சரித்திரம் சுழன்றுகொண்டேதான் இருக்கும்
வடகொரியா தென் கொரியா உறவு கொண்டாட தொடங்கி இருப்பதில் பலருக்கு மகிழ்ச்சி என்றாலும் ஜப்பானுக்கு கண்கள் சிவக்க தொடங்கியாயிற்று
காரணம் முன்பொரு காலத்தில் கொரியா அருகில் இருந்த தீவு யாருக்கு என்பதில் ஜப்பானுக்கும் கொரியாவுக்கும் பெரும் சண்டை நடந்தது
பின் ஜப்பானின் கொடூர அட்டகாசங்களும், கொரியாவினை அவர்கள் பிடித்திருந்த வகையும் அதை மறக்க செய்தன , பின்னாளைய கொரிய பிரிவுக்கு பின்னும் அது ஜப்பானிடமே இருந்தது
கொரியர்களின் தன்மான பிரச்சினை அந்த தீவு
கடந்தமுறை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கும் போதே நாங்கள் ஒன்றாகிவிட்டோம் இனி தீவினை விடமாட்டோம் என்பது போல இரு கொரியாக்கள் இணைந்த அணி சூசகம் காட்டிற்று
இப்பொழுது இரு கொரிய தலைவர்களும் சந்தித்தபொழுது கேக் வெட்டபட்டது, சும்மா அல்ல ஒரு சாக்கலேட் பந்தை இருவரும் உடைத்தபொழுது அதன் உள்ளிருந்த கேக்கில் அதே தீவு படம் இருந்தது
இதை கண்டதும் ஜப்பானின் கண்கள் சிவந்தன, இருவரும் ஒன்றானாலே ஆபத்து அதில் இந்த தீவு படத்தோடு வந்து எம்மை கடுப்பேற்றுகின்றார்களா? என அது சீறுகின்றது
எப்படியோ தங்கள் தன்மானத்தில் விழுந்த அடியான அந்த தீவினை விடமாட்டோம் என கொரியர்கள் அட்டகாசமாக தெரிவிக்கின்றார்கள்
இனி ஜப்பானை இரு கொரியாக்களும் இணைந்து மிரட்டலாம்
ஏற்கனவே இரண்டாம் உலகப்போரில் சீனாவில் ஜப்பான் செய்த கொடுமைகளை திருப்பி கொடுக்காமல் ஓயமாட்டோம் என சீறுகின்றது சீனா
இப்பொழுது கொரியாவும் அதே பாணிக்கு வந்தாயிற்று
சரித்திரம் சுழன்றுகொண்டேதான் இருக்கும் என்பது உலக தத்துவம்.