சாவிலும் சர்ச்சையா?
என்ன ராசியோ தெரியவில்லை
எம்ஜிஆரின் அடியொற்றி, அவர் வாழ்ந்தது போல வாழ்ந்து, அவரை போலவே தீரா புகழுடன் அமரர் ஆனார் ஜெயலலிதா
ஆனால் சாவில் சர்ச்சை என கிளம்புகின்றார்கள்
எம்ஜிஆருக்கும் இப்படித்தான் கிளம்பினார்கள், அதிகாலை எப்படி செத்தார்? ஏன் இரவு மோர் குடித்தார், உடல் நீலநிறமானதா? என பல சர்ச்சைகள் அன்று வெடித்தன
அவர் நோயுற்று அமெரிக்கா எல்லாம் சிகிச்சை பெற்று, நோயுடன் போராடி ஒரு அதிகாலை மாரடைப்பில் இறந்தார்
ஜெயாவிற்கும் கிட்டதட்ட அதே நிலை, 5 வருடம் முன்பு நடந்த ஜெயாவின் வீடியோவிற்கும் கடந்த வருடம் நடந்த நடைக்கும் வித்தியாசம் பாருங்கள், அவர் தள்ளாடித்தான் நடந்தார்
இதில் கலைஞர் வித்தியாசனாமவர், நடக்க முடியவில்லை வயதாகிவிட்டது, அவ்வளவுதானே இனி இப்படித்தான் என சக்கர நாற்காலியில் அமர்ந்து ஒருவனுக்கு வேலையும் வழங்கி “ஸ்டார்ட்” என சொல்லி இயங்க ஆரம்பித்தார்
ஜெயா அப்படி அல்ல, தனக்கே உள்ள சில பிடிவாத தயக்கங்களில் தன்னை மாற்றிகொள்ள மறுத்தார், மாறவில்லை. பின் மருத்துவமனை அது இது என சிக்கி இறந்தும் விட்டார்
சர்ச்சைகள் எம்ஜிஆருக்கு வந்தது போல , ஜெயலிதா மரணத்திலும் வந்திருப்பதுதான் மகா ஒற்றுமை
இருக்கட்டும்
ராகுல் காந்தி இறுதிவரை இருந்து அஞ்சலி செலுத்தினார். கூடவே தன் பெயரையும் கட்சிகளையும் அடிக்கடி மாற்றும் திருநாவுக்கரசரும் இருந்தார்
ஜெயலலிதாவினை பகைத்து அவரால் ஓட அடிக்கபட்ட அதே திருநாவுக்கரசு
அவரும் நடராஜனும் சிரித்து சிரித்து பேசிகொண்டிருந்தார்கள், எழவு வீட்டில் என்ன கூட்டணி அச்சாணி எழவோ தெரியவில்லை