சாமியார் அஸ்ரம் பாபு .. ஓஸ்ரம் பல்பு….
அஸ்ரம் பாபு எனும் சாமியார் சிறையில் அடைக்கபட்டு அவருக்கு ஆயிரம் கோடி சொத்து இருக்கின்றது என செய்தி வந்ததுதான் தாமதம்
கற்பழிப்பு சாமியாரின் பல்புகளை வாங்கமாட்டோ, உடைத்தெறிவோம் என ஒரு கும்பல் ஓஸ்ரம் பல்புகளை புறக்கணிக்க தொடங்கிவிட்டதாம். அது அவரின் கம்பெனி பல்ப் என எவனோ கிளப்பிவிட்டிருக்கின்றான்
அஸ்ரம் சாமியாருக்கும் ஜெர்மனியின் ஓஸ்ரம் பல்புகளுக்கும் என்ன சம்பந்தம்?
ஆனாலும் கொஞ்சமும் யோசிக்காமல் ஓஸ்ரம் பல்புகளை புறக்கணிப்போம் என ஒரு கும்பலும், இந்த சிகப்பு விளக்குகளை மட்டும் பயன்படுத்தாலும் என என்றொரு கும்பலும் சொல்லிகொண்டிருக்கின்றன
ஓஸ்ரம் பல்புகள் அஸ்ரம் சாமியாருக்கு சொந்தமானது என கிளப்பிவிட்டது ஓஸ்ரம் பல்பு கம்பெனியின் எதிர்பார்ட்டியாக இருக்க வாய்ப்பு உள்ளது
பிசினஸ் மைன்ட் என்பது இக்காலத்தில் இதுதான்
கலைஞருக்கு எதிராகவும் இதே பாணி அரசியல் வியாபாரமும் இங்கே நடந்தது