சரத்குமாரை பாஜக பக்கம் இழுக்கத்தான் இவையெல்லாம் நடக்கின்றதாம் …

சரத்குமாரை பாஜக பக்கம் இழுக்கத்தான் இத்தனை விவகாரங்களும் நடக்கின்றதாம்

அதாவது தமிழக இந்துநாடார்கள் எல்லாம் பாஜகவினை வரவேற்கின்றார்களாம், அதில் சரத்குமார் போன்றவர்களை சேர்த்துவிட்டால் அக்கட்சி விரைவில் தமிழகத்தில் வளர்ந்துவிடுமாம்,

இப்படி சிலர் சொல்லிகொண்டிருக்கின்றனர்

என்னமோ சரத்குமார் விநாயகர் ராவணனுக்கு கொடுத்த சக்திவாய்ந்த லிங்கம் போலவும், அதனை கீழே வைத்த ராவணன் பெயர்த்தெடுக்க பெரும் பாடுபடுவது போலவும் பெரும் பிம்பம் போல பேசிகொண்டிருக்கின்றார்கள்

அவரால் கட்சி வளருமாம்..வளர்ந்து? …

அது நாடார் கட்சியாக மட்டும் இருக்கும், அதனை வைத்து பாஜக என்ன செய்துவிடும்? அப்படிபட்ட விபரீத திட்டங்களில் பாஜக இறங்காதவரை நல்லது

அப்படி சரத்குமார் கட்டி தூக்கபட்டு கொண்டு செல்லபட்டாலும் தமிழிசை,பொன்னார் வரிசையில் அமர வைக்கபடுவார் அவ்வளவுதான் அதற்கு மேல் என்ன செய்துவிட முடியும்?

சரத்குமார் அம்மா ஆசியுடன் போட்டியிட்டே வாங்கிய வோட்டுகள் திருச்சந்தூரில் தெரிந்தது.

என்னமோ இந்து நாடார்கள் எல்லாம் பாஜகவிற்கு செல்லவேண்டும் என்பது போல பல பிம்பங்கள், கருத்துக்கள் சொல்லபடுகின்றன‌

அவர்கள் தோள்சீலை போராட்டம் முதல் பல போராட்டங்களை இந்த மாநிலத்தில் நடத்தியது வரலாறு, அய்யா வைகுண்டர் போராடினாலும் முழு விடுதலை, உரிமை அவர்களுக்கு கிடைக்கவில்லை

அதாவது சூத்திர சாதி என்றே அவர்கள் அடக்கபட்டிருந்தனர், ஒதுக்கபட்டிருந்தனர், ஆலயத்திலே அவர்கள் நுழைய சமூக‌ தடை இருந்தது

அதனை எல்லாம் போராடி மீட்டு கொடுத்து அவர்களை ஆலயத்தில் நுழைய வைத்ததே பெரியாரின் வழியும், அவர் வழிவந்த போராட்டமும்..

இதனை எல்லாம் மறந்துவிட்டுத்தான் காவிகொடி தூக்குகின்றார்கள்..