சிங்கம் சசிகலா பேசுகிறார்..

ஜெயலலிதாவும் நானும் சென்னை ஜெயிலையும் பார்த்திருக்கிறோம். பெங்களூரு ஜெயிலையும் பார்த்திருக்கிறோம் :சசிகலா

ஆமாம், திகார் ஜெயிலை இனி இவர் மட்டும் பார்க்க போகின்றார்

சரி, இவர் சென்னை சிறைக்கும், பெங்களூர் சிறைக்கும் எதற்காக சென்றா?

நாட்டு விடுதலை? இந்தி எதிர்ப்பு? சாதி ஒழிப்பு? காவேரி பிரச்சினை? அணுவுலை? விவசாயிகள் பிரச்சினை? மீணவர் பிரச்சினை? ஜல்லிகட்டு?

குறைந்த பட்சம் மதுகடை எதிர்ப்பு?

இப்படி ஒன்றுமே இல்லை

மாறாக கொள்ளை அடித்த வழக்கில் உள்ளே சென்றுவிட்டு , ஏதோ தியாக வரலாறு போல பேசிகொண்டிருக்கின்றார்.

வருத்தம் தெரிவிக்க வேண்டிய இடத்தில், “அவளும் நானும்.. சென்னையும் பெங்களூரும்..” என கவிதை பாடுவது கொஞ்சமாவது பொருந்துமா?

கொஞ்சமும் அரசியல் தெரியவில்லை, என்ன பேசவேண்டும் என தெரியவில்லை, அதாவது யாரோ எழுதி கொடுத்த காலம் போய், பதற்றத்தில் தனக்கு தோன்றுவதை எல்லாம் பேசிகொண்டிருக்கின்றார்.

அரசியலில் எதனை பேசகூடாதோ அதனை பேசுகின்றார், எதனை எல்லாம் செய்ய கூடாதோ அதனை செய்கின்றார், இது எல்லாம் அவர் மீதான தமிழக வெறுப்பினை இன்னும் கனமாக கூட்டுமே ஒழிய குறைக்காது.

ஆக மிகுந்த பதற்றத்தில் தன்னையறிமால் உளறிவரும் சசிகலாவினை பற்றி சுருக்கமாக இப்படி சொல்லலாம்

தமிழகமே பார், “கொஞ்சம் கொஞ்சமாக தன் சுய அறிவில் பேசிகொண்டிருக்கும், தன் சுயரூபத்தை காட்டிகொண்டிருக்கும் சசிகலாவினை பார்..நன்றாக பார்”

மொத்த இந்தியாவும் காரி துப்பிய, இன்னும் கவர்ணர் யோசிக்கும் அந்த சிறை சமாச்சாரத்தையும், அந்த கரும் புள்ளிகளையும் இப்படியா பொது இடத்தில் நினைவுபடுத்துவார் சசிகலா?