சமூக நீதி என்றால் என்ன?

சமூக நீதி என்றால் என்ன?

சமூகத்தில் யார் திறமைசாலியோ அவனை சாதி பெயரால் ஒடுக்கிவிட்டு, யாருக்கு திறமை சுத்தமாக இல்லையோ அவனை பொருத்தமற்ற பதவிக்கும் அவனுக்கு பின் அவன் சந்ததியினை சாதி பெயரை சொல்லி அமர வைப்பது சமூக நீதி எனப்படும்

நாடு எக்கேடும் கெட்டு போகட்டும், நாட்டு பற்று எல்லாம் யாருக்கு வேண்டும்? என் சாதி மட்டும் வாழவேண்டும் அல்லது திறமையானவன் எல்லாம் எங்காவது ஓட வேண்டும் என்பது அதன் முக்கிய இலக்கு

இவ்வாறு செய்வதுதான் சமூக புரட்சி, போராட்ட வெற்றி இன்னபிற‌

திறமை இருப்பவனை பயன்படுத்தி சகல துறைகளையும் முன்னேற்றி, நாட்டையும் முன்னேற்றும் காரியங்கள் எல்லாம் சமூக நீதிக்கு எதிரான கொடுமை எனப்படும்


கோவில் சிலையும் தமிழனின் அடையாளம் தமிழனின் கலை, அது பெருமளவில் கடத்தபட்டாயிற்று தமிழனின் அடையாளம் அது என சொல்வார் எவருமில்லை

மாறாக கல்லறையில் பால் ஊற்றுதல், பஜனை பாடுதல், விபூதி பூசுதல் தமிழர் மரபு உரிமை என ஏகபட்ட விளக்கம்

சரி அந்த மதம் காக்க வந்த மகான்களுக்காவது அதில் அக்கறை இருக்கின்றதா என்றால் அவர்களும் ஏக அமைதி

ஆக சிலை கடத்தல், ஆலய சொத்துக்களை அமுக்குதல், ஆலயத்திற்கு சொந்தமான நிலத்தை வளைத்தல் என்பதில் எல்லா கட்சியின் கரங்களும் இருக்கின்றன‌

இதனால் யாவரும் அமைதி….