளை பின்னினான் என்பது அவனுக்கு புரியவந்தது, தன் சபையின் பிரதான உறுப்பினர்களையே அவன் குழப்பி வைத்திருப்பதை அறிந்து பல்லை கடித்து கொண்டான்

அவனுக்கு வேறு தெரிவும் இல்லை, காரணம் ஆப்கன் பக்கம் பெரும் படையோ அச்சுறுத்தலோ இல்லை, அந்நேரம் படை அனுப்பி வைக்கவேண்டிய கட்டாயமும் இல்லை என்பதால் சபையில் அவன் வைக்க பெரும் வாதமுமில்லை

படை அனுப்புவதாக இருந்தால் ரத்தோர்களையும் ராட் அண்டர்ஸ் கானையும் அனுப்பி வைக்கலாம் என சபை சொன்னாலும் சொல்லும் யோசனைகள் வந்தன‌

எல்லார் வாதமும் சிவாஜியினை அங்கே அனுப்பி வீண் சிக்கலை தேடவேண்டாம் என்றும் அப்படி காவல் வேண்டுமானால் வேறு யாரையாவது அனுப்பலாம் என்றும் கோரிக்கையும் ஆலோசனையும் வந்தது

பல்லை கடித்து ஆத்திரத்தின் உச்சியில் இருந்த அவுரங்கசீப் தன் திட்டம் தன் கண்முன்னே கலைவதை உணர்ந்தான், அவனுக்கு இனி படையினை சிவாஜியினை கொண்டு அனுப்பமுடியாது என்பது தெரிந்தது

அனுப்பியே தீரவேண்டும் எனும் அளவுக்கு வலுவான காரணம் அவனிடம் இல்லை

இதனால் சபையின் ஒரு கோரிக்கையினை ஏற்றான், காபூல் நடவடிக்கை பிற்போடபட்டதாக அறிவித்தான், ஆனால் அவன் மனம் முழுக்க ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்தது

ஆனால் சிவாஜியிட 2 கோடி ஹான்கள் வாங்கி அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கைக்கு அவன் பதில் சொல்லவில்லை, அதையும் பின்னால் பார்க்கலாம் என ஒத்திவைத்தான்

அதே நேரம் ஆக்ராவில் சிவாலயங்களை சுற்றிகொண்டிருந்தான் சிவாஜி, அங்கு கொடுக்கபடும் காணிக்கையும் பணங்களும் பழங்களும் இனிப்புகளும் ஏழைகளை எப்படி சென்றடைகின்றன, கூடை கூடையாக வரும் இனிப்பும் பழமும் யார் சுமக்கின்றார்கள் எப்படி இயங்குகின்றார்கள் என்பதை பார்த்துகொண்டிருந்தான்

கோவிலுக்கு வரும் கூடைகள் முதலில் வழிபாட்டுக்காக சிவலிங்கம் முன்னால் வைக்கபட்டன, பின் குருக்கள் அங்கு சில பூஜைகளை செய்து சிவனுக்கு சில பழமும் இனிப்பும் காணிக்கையாக எடுத்தபின் அவை ஏழைகளுக்கு கொடுக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யபட்டிருந்தது

அந்த கோவிலையும் அந்த வழிமுறைகளையும் கவனமாக குறித்து கொண்ட சிவாஜி, அதை பற்றி பகர்ஜியிடமும் சொன்னான், பகர்ஜி சில விஷயங்களை குறித்து கொண்டான், சிவாஜியின் கவனம் அங்கே குவிகின்றது என்பதை மனதில் இருத்தி கொண்டான்

சிவாஜி அங்கிருக்கும் குருக்களிடம் நன்றாக உரையாடி கோவிலுக்கு காணிக்கையும் இனிப்பும் பழமும் வழங்கி விடைபெற்றான்

அங்கே தன் திட்டம் தவிடுபொடியான கோபத்தில் மிக இறுக்கமாக அமர்ந்திருந்தான் அவுரங்கசீப் அவன் முகத்தை நமட்டு சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தாள் ஜஹனாரா

