சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி மலேசியாவில் கொடுத்த பேட்டி….

Image may contain: 1 person, sitting

சமீபத்திய பேட்டிகளிலே பரபரப்பானது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி மலேசியாவில் கொடுத்த பேட்டிதான்

அன்னார் விளம்பர ஆட்டம் போட்டதும் அதனை அடுத்து நடிகர் சங்க கட்டடம் கட்ட 2.5 கோடி கொடுத்ததும் பழைய செய்தி, உடனே “நானும் ரவுடிதான்” படத்தில் 10 லட்சத்தை பார்த்ததும் எப்படி ஆனந்த ராஜ் விஜய்சேதுபதியினை கொண்டாடுவாரோ அப்படி நடிகர் சங்கமும் “நீயும் நடிகன்யா வாய்யா” அன்னாரை சேர்த்து கொண்டு மலேசியா பறந்தது

மலேசியாவில் அவர் பேட்டி கொடுத்திருக்கின்றார், விளம்பரத்தில் நடிக்கும் நீங்கள் சினிமாவில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு (இது ஆள்வைத்து அவரே கேட்டுகொண்ட கேள்வி போல) நல்ல கதை கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என சொல்லிவிட்டார்

நாம் இதனை முன்பே சொல்லியிருந்தோம், இவர் ஹீரோ ஆகாமல் விடமாட்டார் என சொன்னோம்

ஆக சரவணா ஸ்டோர்ஸ்குக்கு சேலை, பாத்திரம் என கொள்முதலுக்கு அலைபவர் இனி கதை கொள்முதலுக்கும் செல்வார்

“ஒரு நல்ல கதை இருக்கின்றது, பிளாட்பாரத்தில் சுக்கு காபி விற்ற கதை, உங்கள் தந்தை கதைதான் அது, நடிக்கின்றீர்களா? என ஒருபயலும் அவரிடம் கேட்கவில்லை

எப்படியோ “நாடார் சங்கங்கள்” கொண்டாட அடுத்த ஹீரோ ரெடி