சர்ச்சை மறுபடியும் பெரிதாக வெடிக்கின்றது…

Image may contain: 2 people, people sittingஇந்த ஜெயலலிதா எப்படி இறந்தார் என்ற சர்ச்சை மறுபடியும் பெரிதாக வெடிக்கின்றது.

ஆளாளுக்கு ஒன்றை சொல்லிகொண்டிருக்கின்றார்கள். ஒருவர் பார்த்தேன் என்கின்றார், இன்னொருவர் பார்த்தவனை பார்த்தேன் என்கின்றார்

ஜெயாவின் காலை காணவில்லை, இன்னும் எதனை எல்லாமோ காணவில்லை என்றொரு கும்பல் சொல்லிகொண்டிருக்கின்றது.

ஜெயா உடல்நிலை ஒன்றும் அதற்கு முன்பு அவ்வளவு நன்றாக இல்லை

2015களிலே அவர் நடக்கும்பொழுதே தடுமாறினார். பல கூட்டங்களை வீடியோ கான்பெரன்ஸ் முறையில்தான் நடத்தினார்

அவர் நெடுநாள்கள் காணாமல் போக, கலைஞரே ஜெயாவிற்கு என்ன ஆயிற்று என கேட்ட காட்சிகளும் உண்டு.

அந்த அளவிற்கு அவர் உடல்நிலை அன்றே கெட்டுபோய் இருந்திருக்கலாம்.

அவருக்கு சர்க்கரை நோய், உடல்பருமன் உட்பட ஏராளமான நோய்கள் இருந்திருக்கின்றன, மூட்டு பிரச்சினையிலும் சிக்கியிருக்கின்றார் , அவரின் BMI அளவு ஆபத்தானது என அன்றே எச்சரித்தார்கள்.

75 வயதிற்கு மேல் வரவேண்டிய நோய்கள் எல்லாம் 60 வயதிலே வந்திருக்கின்றன.

ஒன்று உறுதியாக சொல்லலாம்

சசிகலாவினை மீறி அவரால் ஒரு முடிவினையும் எடுக்க முடியாதபடி சிக்கியிருந்தார். சசிகலா அனுமதியின்றி அவர் செய்யகூடிய ஒரே விஷயம் சாப்பாடு

ஆக இனிப்புகளை அள்ளி அள்ளி விழுங்கியிருக்கலாம், ஜெயா இனிப்பு விருப்பமுள்ளவர் என்பது முன்பே வந்த செய்தி.

சசிகலா ஒப்புதலின்றி அவர் வாழ்வில் அவருக்கு இருந்த ஒரே சந்தோஷம் அதுவாக இருந்திருக்கலாம்

கட்சி, அரசு என எல்லாவற்றிலும் ஜெயாவிற்கு கடிவாளமிட்ட சசி, அவரின் உணவிலும் மருந்திலும் கட்டுபாடை விதித்திருந்தால் இன்று இப்பிரச்சினை வந்திருக்காது.

கட்சிமேலும், ஆட்சி மேலும் காட்டிய அதீத அக்கறையினை அவர் ஜெயலலிதா உடல்நலம் மேல் காட்டவில்லை.

தனக்கு இருந்த ஒரே சுதந்திரமான சந்தோஷத்தை ஜெயா தவறவிடவுமில்லை. அதுவே அவருக்கு வினையாயிற்று.