சிகிசை பெறும் வீடியோவும் படங்களும் : அன்றும் இன்றும்…
அந்த தேர்தல் விசித்திரமாக இருந்தது ராமசந்திரன் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தார், கட்சியில் ஜெயாவிற்கும் ஆர்.எம் வீரப்பனுக்கும் பனிப்போர் நடந்தது. கட்சி கடும் குழப்பத்தில் இருந்தது
வாய்பினை அட்டகாசமாக பயன்படுத்தினார் கலைஞர் , ஏற்கனவே மதுகடைகளால் பாதிக்கபட்டிருந்த ராமசந்திரன் இமேஜ் சரிந்தது, திமுக வெற்றிபெரும் நிலை உருவானது
அன்று அதிமுகவில் பேச்சாளர்கள் இல்லை (என்றுதான் இருந்தார்கள்?) இந்த பண்ருட்டி ராமசந்திரன் போன்றோர் எம்ஜிஆர் வருவார் என முணங்கிகொண்டிருந்தபொழுது கலைஞர் அசால்டாக சொன்னார்
“வருவார், மூட்டையாக வருவார்..”
மக்கள் அபிமானம் பெற்ற ராமசந்திரனை அசால்ட்டாக சொல்லிவிட்டார் கலைஞர், அந்த அளவு அவருக்கு ஆதரவு வந்தது, ராமசந்திரன் கட்சி அத்தோடு முடியும் நிலைக்கு வந்தது.
வீரப்பன் கும்பல் அதிர்ந்தது, உடனடியாக ராமசந்திரன் சிகிசை பெறும் வீடியோவும் படங்களும் வந்தன. பல்செட் இல்லாமல் தொப்பி இல்லாமல் ராமசந்திரனுக்கு தாத்தா போல இருந்த படங்கள் தமிழகத்தை வலம் வந்தன
உங்கள் பொனமன செம்மலை பாருங்கள் என மக்கள் மனதை கரைக்க ஆரம்பித்தன ரத்தத்தின் கிருமிகள். ராமசந்திரன் உடல்நிலைக்கு யார் காரணம்? அவரேதான் காரணம்
இப்படி நோயில் படுத்துவிட்ட மகராசனுக்கு ஏன் வோட்டு? அவர் வந்தும் என்ன செய்யபோகின்றார் என திமுகவினர் சொல்லிகொண்டிருந்தபொழுது எதிர்பாரா விதமாக இந்திரா படுகொலை நிகழ்ந்தது
காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்ததால் அந்த அனுதாப அலையில் வென்றார் ராமசந்திரன்
இந்திரா சுடபடும் முன் அவர்களுக்கு கை கொடுத்தது ராமசந்திரனின் ஆஸ்பத்திரி வீடியோ
இன்று ஆர்.கே நகரில் வந்து நிற்பது ஜெயா மருத்துவமனை வீடியோ
கட்சி ராசி அப்படி போல.
இது எங்கள் சாதனை என்றோ, இது எங்கள் மக்கட் பணி என்றோ ஒரு நாளும் அவர்கள் சொல்லி வோட்டு கேட்டதே இல்லை, ஏதும் செய்திருந்தால் தான் கேட்பதற்கு?
மாறாக இப்படி சினிமா காட்டி, வயதான காலத்தில் வீடியோ காட்டியே அனுதாப அரசியல் செய்வது அவர்களின் கலை
இவர்களை ஆளவிட்டால் என்னாகும் தமிழகமே மருத்துவமனையில் படுக்கும் நிலைக்கு செல்லாதா?
அப்படித்தான் ஐ.சி.யூவில் வைக்கும் நிலைக்கு தமிழகம் சென்றுகொண்டிருக்கின்றது