“அக்கா, அவனுக்கு மலை எலி என்ற பெயர் பொருத்தமானது, அவன் சாதாரண எலி அல்ல, எப்படியெல்லாம் குடைகின்றான் தெரியுமா? அவனை ஆப்கனுக்கு அனுப்ப நான் திட்டமிட்டால் அவன் என் அமைச்சர்களுக்குள்ளே புகுந்து அவர்களையும் குழப்பி என் திட்டத்தையும் குழப்பிவிட்டான்” என்றவன் தலையினை அசைத்து பெருமூச்சு இட்டான்

“ஆலம்கீர், அவன் ஆப்கனுக்கு செல்வது இல்லை என முடிவானபின்னும் அவனை ஏன் இங்கே வைத்திருக்கின்றாய், எவ்வளவு நாளைக்கு வைத்திருப்பாய்” என கேட்டாள்

“அக்கா அவன் அடிபட்ட புலி, அவன் உள்மனம் நிச்சயம் கொதித்து கொண்டிருக்கும். இப்பொழுது அவனை தெற்கே அனுப்பினால் அவன் நிச்சயம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவான்

அவனை அங்கேவிட இது சரியான தருணம் அல்ல, ஜெய்சிங் முழு தக்காணத்தையும் வென்று அமைதி திரும்பட்டும் அப்பொழுது இவனை அனுப்பலாம், இப்பொழுது அனுப்பினால் அவன் இன்னும் குழப்புவான் போர் குழம்பும்

அதுவரை இங்கே அவன் இருக்கட்டும்” என்றான்

“அவன் இங்கு இருக்கமாட்டேன் ஏதும் கலவரம் செய்தால் என்ன செய்வாய் ஆலம்கீர்” என்றாள் ஜஹனரானா

“அவன் இங்கு இருக்கபிடிக்கவில்லை என்றால் அலகாபாத் கோட்டைக்கு அனுப்புவேன் அங்கு நம் சிறைகாவலன் பஹ்துர் கான் அவனை நன்கு கவனித்து கொள்வான்” என வஞ்சக சிரிப்பொன்றினை சிரித்தான்

ஜஹனாரா அச்சத்தில் உறைந்தாள்

காரணம் அலகாபாத் சிறை பல சித்திரவதைகளுக்கு பெயர் பெற்றது, மொகலாயருக்கு அச்சுறுத்தலானவர்கள் அல்லது எதிர்த்தவர்களையெல்லாம் அங்கு அடைத்துத்தான் வதைத்து கொல்வார்கள்

ஜஹனாரா முகத்தில் அச்சம் மேலிட்டது, “என்ன அக்கா பயந்துவிட்டாயா? அவன் முடிவு அங்குதான் இருக்கும்” என தன் திட்டத்தின் அடுத்தகட்டத்தை சொன்னான் அவுரங்கசீப்

அவனை பொறுத்தவரை சிவாஜி பெரும் கலவரம் அடிதடி என இறங்க வேண்டும், கோட்டைக்குள் கலவரம் செய்யும் அவனை அலகாபாத்துக்கு அனுப்ப வேண்டும், அப்படியே கொல்லவேண்டும்

இதற்கு சிவாஜிக்கு ஆத்திரமூட்டும் காரியம் அத்தனையும் செய்யவேண்டும், நிதானமாக திட்டமிட்ட அவன் சிந்தித்தான் சிவாஜிக்கு இங்கு எல்லாம் கிடைக்கின்றது, அவன் போக்கில் ஊர் சுற்றுகின்றான் அவன் நண்பர்கள் அமைச்சர்கள் இருக்கின்றார்கள், நல்ல உணவு கிடைக்கின்றது, ராம்சிங் இருக்கின்றான் எல்லாம் அவனுக்கு இருக்கின்றது

