சாரா இப்பொழுது சிக்கலில்
சர்வ சக்தி படைத்த நாட்டின் பிரதமர் நேதன்யாகு அவரின் மனைவி சாரா
சாரா இப்பொழுது சிக்கலில் இருக்கின்றார், காரணம் அரசு அதிகாரத்தை பயன்படுத்தி சுவையாக தின்று தீர்த்துவிட்டாராம்
அம்மணி நம் வகை போலிருக்கின்றது, தேடி தேடி நாக்குக்கு சுவையானதை உண்டு கழித்திருக்கின்றது
ஆனால் “நான் யார் தெரியுமா? என் கணவனுக்கு டிரம்ப் வரை செல்வாக்கு உண்டு தெரியுமா?” என மிரட்டி உண்டிருக்கின்றது.
காக்கை குருவி எங்கள் சாதி என்பது போல உணவகம் இருக்குமிடமெல்லாம் அடித்து பிடித்து உருண்டு புரண்டு சாப்பிட்டிருக்கின்றது அம்மணி..
பாதிக்கபட்ட பலரும் சேர்ந்து வழக்கு தொடுத்ததில் அம்மணி 70 லட்சம் ரூபாய்க்கு கள்ள தீனி தின்றிருப்பது தெரிகின்றது.
வழக்கில் அம்மணிக்கு அபராதமும் அந்த பணத்தை திருப்பி கட்ட கால அவகாசமும் வழங்கி தீர்ப்பாகியிருக்கின்றது
நமது ஊரில் ஊழல் செய்து வீடு, கார், நகை, எஸ்டேட் என வாங்கி குவிப்பார்கள், இந்த அம்மணி அப்படியா செய்திருக்கின்றது?
பாவம் வாய்க்கு ருசியாக நன்றாக தின்றிருக்கின்றது, இதெல்லாம் அங்கு குற்றமாம்
இஸ்ரேல் அப்படித்தான் எந்த கொம்பனின் மனைவி என்றாலும் 1 பைசா என்றாலும் தப்பமுடியாது
மனைவியின் “உணவு ஊழல்” பற்றி கொம்பன் நேதன்யாகு இன்னமும் ஒன்றும் சொல்லவில்லை எனினும் கடன் அடைக்க வேண்டிய கஷ்டம் அவருக்கு
அம்மணி இவ்வளவு பெரும் உணவுபிரியையாக இருப்பது நமக்கே உற்சாகமாக இருக்கின்றது, இனி அவருக்கும் ஒரு சங்கம் தொடங்கலாம் என முடிவெடுத்திருக்கின்றோம்
யூதர்களும் மீன் விரும்பிகள் என்பதால், ஒருநாள் நமது மீன்குழம்பு விருந்துக்கு அவரை அழைத்தாக வேண்டும்
இது பற்றி உலக ஊடகங்கள் பரபரப்பாக விவாதிக்க, இதை முன் கூட்டியே உணர்ந்துதான் எங்கள் மோடி மனைவியினை பிரிந்து தனித்து நாட்டுக்காக வாழ்கின்றார் என கண்களை கசக்குகின்றது பாஜக கோஷ்டி
அவர்கள் என்ன?
இனி மோடியினை சந்தித்தால் நேதன்யாகு கூட அதைத்தான் நிச்சயம் நினைப்பார்..
