சவுக்கு சங்கர்

Image may contain: one or more people and text

இந்த சவுக்கு சங்கர் மீது முன்பொரு ஒரு அபிமானம் இருந்தது, இன்றோடு அது போயிற்று.

ஆனால் கலைஞர் உண்ணாவிரதத்திற்கும், திலீபன் உண்ணாவிரதத்திற்கும் கூட வித்தியாசம் தெரியா மனிதர் எனும்பொழுது மிக்க வேதனையாயிற்று

இது கூட தெரியாத பிண்டமா? பெரும் … போல எழுதிகொண்டிருக்கின்றார்

மிக எளிதான விஷயம் அது, பிரமாண்ட ஆய்வெல்லாம் கூட தேவையில்லை. திலீபன் உண்ணாவிரதத்தின் மோசடிகள் அச்சூழலை நோக்கிய உடனே புரிந்துகொள்ள கூடியது

அப்படிபட்ட மகா அயோக்கிய உண்ணாவிரதம் அது, திலீபன் தற்கொலைபடையாய் செத்த நிகழ்வு அது

உண்ணாவிரத வகையிலே அது வராது, புலிகளின் தற்கொலை தாக்குதல் அது.

இது கூட தெரியாத நபரா பெரும் நிபுணர் போல் காவல்துறை, உளவுதுறை, மோடி என விமர்சித்துகொண்டிருக்கின்றார்?

அய்யோ பரிதாபம், பாரிசாலனுக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம்?

இந்த மனிதருக்கு வரலாறு தெரியவில்லை, ஆழ்ந்த அரசியல் ஞானமில்லை

ஏதோ ஒரு நாள் ஆடியோ விவகாரம் தொடர்பில் ஜாபர்சேட் இவரை அடித்தார், கலைஞர் ஜாபர்சேட்டினை கண்டிக்கவில்லை என்ற நோக்கிலே இவர் எழுத ஆரம்பித்திருப்பது புரிகின்றது

இவருக்கும் அந்த குபீர் போராளி கவுசல்யா என்பவருக்கும் வித்தியாசமில்லை

இந்த சவுக்கு என்பவர் நேர்மையான நபரில்லை , சவுக்கை சவுக்கால் அடிக்க வேண்டும்

மோடியினையும் இன்னும் சிலரையும் மிக மட்டமாக தரம் தாழ்ந்து விமர்சிக்கும் அளவு இவரின் அட்டகாசம் சென்றுகொண்டிருக்கின்றது

ஒரு சில காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்பில் இவர் ஆடுவது போல் தோன்றுகின்றது

தேசாபிமானிகளும், தமிழகம் அமைதியாக வளமாக வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களும் இந்த நபரிடம் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது


சென்னையில் அடையாள உண்ணாவிரதமா பிரபாகரன் இருப்பார்

பல்கலைகழகத்தில் மதிவதனி உண்ணாவிரதம் இருந்தாளா? பிரபாகரனின் புலிப்படை இரவோடு தூக்கி வந்து காப்பாற்றும்

ஆனால் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து செத்து போக திலீபனுக்கு கட்டளை இடபடும்.

கலைஞரும் அப்‍படி சாக வேண்டும் அப்படித்தானே?

பிரபாகரன் வீசிய எலும்பை பொறுக்கி தின்றவர்கள் ஏன் இங்கு உண்ணாவிரம் இருந்து சாகவில்லை, ஆமைகறி பிரியர்கள் ஏன் திலீபன் போல் சாகவில்லை?

கலைஞர் மட்டும் சாகவேண்டுமா? அம்மனிதர் மேல் இவ்வளவு வெறுப்பா..

நல்லவர்கள் திலீபன் போல் வைகோ, சைமன், நெடுமாறன் எல்லாம் ஏன் சாகவில்லை என கேளுங்கள், அட உண்ணாவிரதம்தான் இருக்கவில்லை தற்கொலை படையாக மாறி வீரகாவியம் படைத்தால் என்ன?

இதனை எல்லாம் ஒரு பயலும் கேட்கமாட்டான், ஒரே குறி கலைஞர்.

பிரபாகரன் சொன்னால் சயனைடு குடிக்கும் புலிகள், அதே பிரபாகரன் சொன்னால் நீர் குடித்து பிழைக்கமாட்டார்களா?

திலீபனை காப்பாற்ற பிரபாகரனால் முடிந்திருக்காதா? மருத்துவனே அவனை தொடாதே, திலீபனை மருத்துவமனைக்கு அனுமதியோம் என நின்றது யார்?

திலீபனை உண்மையில் கொன்றது யார்?

டேய்.. எங்கடா விடுறீங்க டூப்பு…