அப்படிபட்டவன் எவ்வளவுநாளும் தாங்குவான் நிச்சயம் ஆத்திரமுற்று வாளை தூக்கமாட்டான்

அவனை அப்படி தூக்கவைக்க வேண்டும், அவன் கத்தி ஆர்பரித்து கலவரம் செய்யவேண்டும் அப்பொழுதுதான் அதை காரணம் காட்டி அவனை அலகாபாத்துக்கு அனுப்ப முடியும்

அதற்கு முதலில் அவனை தனிமைபடுத்த வேண்டும், சிந்தித்து முடிவெடுத்த அவுரங்கசீப் தன் தலமை காவலம் பலூட் கான் என்பவனை அழைத்தான், அவன் அந்த மாநகர காவல் தலமையாளராக இருந்தான்

“பலூட் கான் சிவாஜி இருக்கும் மாளிகையினை சுற்றி நம் ஆட்களை நிறுத்து, அவன் யாரையும் பார்க்கவும் கூடாது, யாருடனும் பேசவும் கூடாது, எங்கு செல்லவும் கூடாது

அவன் கோரிக்கைகள் உன் மூலமாக மட்டும் வரவேண்டும், இனி யாரும் அவனை காணவோ பேசவோ அனுமதியில்லை ராம்சிங் உள்பட‌” என சொல்லி உத்தரவிட்டான்

அது 1666ம் ஆண்டு மேமாதம் 26ம் தேதியாக இருந்தது

சிவாஜியின் மாளிகையினை சுற்றி காவல் குவிக்கபட்டது குதிரைகளும் வீரர்களும் ஈட்டி தாங்கிய சேவர்களும் வட்டமிட்டார்கள், சிவாஜி எதனையோ உணர்ந்து வாசலுக்கு வந்தான்

வாசலில் இரு வீரர்கள் அவனை மறித்தார்கள், நீங்கள் பாதுகாப்பு வளையத்தில் இருக்கின்றீர்கள் என வெளிவிட மறுத்தார்கள்

சிவாஜி பதறினான், அப்படியே அவனோடு இருந்த பிரதானிகளும் அதிர்ந்தார்கள், சிவாஜியின் மெய்காப்பளான மஹேலாவும் ஹிரோஜியும் வாள் எந்தி சிவாஜியின் இருபுறமும் நின்றார்கள்

“சிவாஜி உத்தரவிடுங்கள் மின்னல் வேகத்தில் உங்களளை கோட்டைக்கு வெளியே கொண்டு செல்கின்றோம்” என பரபரப்பாக கோரினான் மஹேலா

“வேண்டாம், அது நம் எல்லோரையும் கொல்ல வாய்ப்பாகிவிடும், அமைதிகாப்போம் ராம்சிங் வரட்டும்” என கட்டுபட்டு அறையில் அமர்ந்து கொண்டான் சிவாஜி

“நாம் மோசம் போய்விட்டோம், அவன் நினைத்ததை செய்துவிட்டான்” என மனமொடிந்தார்கள் பிரதானிகள்

“நாம் எல்லோரும் இந்த ஒரே அறையில் இருந்தது தவறு” என அலுத்து கொண்டான் பகர்ஜி

சிவாஜி அடுத்து என்ன செய்ய என சிந்தித்து கொண்டிருந்தான், அவன் பிரதானிகள் கலக்கத்தில் இருந்தார்கள், சற்று நேரத்தில் வந்தான் பலூட் கான்

“சிவாஜி, உங்கள் பாதுகாப்புக்காக உங்களை எங்கள் வளையத்தில் வைத்திருக்கின்றோம், நீங்கள் சபையில் நடந்துகொண்ட விதமும் ஆப்கனுக்கு செல்ல மறுத்த தகவலும் உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவித்திருக்கின்றன என உளவு தகவல்கள் சொல்கின்றன‌

அதனால் நீங்கள் எங்கும் செல்ல கூடாது, அப்படியே உங்கள் ஆட்களெல்லாம் உடனே வெளியேற உத்தரவு கொடுக்கபட்டுள்ளது, அவர்கள் கிளம்பலாம் நீங்களும் உங்கள் மகனும் மட்டும் தங்கலாம்”

