சமூக நீதி எனும் சொல் தீவிரவாதம் போல, தேசதுரோகம் போல கருதபட வேண்டிய கொடும் விஷயம்

நாட்டை கெடுப்பதே இந்த யழவு சமூக நீதி

எந்த சாதி எந்த மதமாயினும் இந்தியன் என்ற அளவில் அவனை பார்த்து அவன் திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னிறுத்துகின்றோமோ அன்றுதான் இந்த தேசம் உருப்படும்

என் சாதி, என் மதம், என் மொழி என குறுகிய வட்டத்தில் பார்த்து அதை அரசியலாக்கி அந்த மகா குறுகிய கீழ்தரமான தந்திரத்துக்கு சமூக நீதி என பெயரிட்டால் இச்சமூகம் உருப்படாது

கல்வி எல்லோருக்கும் பொதுவாக வழங்கபடுகின்றது, பள்ளி கல்வி எல்லோருக்கும் சமமே, அதில் அறிவாளியும் திறமையானவனை முன்னிறுத்தல் வேண்டும்,

மாறாக இந்த சாதி என ஒடுக்குவதும் உயர்த்துவதும் சமூக நீதி அல்ல சமூக அநீதி

ராணுவத்தில் 50 கிலோ எடை தூக்குபவனை அதற்கேற்ற களத்தில் நிறுத்தவேண்டும் மாறாக இந்த சாதி என்பதற்காக இட ஒதுக்கீட்டில் 5 கிலோ கூட பலமற்றவனை நிறுத்தினால் ராணுவம் சர்க்கஸ் கூடாரமாகும்

ஓடவே தெரியாதவனை இட ஒதுக்கீடு என சொல்லி ஒலிம்பிக்கில் ஓடவிட்டால் என்னாகும்?

நாடு நலம்பெற இந்த சமூக நீதி எனும் அநீதியினை ஒழித்துகட்டல் வேண்டும், இதெல்லாம் என் சாதி, என் இனம் என்ற குறுகிய அரசியல் தந்திரம், இதனால் நாட்டுக்கு விளையபோகும் நன்மை ஏதுமில்லை, மாறாக வீண் அரசியல் குழப்பமே மிஞ்சும்

எல்லோரையும் சோம்பேறியாக்கும் சொல் சமூக நீதி, இதனால் அவர்களிடம் ஒரு உத்வேகமோ கடின உழைப்போ மாற்று சிந்தனையோ ஒரு காலமும் வராது

இட ஒதுக்கீடும் எனும் அநீதி அவர்களை முழு சோம்பேறிகளாக மாற்றும் இப்பொழுது அப்படித்தான் அது அந்த சமூகத்தை ஆக்கிகொண்டிருகின்றது

சமூக நீதி எனும் சொல் தீவிரவாதம் போல, தேசதுரோகம் போல கருதபட வேண்டிய கொடும் விஷயம்