சாஹேப் பதே சிங்
இந்தியாவின் சுதந்திர போராட்டம் 1650களில் வீரசிவாஜியால் தொடங்கிவைக்கபட்டது, சிவாஜி இந்துக்களுக்கான அரசனாக எழ அவனுக்கு ஆதரவு பெருக ஒரு கட்டத்தில் பூரண இஸ்லாமிய தேசமாக இந்துஸ்தானை அறிவித்து காசி மதுரா ஆலயங்களையும் இன்னும் நூற்றுகணக்கான இந்து ஆலயங்களையும் இடிக்க தொடங்கினான் அவுரங்கசீப்
அப்படியே சீக்கிய மதத்தையும் தடை செய்தான்
சீக்கிய குருவான தேஜ் பகதூரை அவன் மதம்மாற கோரியபொழுது அவர் மறுத்தார், அவரையும் அவர் குடும்பத்தாரையும் மிக கோரமாக கொன்ற அவுரங்கசீப் அவரை உயிரோடு தோல் உரித்து கொன்றான், அவரின் தலை அவர் மகன் கோவிந்த்சிங் கையில் கொடுக்கபட்டது
கோவிந்த்சிங் வயது அப்பொழுது ஒன்பது
சிவாஜி இந்து மன்னனாக முடிசூடிய 1674ல் வெறிபிடித்த நிலையில் இருந்த அவுரங்கசீப் அந்த கோபத்தை சீக்கியர்களிடம் இப்படித்தான் காட்டி கொண்டிருந்தான்
தந்தையின் கொடும் சாவும் அவுரங்கசீப்பின் இஸ்லாமிய வெறியும் சீக்கியர் மற்றும் இந்துக்களின் அடிமை நிலையும் கோவிந்த்சிங்கை போராட வைத்தன
அதுவரை அன்பு சமாதானம் என் போராடிய சீக்கியர்கள் இனி போராடாமல் வாழமுடியாது என வாளேந்தினார்கள், குரு கோவிந்த்சிங் எனும் அந்த குருதான் சீக்கியர்களை போருக்கு அழைத்தவர் சீக்கிய சமூகத்தில் பலத்த மாற்றங்களை செய்தவர் அதன் பின்பே சீக்கியர்கள் ஆயுதபோர் நடத்தினார்கள்
இந்த கோவிந்த்சிங்கை ஆனந்தபூரில் அவுரங்கசீப் முற்றுகையிட்டபொழுது அவரின் குடும்பம் தப்பியது எனினும் கடைசி இரு மகன்கள் மொகலாயரிடம் சிக்கினார்கள்
சிறுவர்கள் சிக்கினால் மதம் மாற்றி அவர்களை சொந்த இனத்தின்மேல் ஏவுவது அவுரங்கசீப் பாணி, அப்படி அந்த சிறுவர்களும் மதம்மாற்ற பணிக்கபட்டனர்
ஆனால் ஆறுவயதான அந்த சிறுவன் சாஹேப் பதே சிங் எனும் கோவிந்த்சிங்கின் கடைசி மகன் குரானை ஓதவோ கேட்கவோ மறுத்தான் தன்னால் முடியாது என சீறினான்
வெறும் ஆறே வயதான அந்த பாலகனை கூட வெறுப்பாக கண்ட அவுரங்கசீப் தளபதி முரடன் வசீர்கான் உயிரோடு புதைத்து அவன் மேல் சுவர் கட்டினான்
இந்துஸ்தான விடுதலைக்காக இளம் வயதில் செத்த மாவீரர்களில் முதல் இடம் அந்த பதே சிங் எனும் இளம் சிங்கத்துக்குத்தான்
1705ம் ஆண்டு டிசம்பர் 26ல் அக்கொடுமை அவுரங்கசீப்பால் நிகழ்த்தபட்டது
அந்த நாளை இன்று மோடி நினைவு கூர்ந்து, “வீர் பால் டிவாஸ்” எனும் நாளை அறிவித்து அந்த கொடிய கோர காட்சியினை நினைவு கூர்ந்தார், அப்பொழுது இந்திய வரலாறு தரவுகள் எந்த அளவு மக்களிடம் மறைக்கபட்டிருக்கின்றது என்பதை வருத்ததுடன் பதிவு செய்தார்
ஆம், அந்த அளவு இங்கு மொகலாயரின் கொடுமைகள் மக்களிடம் அடுத்தடுத்த தலைமுறையிடம் மறைக்கபட்டிருக்கின்றது, ஏன் என்றால் அதுதான் காங்கிரஸ்
இன்று அந்த பதே சிங்கின் நினைவு நாள்
ஆறு வயதிலே கொஞ்சமும் அஞ்சாமல் அந்நிய கலாச்சாரமும் மதமும் ஏற்கமாட்டேன் என உயிரோடு தன்னை புதைத்த அந்த நெஞ்சுரம் யாருக்கும் வாய்க்காது
இந்திய சுதந்திர வரலாற்றின் மிக இளம்போராளி அந்த ஆறுவயது பதே சிங், அவன் வீர வரலாற்றை சொல்லிதரவும் அவன் நாளை அனுசரிக்கவும் மோடி எனும் மாமனிதர்தான் இங்கு வரவேண்டியிருக்கின்றது
அந்த பதேசிங் அவன் அண்ணனும் அன்னையும் உயிரோடு புதைக்கபட்ட சுவர் இன்றும் பஞ்சாபில் உண்டு, அங்கு அஞ்சலி செலுத்திய மோடி இதனை பேசினார்
அந்த மாவீரன் இளஞ்சிங்கம் “பதே சிங்” எனும் சிங்க குட்டிக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்துகின்றது
வீரசிவாஜி காலத்துக்கு பின் அவன் வம்சத்துக்கும் இதுதான் நடந்தது என்றாலும் தாராபாய் எனும் அவன் மருமகள் படைதிரட்டி மொகலாயரை முடித்து வைத்தாள் அத்தோடு பிரிட்டிசார் வசம் நாடு செல்ல மொகலாயம் எனும் கொடுங்கோல் சாம்ராஜ்யம் முடிந்தது
ஆம், வீரசிவாஜியின் எழுச்சி என்னென்ன விளைவுகளை கொடுத்தது என்றால் இந்த ஆறுவயது பாலகனும் தன்னை தியாகம் செய்யும் அளவு பெரும் எழுச்சியும் வேகமும் இந்துஸ்தானத்தில் கொடுத்தது
பஞ்சாபின் பதேகார் குருத்வாரா என ஆந்த பதே ஷாஹிப் நினைவிடம் அந்த பாலகனின் நினைவுகளையும் அவுரங்கசீப் எனும் அரக்க குணமுடையவனையும் சுட்டிகாட்டியபடி நிற்கின்றது