“ராம்சிங் எப்பொழுது வருவான்” என கேட்டான் சிவாஜி, “அவர் வேறுபணிக்கு மாற்றபட்டுவிட்டார் இனி உங்கள் பாதுகாப்பு என் வசம், விரைந்து இவர்களை அனுப்புங்கள்” என்ற பலூட் கான் விடைபெற்றான்

சிவாஜிக்கு வானமே இடிந்து விழுவதை போல் இருந்தது, அவனோடு இருந்தவர்கள் கண்ணீர் விட்டார்கள், கடைசியாக ஒரு மோதலை செய்யலாம் என்றார்கள்

சிவாஜி அசைந்து கொடுக்கவில்லை “என் சிவன் என்னை காப்பார், அதன் முன்னோடியாக உங்களை காத்திருக்கின்றார் ,நீங்களெல்லாம் ராய்காட் திரும்பி அன்னைக்கு ஆறுதலாய் இருங்கள்

ஜெய்சிங்கிடம் நடந்ததை நடப்பதை தெரிவியுங்கள், அன்னையினை நன்றாக பார்த்துகொள்ளுங்கள், நான் விரைவில் வருவேன் ” என்றவன் நிறுத்தினான்

“ஒருவேளை வராவிட்டால் யுத்தம் உங்கள் பொறுப்பு, நட்டாஜியும் தானாஜியும் அதை என் அன்னையின் உத்தரவில் நடத்துவார்கள்” என அவன் சொன்னபொழுது அனைவரும் விழுந்து அழுதனர்

சிவாஜிக்கும் கண்ணீர் கட்டிற்று, அவனும் சில சொட்டு கண்ணீர் சிந்தினான்

பலூட்கான் உத்தரவின் பேரில் அவனின் பிரதானிகள் கலைந்தார்கள்,வெளியில் சென்றவர்கள் ராய்காட் நோக்கி செல்ல தொடங்கினார்கள், சிவாஜியின் காவலுக்கு வந்த சேனையும் கிளம்பிற்று

ஆனால் பகர்ஜி நாயக்கும் சிவாஜியின் மெய் காப்பாளர்களும் ஆக்ராவிலே பதுங்கினார்கள், ஒரு கட்டத்தில் சிவாஜியினை எப்படியாவது தப்பிக்க வைக்கவேண்டும் என சபதம் செய்து அங்கே இருந்து கொண்டார்கள்

ராம்சிங் அவுரங்கசீப்பிடம் ஓடினான், அவுரங்கசீப் அதே பதிலை சொன்னான் “ராம்சிங், ஆப்கன் நடவடிக்கை தாமதமாகிவிட்டது, இதனால் சிவாஜி உன்னோடு இருக்கும் அவசியமில்லை

உன்னை காஷ்மீர் பக்கம் ஒரு நடவடிக்கைக்கு அனுப்பலாம் என்றிருக்கின்றேன் கொஞ்ச காலத்தில் உத்தரவு வரும், சிவாஜிக்கு அச்சுறுத்தல் அதிகம் அவன் போக்கில் வெளியில் செல்கின்றான் இந்த ஜாபர்கான் வீட்டுக்கெல்லாம் செல்கின்றான், அவனால் பாதிக்கபட்ட யாராவது ஏதும் செய்தால் உன் தந்தைக்கு நான் என்ன பதில் சொல்வேன்?

அதனால் அவனை பிரத்யோக காவலில் எடுத்திருக்கின்றேன், அவன் நலமாய் காவலாய் இருப்பான், அவனிடம் முக்கிய தகவல் ஏதும் சொல்ல உன்னைத்தான் அனுப்புவேன்

அவனை பற்றி முடிவு செய்ய சில வாரங்கள் ஆகும், அதுவரை அங்கே தங்கட்டும்” என்ற அவுரங்கசீப்பை மீற ராம்சிங்காலும் முடியவில்லை

