சவுதி அரேபியாவில் திரையரங்கம் திறக்கபட்டது
நீண்ட காலத்திற்கு பின் சவுதி அரேபியாவில் திரையரங்கம் திறக்கபட்டிருக்கின்றது
மிக இறுக்கமான சட்ட திட்டங்களை கொண்ட நாடு சவுதி, அதுவும் 1970 ஈரானிய புரட்சிக்கு பின் அதன் சட்டங்கள் மிக இறுக்கமாயின, திரையரங்குகள் மூடபட்டது அப்பொழுதுதான்
இப்பொழுது மிக பெரும் எண்ணெய் வளம் இருந்தாலும் சவுதி அரசு மக்களுக்கு வேலைவாய்ப்பு முன்னுரிமை, மக்களின் மகிழ்ச்சி என பல விஷயங்களில் கவனம் செலுத்துகின்றது
குறிப்பாக அவர்கள் அதிருப்தி அடைந்து புரட்சியில் ஏதும் இறங்கிவிட கூடாது எனும் அக்கறை அதிகம்
வெளிநாட்டவரை விரட்டுதல், பெண்கள் கார்வோட்ட அனுமதி என சவுதி கொஞ்சம் கொஞ்சமாக அந்நாட்டு மக்களை மகிழ்விக்கும் சட்டங்களை அறிவிக்கின்றது
மிக இறுக்கமான நாடு எனும் பிம்பத்தை அது மாற்ற முயல்கின்றது
சவுதி மக்கள் இப்பொழுது புது காற்றினை சுவாசிக்க ஆரம்பித்துவிட்டார்கள், இன்று முதல் திரையரங்குகளும் செயல்பட ஆரம்பித்தாயிற்று
ஆயினும் பலத்த சென்சார்களுக்கு பின்பே சினிமாக்கள் திரையரங்கம் வருமாம், மத சர்ச்சை படங்களுக்கு எல்லாம் இடமே இல்லை
விரைவில் சவுதி திரையரங்கில் தமிழ்படங்களும் தெரியலாம், அதில் தலைவி குஷ்புவின் படங்களும் வரலாம்
தலைவிபடம் திரையிடபடும் பட்சத்த்தில் உலக நாடுகளில் எல்லாம் தனி ரசிகர்பட்டாளம் இருப்பது போல சவுதியிலும் தலைவிக்கு தனி கூட்டம் சேரும்
அதுதான் “தானா சேர்ந்த கூட்டம்”