சிதறல்கள் தொடர்ச்சி
“நமக்குத்தான் படிப்பு இல்ல , நம்ம கட்சியில் படித்த ஒரே மனுஷன் இவர்தான்னு நிதியமைச்சர் ஆக்கிவைச்சா இவரு நாட்டை சுத்தமா கெடுத்துட்டாரு, இவரால வெளில தலைகாட்ட முடியல
வெளிநாட்டுல எல்லாம் போய் படிச்சாராம்? போலி பட்டம் வச்சிருப்பாரோ?”
***************
ஈழத்தில் தமிழரை கொல்கின்றார்கள் என ஓலமிட்ட பயலை எல்லாம் சொந்த நாட்டு ராணுவத்தார் செத்து கிடக்கும்பொழுது காணவே இல்லை
சிரியாவில் கொல்கின்றார்கள், பாலஸ்தீனத்தில் கொல்கின்றார்கள் என ஓலமிட்ட கும்பலையும் இப்பொழுது காணவே இல்லை
ஒரு கும்பலை இலங்கைக்கும் ஒரு கும்பலை சிரியாவுக்கும் அனுப்ப வேண்டிய நேரமிது
*******************
சின்னதம்பி யானை பிடிபட்டது
நல்லது, இத்தோடு அதை காட்டுக்குள் விட்டுவிடவும்,
அடுத்த யானை வரும்பொழுது அதற்கு “சிங்கார வேலன்” “அண்ணாமலை” என பெயர் வைக்க வேண்டாம், வைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என வனதுறைக்கு சங்கம் எச்சரிக்கின்றது
********************
மோடி அரசு என்ன செய்தது என்ன சாதித்தது என்பதை சுருக்கமாக சொல்லிவிடலாம்
மோடிக்கு முன்பு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு என்ன இருந்தது? இப்பொழுது என்ன இருக்கின்றது?
பெட்ரோல் விலை 2008களில் இருந்ததை விட சல்லியாக இப்பொழுது இருக்கும்பொழுது ஏன் இந்த பெட்ரோல்விலை ஏற்றம்?
எந்த ஆட்சியில் 2000ரூபாய் நோட்டினை இந்தியா கண்டது? கரன்சியில் ரூபாயின் மதிப்பினை ஏற்றினால் நாட்டின் பணம் வீழ்ச்சி என்பதன் அர்த்தமா இல்லையா?
தற்காலிக ஏற்பாடு என்றவர்கள் இறுதிவரை 2000ரூபாயினை மாற்றாதது ஏன்?
ரிசர்வ் வங்கியின் உபரிநிதியில் கை வைக்க துணிந்த முதல் மற்றும் ஒரே அரசு இது, ஏன் அப்படி ஒரு அவசியம்?
பொருளாதார ரீதியாக இந்த அரசு மாபெரும் தோல்வி அடைந்திருக்கின்றது அதை யாராலும் மறுக்க முடியாது
எங்கள் ஆட்சியில் பாதுகாப்பு மிக சிறப்பு என்றார்கள், இப்பொழுது அதிலும் கோட்டைவிட்டு கிளம்புகின்றார்கள் அவ்வளவுதான் விஷயம்
*****************
காஷ்மீரில் ஒரு தலித் கொல்லபட்டிருந்தால் இங்கு சமூக நீதி என்னானது? என காப்பாற்ற மொத்த திராவிட மற்றும் தலித்திய தலைவர்கள் எல்லாம் கிளம்பியிருப்பார்கள்
எப்படியெல்லாமோ ஆடி தீர்த்திருப்பார்கள்
ஆனால் 45 வீரர்கள் கொல்லபட்டதில் ஒரு திராவிட கருப்பு சட்டையோ இல்லை வேறு இம்சைகளோ ஒரு வார்த்தை பேசியதாக கூட தெரியவில்லை , ஏன் கண்டித்ததாக கூட தெரியவில்லை
இதுதான் இவர்களின் நாட்டுபற்று.