சிவாஜியும் சாம்பாஜியும் அந்த அறையில் தனித்துவிடபட்டார்கள், சிவாஜி நிரம்ப யோசித்தான், தான் முழுக்க முடக்கபட்டதை அறிந்தான், முழு பல்த்தையும் அவுரங்கசீப் பிரயோகபடுத்த தொடங்கிவிட்டான் என்பதை ஊகிக்க முடிந்தது, அந்த அவுரங்க சீப் உணவில் விஷமிட்டு கொல்பவன் என்பதை கூட அவன் அறிந்திருந்தான், இனி இங்கு எதை உண்பது எதை குடிப்பது என அவன் குழம்பியிருந்த நேரம் அது

இனி என்ன செய்வது? எப்படி தப்புவது? ஆப்கனுக்கு சென்று தப்பலாமா? அது நடக்குமா? ஆனாலும் சாம்பாஜியினை விட்டு செல்ல வேண்டும், ஜெய்சிங்குக்கு கடிதம் எழுதலாமா? அதை கோட்டை அனுமதிக்குமா?

நம் ஆட்கள் செல்கின்றார்கள் சென்று ஜெய்சிங்கிடம் நாம் சிறையிருப்பதை சொல்வார்கள், ஏதும் முடிவு வரும் ஆனால் அதற்குள் உணவிலோ நீரிலோ விஷம் கலந்து தன்னை அவுரங்சீப் கொன்றுவிட்டால் என்ன செய்வது? வெறும் பழம் மட்டும் உண்டு தாக்குபிடிக்கலாமா? என்றெல்லாம் அவன் யோசித்துகொண்டிருந்த் நேரம் திரை மறைவில் தூணோரம் கருப்பு நிற அங்கி ஒன்று அசைந்தது

அந்த அங்கியில் இருந்து வந்த நறுமணமும் நகைகளின் அசைவும் வந்தது பெரிய இடத்து பெண் என்பதை காட்டிற்று

சிவாஜி கேட்டான் “யார் அது, அங்கே நிற்பது? என்ன விஷயமாக வந்தீர்கள்?”

அந்த உருவத்தின் கைகள் மெல்ல அசைந்தன அதனில் ஜொலித்த வைரம் வந்திருப்பது சாதாரண பெண் அல்ல என்பதை காட்டிற்று, அக்குரல் மெல்ல சொன்னது “நான் சக்கரவர்த்தி அவுரங்கசீப்பின் மகள் நிசா, செப் உன் நிசா, உங்களைத்தான் காண வந்தேன்”

சிவாஜி அதிர்ந்தான் “என்னது இளவரசியா, தாயே என்ன சொல்கின்றீர்கள்? பெண்களை மிக மரியாதையாக நடத்துபவன் நான், இந்த அரசியலில் வராதீர்கள் தயவு செய்து சென்றுவிடுங்கள்”

“நான் அரசியல் பேச வரவில்லை, இந்துஸ்தான பெண்களுக்கு மட்டுமல்ல எங்கள் அரண்மனை பெண்களுக்கும் பெரும் கனவான கதாநாயகனை காண வந்திருக்கின்றேன்”

சிவாஜி அரண்டு அவள் முகத்தை நோக்கினான், திரையிடபட்ட முகத்தில் மை தீட்டபட்ட அக்கண்களில் ஒரு நாணமும் அன்பும் எதிர்பார்ப்பும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெரும் திருப்தியும் தவமிருந்தவனை கண்டுகொண்ட நிறைவும் தெரிந்தது

அந்த கண்களை கண்டதும் சில அடி பின் வாங்கினான் சிவாஜி, அவளோ சில அடி முன் நோக்கி வந்தாள்

(தொடரும்..)

// முதல்படம் ஆக்ராகோட்டையின் பிரமாண்ட வால்சுவர், அதன் உச்சியில் எப்பொழுதும் காவலர்கள் இருப்பார்கள். இரண்டாம் படம் அங்கிருக்கும் அறைகள் அப்படி ஒரு அறையில்தான் சிவாஜி இருந்தார், மூன்றாம் படம் அந்த வளாகத்தில் தான் படைகளை குவித்து சிவாஜியினை காவலில் வைத்திருந்தான் பலூட் கான் //