சாப்பாடு சரியில்லை என புலம்புகின்றார் கார்த்தி சிதம்பரம்

ஏதோ தான் சுற்றுலா சென்றிருப்பது போலவும் , அங்கு விருந்து சரியில்லை என புலம்புவது போலவும் சாப்பாடு சரியில்லை என புலம்புகின்றார் கார்த்தி சிதம்பரம்

செட்டிநாட்டு சமையல் எல்லா இடத்திலுமா கிடைக்கும்?

மனிதர் மீது குற்றம் சாட்டபட்டிருக்கின்றது, அதனை சட்டபடி சந்தித்து வெளிவரவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார் அவர்

இது அவருக்கு மகா சிரமாமான காலம், இப்பொழுது தன் மீதான குற்றசாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டுமே தவிர, செட்டிநாட்டு சாப்பாடு கிடைக்கவில்லை என புலம்புவது சிறுபிள்ளைதனமும் வேடிக்கையுமானது

ஒரு பக்கம் ராகுல், இங்கே உதயநிதி ஸ்டாலின் என வாரிசுகள் எல்லாம் பயங்கரமாக தள்ளாடும்பொழுது ப.சிதம்பரத்தின் வாரிசும் தள்ளாடுகிறது

ப.சிதம்பரத்தை ப.சி என சுருக்கமாக அழைப்ப்பார்கள், அதற்காக அவர் மகன் பசி பசி என சொல்லிகொண்டே இருப்பது சரியல்ல‌