சர்ச்சையில் இளையராஜா
பொதுவாக இசை கலைஞர்கள் மற்ற விஷயங்களில் அவ்வளவு ஞானம் இல்லாதவர்கள் என்பது பொதுகருத்து, வரலாறு முழுக்க அது காண கிடக்கின்றது
எம்.எஸ் விஸ்வநாதனை கண்ணதாசன் கலாய்த்த வலை எல்லாம் வேறு வகை. ஆப்கன், காபூல், சோவியத், லெனின் என எதையும் அறியா விஸ்வநாதன் மாஸ்கோவில் டாரோவோஸ்கியின் நோட்ஸினை கண்டு பியாணோ வாசித்ததில் ரஷ்யர்கள் அவரை கட்டி தழுவி கொண்டாடினர்
இசை ஞானிகள் என்பவர்கள் அப்படித்தான்
இன்று அந்த சர்ச்சையில் இளையராஜா சிக்கிவிட்டார், அமெரிக்கா சென்ற அவர் இயேசு உயிர்த்தெழவில்லை ஆனால் ரமணர் 16ம் வயதில் உயிர்த்தெழுந்தார் என குண்டை தூக்கி போட்டுவிட்டார்
பெரிய வெள்ளிக்கு 3 நாள் இருக்கும்பொழுது, ஈஸ்டர் நெருங்கும்பொழுது விடுவார்களா கிறிஸ்தவர்கள்? பொங்கிவிட்டார்கள்
இயேசு உயிர்த்தெழவில்லையாம், ஆனால் 16 வயதில் எழும்பிய ரமணர் ஏன் அதன் பின் புற்றுநோயினை குணமாக்காமல் செத்தார்?
இந்த பகுத்தறிவாளர்கள்தான் இந்துக்கள் புராணம் பொய் என்பார்கள் , ஆனால் மணிமேகலையில் பூதம் வந்து மணிமேகலையினை தூக்கி சென்றது பற்றி பகுத்தறிவு பேசாது
இயேசு உயிரோடு வரவில்லையாம், ஆனால் சிறுதொண்ட நாயனாரின் மகன் மட்டும் சமைத்தபின்பும் உயிரோடு வந்தானாம்
இளையராஜா மீது அந்நாளிலே சர்ச்சை உண்டு, மிகசிறிய வயதில் கிறிஸ்தவ பாதிரியிடம் ஆர்மோனியம் கற்றதாகவும் ஏனோ அதை இறுதிவரை ஒரு இடத்திலும் சொல்லவில்லை என்றும் சில உறுதிபடுத்தபடா செய்திகள் உண்டு
அதெல்லாம் நிஜமோ என சந்தேகிக்க தோன்றுகின்றது
இளையராஜா இசையோடு தன்னை நிறுத்திகொள்ளுதல் நல்லது