சிங்கள சட்டம் திருத்தபடாமல் போக பிரபாகரனே காரணம்
இலங்கை அரசு சில சட்டதிருத்தங்களை செய்து இலங்கையில் ஒற்றை அரசு என்ற கொள்கையினை புகுத்திவிட்டதாம், சொல்பவர் யாரென்றால் திருமுருகன் காந்தி
எப்பொழுது சொன்னார் என்றால் மாவீரர் நாளில் அஞ்சலி செலுத்திவிட்டு சொன்னாராம்
ஆனானபட்ட ஜெயவர்த்தனேயுடன் ஒப்பந்தம் செய்து 13ம் சட்ட திருத்ததை செய்ய முன்வந்தது ராஜிவின் இந்தியா, ஒப்பந்தம் கைசாத்தும் ஆனது
ஆனால் என்னை கேட்காமல் என்ன ஒப்பந்தம்? என சண்டையிட்டு அதனை கிழித்தெறிந்தது சாட்சாத் பிரபாகரன்
இதுதான் வாய்ப்பு என துள்ளிகுதித்த சிங்களதரப்பு ஆம் ஒப்பந்தம் செல்ல சில நாட்களாகும் அமைதி திரும்பட்டும் என சொல்லிவிட்டு புலிகள் இந்திய மோதலை ரசித்தது
தலைகணத்தின் உச்சத்தில் இருந்த பிரபாகரன் ராஜிவினையும் கொன்றுவிட்டு ஒப்பந்ததையும் புதைத்தார்
சிங்கள சட்டம் திருத்தபடாமல் போக பிரபாகரனே முதல் மற்றும் ஒரே காரணம்
ஆனால் இந்த தி.காந்தி என்பவரோ பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு இலங்கை அரசு சட்டத்தை திருத்தி ஒரே நாடாக ஆக்குகின்றது என சொல்லிகொண்டிருக்கின்றார்
மிஸ்டர் திருமுருகன், அந்த 1987 13ம் சட்டதிருத்ததை கெடுத்தவனுக்கு அஞ்சலி, சிங்களனுக்கு கண்டனம்
இது என்ன கொள்கை? மண்டையில் அடி ஏதும் பட்டுவிட்டதா?