சாமான்ய பெண்மணி
அந்த சென்னிமலை ஜோதிமணி எனும் சாமான்ய பெண்மணிக்கு வாய்ப்பு கொடுத்து பெரும் வரவேற்பினை பெற்றிருக்கின்றார் ராகுல் காந்தி
அம்மணி காங்கிரசுக்காக வாழும் தொண்டர், அவருக்கு வாய்ப்பு கொடுப்பது நல்ல விஷயம், அதைத்தான் செய்ய வேண்டும்
காங்கிரஸில் பணமில்லா சாமன்யருக்கும் வாய்ப்பு வழங்கபடும் எனும் நம்பிக்கையினை விதைத்திருப்பதற்கு அவரை வாழ்த்தலாம்
இது இன்னொரு கட்சியில் சாத்தியமா என்றால் சத்தியமாக இல்லை
அப்படிபட்ட ராகுல், இந்த அளவு தமிழக காங்கிரசை கண்காணிக்கும் ராகுல் இந்த யழவுபட்ட காங்கிரசின் கோஷ்டி பூசலை ஏன் கண்டுகொள்ளவில்லை என்பதுதான் சோகம்
நிச்சயம் காங்கிரசுக்கு இங்கு வாக்குவங்கி உண்டு, பிரமாதமாக உண்டு
கணல் போல் அது உளன்றுகொண்டிருக்கின்றது, முறையாக பயன்படுத்தபடும் பட்சத்தில் பெருநெருப்பு மூட்டமுடியும்
அதற்கு இந்த கோஷ்டிகளை முதலில் ஒழிக்க வேண்டும், என்ன செய்யலாம்? தலைவர்களை தட்டி வைத்தால் கோஷ்டிகள் தானாய் ஒழியும்
அவர்கள் தனியே சென்றாலும் ஜிகே வாசன் போலத்தான் அலைவார்கள்
அதனால் உறுதியாக சொல்லலாம் ஜோதிமணி போன்ற இளம் தலைமுறையினை கைதூக்கிவிட்டு கட்சி வளர்க்கும் ராகுல் இந்த ஓய்ந்தபின்னும் கோஷ்டி அரசியல் செய்யும் பழம் தலைகளை அடித்துவிரட்டி கட்சியினை காக்கட்டும்
இதோ கன்னியாகுமரியில் கூட காங்கிரசுக்கு வெற்றிவாய்ப்பு உண்டு, ஆனால் பாழாய்போன கோஷ்டி பூசல் அங்கு பொன்னாருக்கு சாதகமாகின்றது
ராகுல் இந்த கோஷ்டி பூசலை ஒழிக்கட்டும், இளம் தலைமுறைக்கு வாய்பளிக்கட்டும், காங்கிரஸ் செழிக்கட்டும்
