“சவுதி பத்தி சொன்னா அது பாதிக்கும்ணே”
“அண்ணே சவுதி அவன் நாடு, அவர்கள் சட்டம் அதை பற்றி நாம் பேச கூடாது
அப்படியா
ஆமாண்ணே அவனுக நாட்டுல அவனுக என்னமும் பண்ணட்டும்
சரி, இந்த ரொஹிங்கியா விவகாரத்துல ஏன் குதிச்சீங்க?
அது .. ஹிஹிஹி அத எப்படி பொறுக்க முடியும்ணேன்
இஸ்ரேல் ஒழிக, தனி பாலஸ்தீனம் எல்லாம் ஏன் கேக்குறீங்க? அவன் நாடு எப்படியும் போகட்டும்ணு விட்டுறவேண்டியதான?
அது எப்படிண்ணே அது பாவம்ணே, அநியாயம்ணே
இந்த டிரம்ப் சில நாட்டு மக்கள் வரகூடாதுன்னு சொல்றதுக்கு ஏன் கோப்பட்டீங்க
அது.. டிரம்ப் தப்புண்ணே
இந்த இலங்கை விவகாரத்துல ஏன் குதிச்சீங்க
அது நான் தமிழண்ணே
ஏண்டா அது அடுத்த நாடுதானே, அவன் சட்டபடி செய்யட்டும்
அப்படி எல்லாம் விட முடியாதுண்ணே
அப்ப சவுதி?
அண்ணே அவங்க கதை நமக்கு எதுக்குண்ணே,
ஏன் அப்படி?
இல்லணே அவங்கள பத்தி சொன்னா, அது ஒரு இனத்துக்கே அவமானமா படும்ணே, பல மக்கள் வாழ்ற நாட்டுல இது சரியில்லண்ணே
ஏண்டா ஐ.எஸ். அல் கய்தா எல்லாம் எவ்வளவு செய்யுது? அதுக்காக உங்களை எல்லாம் யார்டா குறை சொன்னாங்க? அண்ணன் தம்பியாதானடா பார்க்கின்றோம்
ஆமாணே, ஆனா சவுதி பத்தி சொன்னா அது பாதிக்கும்ணே”
இம்மாதிரி பேசுவது யாரென பார்த்தால் சவுதி குடியுரிமையினை மனதில் வைத்துகொண்டு, இந்திய குடியுரிமயினை பாக்கெட்டில் வைத்தலையும் சிலர்
இவர்களிடம் பேசி ஒன்றும் ஆகபோவதில்லை, நாம் விலகிகொள்வது நல்லது