சர்வதேச வட்டிகடை என்பது பொருளாதார ஜாம்பவான்களால் நடத்தபடுவது

இந்த எனப்படும் உலகவங்கியிடம் ஒரு நாடு கடன் வாங்குவதும், அன்பு செழியனிடம் கடன் வாங்கி சினிமா தயாரிப்பதும் ஒரே ரகம்

அதனை காசுக்கு வோட்டு போட்டுவிட்டு தலையில் கைவைத்து அழுதுகொண்டிருப்பது போல என்றும் சொல்லலாம்

இந்த சர்வதேச வட்டிகடை என்பது பொருளாதார ஜாம்பவான்களால் நடத்தபடுவது, முதலில் உதவுகின்றோம் என உள்ளே வருவார்கள் பின் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளூர் தொழிலை அழிப்பார்கள், அவர்கள் வியாபாரங்களை புகுத்துவார்கள், ஒரு கட்டத்தில் அவர்கள் கையில் நாடு சிக்கிகொள்ளும்

இப்படி உலகின் பல நாடுகளை மிரட்டுவார்கள். இதனை புரிந்த சிலநாட்டு மக்கள், இதுதான் விஷயமா? நாம் எல்லோரும் சேர்ந்து நாட்டின் கடனை அடைப்போம் என கிளம்பிடுவார்கள்

1998ல் தென் கொரியா இச்சாதனையினை செய்தது, கிட்டதட்ட பல்லாயிரம் கோடிகளை அம்மக்கள் திரட்டி கொடுத்து நாட்டின் கடனை அடைத்தார்கள்

நாட்டின் கடன் ஏற ஏற என்னாகும் என்றால் , அதன் பணமதிப்பு பாதாளத்தில் வீழும், அப்படி வீழ்ந்தால் இறக்குமதி செய்யும் பொருளின் விலை அதிகரிக்கும், எல்லாம் நாசமாகும்

இந்தியா அப்படித்தான் நாசமாகிகொண்டிருக்கின்றது

இந்தியாவினை விடுங்கள், சில நாடுகளின் முன்பு நடந்த புரட்சியினை முதலில் ஆசியாவில் தென்கொரியா செய்தது

இப்பொழுது மலேசியாவிலும் அதற்கான அறிகுறி தெரிகின்றது, இவ்வளவிற்கும் அரசு வாய்திறந்து ஒருவார்த்தை சொல்லவில்லை

ஆனால் மக்கள் நாட்டை நேசிக்கின்றார்கள், இந்த சர்வதேச கடன் குறைந்தால் தங்கள் நாட்டின் பணமதிப்பு உயரும், பல விஷயங்கள் கட்டுக்குள் வரும் என உளமார நாட்டுபற்றோடு எண்ணுகின்றார்கள்

விளைவு, நாட்டின் கடனை அடைக்கும் திட்டத்திற்கு ஆதரவு பெருகுகின்றது, அள்ளி அள்ளி கொடுக்கின்றார்கள்

விரைவில் மலேசியாவும் அந்த அதிசயத்தை எட்டலாம், உலகம் இதனை உற்று கவனிக்கின்றது

இந்த மோடி வேறு நேற்று மகாதீரை சந்தித்துவிட்டு சென்றிருகின்றார், இனி இந்தியா திரும்பி ஆளுக்கு இவ்வளவு லட்சம் கொடுங்கள் இந்தியா கடனை அடைப்போம் என கிளம்பினாலும் கிளம்புவார்

அது சிக்கல் இல்லை, உடனே தும்பிகள் சும்மா இருக்குமா?

பிரியாணி அண்டாவினையே தூக்கிய கும்பல் அது, அதனால் வருவோர் போவோரிடம் வழிப்பறி செய்வது, வீடு கடை புகுந்து அள்ளுவது என செய்துவிட்டு, வெகு நிதானமாக முகமெல்லாம் மகிழ்ச்சியில் நாட்டை மீட்டுகொண்டிருக்கின்றோம் என முழங்கிகொண்டிருக்கும்

அதை நினைத்தாலே பகீர் என்கின்றது