சந்திரசேகர் ஆசாத்
எண்ணற்ற தியாகிகளை சுதந்திரத்திற்காக கொடுத்தது இத்தேசம், அதுவும் இளம் தியாகிகள் ஏராளம்
அவர்களில் ஒருவர்தான் சந்திரசேகர் ஆசாத். அவர் பெயர் சந்திரசேகர் , 15 வயதானபொழுது சத்தியாகிரகத்திற்காக கோர்ட்டில் நிறுத்தபட்டார், தான் யாருக்கும் அடிமை இல்லை என சொல்லி ஆசாத் சந்திரசேகர் என முழக்கமிட்டார்
அன்றிலிருந்து சந்திரசேகர ஆசாத் என அறியபட்டார்
காந்தி மேல் இளையொருக்கு வருத்தங்கள் வந்த காலமது, பிரிந்து சென்றவர்கள் இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்றொரு அமைப்பினை ஏற்படுத்தி வெள்ளையனை தீவிரவாதம் மூலம் விரட்ட எண்ணினார்கள்
இயக்கத்திற்கு பணம் வேண்டுமல்லவா?
வெள்ளையன் இந்தியரிடம் சுரண்டிய வரிபணத்தையே கொள்ளையடித்து இயக்கம் வளர்க்க தீர்மானித்தார்கள், மிக பிரசித்திபெற்ற ககோரி ரயில் கொள்ளை சந்திரசேகர ஆசாத்தால் நடத்தபட்டது
இந்திய வரலாற்றில் மிகபெரும் தீரமான சம்பவம் அது
அதன்பின் மிக தீவிரமாக தேடபட்டார் ஆசாத் ஆனால் சிக்கவில்லை, இளைஞர்களால் கொண்டாடபட்டார்
ராஜகுரு, சுக்தேவ், பகத்சிங் போன்றோரெல்லாம் ஆசாத்தின் உணர்ச்சியும் தேசபக்தியுமிக்க சாகச செயல்களால் ஈர்க்கபட்டவர்களே
வட இந்தியா முழுக்க கொண்டாடபட்டார், தென்னிந்தியாவிலும் அவர் புகழ்பரவியது
ககோரி ரயில்கொள்ளை போல ஆங்கிலேயரின் வரிபணங்களை ஏக இடங்களில் கொள்ளையிட்டு பெரும் சாகசம் புரிந்தார் ஆசாத்
28 வழக்குகள் அவர்மேல் இருந்தன
ஒரு கட்டத்தில் அவரை ஒழித்து தீருவது என முடிவெடுத்தது, அவர் கூட்டாளிகள் எல்லாம் கைதாயினர், பகத்சிங் போன்றோரும் சிறைபடுத்தபட்டனர்
ஆனால் ஆசாத் ஓயவில்லை போராடிகொண்டே இருந்தார்
மற்றவர்களுக்கும் ஆசாத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் இயக்க தொண்டர்களை அனுப்பிவிட்டு பதுங்குகுழியில் இருந்து போராடியவர் அல்ல அவர்
களத்தில் முன்னால் நின்றவர்
அலகாபாத் பூங்கா ஒன்றில் நண்பர்களோடு விவாதித்தபொழுது போலிசால் சுற்றி வளைக்கபட்டார்
நண்பர்களை எல்லாம் காப்பாற்றிவிட்டு அவர் தப்பும்பொழுது காலில் சுடபட்டார், இனி தப்பமுடியாது என தெரிந்தபின் தன்னையே சுட்டுகொண்டார்
அப்பொழுது வயது வெறும் 24
24 வயதிற்கும் மாபெரும் எழுச்சியினை இந்தியாவில் காட்டியவன் ஆசாத்
அவன்மேல் காட்டமுடியா வன்மத்தை பின்னாளில் பகத்சிங்க் மேல் காட்டி பழிதீர்த்தது வெள்ளை அரசாங்கம்
அந்த ககொரி ரயில் கொள்ளை நடந்த இடமும், ஜான்சி காடுகளும் அவன் சுவாசித்த விடுதலை காற்றை சமந்தபடி அவனுக்கு சாட்சியாய் நிற்கின்றன
‘தண்ணீர் விட்டா வளர்த்தோம் சுதந்திரப் பயிரை… கண்ணீர் விட்டல்லவா வளர்த்தோம்’ என்பதை விட இம்மாதிரி இளைஞர்களின் செந்நீர் விட்டும் வளர்த்தோம் என்பதே சரி
‘தண்ணீர் விட்டா வளர்த்தோம் சுதந்திரப் பயிரை… கண்ணீர் விட்டல்லவா வளர்த்தோம்’
அந்த இளம் தியாகிக்கு இன்று நினைவுநாள், வீரவணக்கம்
அவன் சுடபட்ட மரத்தடியிலே அவனுக்கு இன்றும் நினைவாலயம் உண்டு
ஒரு பிராமணானவது சுதந்திர போராட்டத்தில் உயிர்விட்டானா என கேட்கும் அரைவேக்காடுகளுக்கு ஆசாத் மிக பெரும் பதில், ஆம் அவர் பிராமணனே
ஆயுதமேந்தி வெள்ளையனை அலறவிட்ட பிராமணனே அந்த சிங்கமகன்
