சமைப்பதும் உண்பதும்…
உண்பது எளிது, சமைப்பது கொஞ்சம் சிரமம், சமையலுக்கு தயார் படுத்துவது இன்னும் மகா சிரமம்
வெங்காயம் உரித்து, இறாலை உடைப்பதற்குள் மகா எரிச்சல் வருகின்றது, அதிமுக அமைச்சர்களின் பேச்சினை கேட்பதை விட மகா பொறுமை இதற்கு அவசியம்
இந்த இறால் இப்படித்தான் இருக்க வேண்டுமா? வாழை பழத்தோல் போல அதன் ஓடும் உரிந்தால்தான் என்ன?
இன்னும் கொஞ்சம் அது பெரிதாக வந்திருந்தாலும் சிக்கல் இல்லை, டெங்கி கொசுவினை விட கொஞ்சம் பெரிதாக இருக்கும் இதனை உரிக்க படும் இம்சை மகா கொடூரமானது.
(இக்காலத்திலே இப்படி சமைக்க சிரமம் என்றால் அக்காலத்தில் அரிசி கோதுமையினை அவர்களே இடித்து திரித்து என்ன பாடு பட்டிருப்பார்கள்?,
அடுப்பெரிக்கவே ஆயிரம் சிரமம்)
இப்படி எல்லாம் படைத்து , மிக சிரமபட்டு உண் என மனிதரை இம்சை செய்யும் கடவுளின் ஒரே மகன் நான் என ஒருவர் பூமிக்கு வந்தால் கடுப்பான மனிதர்கள் என்ன செய்வார்கள்?
அடித்து சிலுவையில்தான் தொங்கவிடுவார்கள்.