சிதறல்கள்
பெட்ரோல், டீசலில் அதிக வரி கிடைக்கிறது: மாநில அரசு ரூ.6.5 வரை குறைக்கலாம்: ஆதாரத்துடன் ராமதாஸ் விளக்கம்
காமெடி கருத்துக்களை சீரியசாக இவர் அடிக்கடி சொன்னதால் இப்பொழுது நல்ல கருத்தை சொன்னாலும் கேட்க யாருமில்லை
ராமதாஸ் சொல்வது சரியான விஷயம், ஆனால் பழனிச்சாமியா செய்வார்?
பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் , மாட்டுகறி கொலைகள் என கலவரத்தையும் கொலைகளையும் மொத்த குத்தகைக்கு எடுத்திருக்கும் பாஜகவினர் திமுகவினை அடிதடி கட்சி என்பதுதான் இன்றைய காமெடி
எல்லோரு அடிதடி பற்றி பேசுகின்றார்கள் என்பதற்காக அகில இந்திய பெரும் கலவர கட்சியான பாஜக உறுப்பினர்களா பேச வருகின்றார்கள்?
திமுக அடிதடி எல்.கே.ஜி லெவல் என்றால் பாஜக அடிதடி பி.எச்டி லெவல்
பாஜகவினர் இதில் எல்லாம் பேசவே முடியாது, ஆனாலும் பேசிகொண்டிருக்கின்றார்கள் பரிதாபம்
சந்தடி சாக்கில் உலகமகா கொலைகாரன் பிரபாகரனின் படம் பிடித்து கொண்டு நாம் தமிழரும் “திமுக அடிதடி கட்சி” என கத்துவது அதை விட காமெடி
குழப்பிகொண்டே இருக்கின்றாய் உன் அரசியல் நிலைப்பாடுதான் என்ன என சிலர் கேட்பதால் சொல்லிவிடலாம்
தனிபட்ட விருப்பு வெறுப்பு வேறு, கள யதார்த்தம் வேறு
நாம் தேசியவாதி என்றாலும் தேசிய கட்சிகளே தமிழகத்தில் கட்சி வளர்க்க சுத்தமாக விரும்பவில்லை, அக்கறையுமில்லை
அது வளராது என அவர்களே மனமார நம்புகின்றார்கள்
தமிழகத்தை பொறுத்தவரை ஜாதி மதம் தாண்டிய கட்சிகளே வேண்டும், இதில் அதிமுக என்பது உருப்படாத கொள்கையற்ற ஊழல்கட்சி.
அதனால் காங்கிரஸும் திமுகவுமே தமிழக சூழலுக்கு பொருந்த கூடியவை
இதில் ராஜிவ் செத்துமே கட்சி வளர்க்க தெரியாத கட்சி காங்கிரஸ், காங்கிரசுக்கு எதிரி அதன் கட்சிக்காரர்களே
இதனால் இப்போதைக்கு பொருத்தமான கட்சி திமுக, அது இந்து எதிர்ப்பு இந்திய எதிர்ப்பு என்ற இரண்டையும் கையில் எடுக்காதவரை அது தமிழகத்திற்கு சரியான தேர்வு
இந்த விவகாரம் இப்படித்தான் நிற்கின்றது, மொத்தத்தில் ஆளுநர் 7 பேர் விடுதலை, இந்த ஜெயாவிற்கு பாரத ரத்னா போன்ற அரசின் தீர்மானங்களுக்கு சிரித்து முடித்து விட்டு கோபமாக ஆட்சியினை கலைக்க வேண்டிய நேரமிது
இப்படி ஒரு சிக்கலும் அவமானமும் எந்த அரசுக்கும் வந்ததில்லை, அப்படி ஒரு மாபெரும் அவமானம்
எப்படி?
எடப்பாடி பழனிச்சாமி மேல் சில குற்றசாட்டு உண்டு அதை விசாரிக்க வேண்டியது விஜிலென்ஸ் துறை, ஆனால் அதன் தலைவரான ஐஜி பாலியல் குற்றசாட்டில் சிக்கி இருக்கின்றார், அதாவது காமசேட்டை
இந்த விஜிலென்ஸ் ஐஜியினை
விசாரிக்க வேண்டிய காவல்துறை டிஜிபிகுட்கா வழக்கில் சிக்கி இருக்கின்றார்
இந்த டிஜிபி என்பவர் யாரால் விசாரிக்க படவேண்டும் என்றால் எடப்பாடி பழனிச்சாமியால் விசாரிக்க பட வேண்டும்
புரிந்ததா? சரி இன்னொரு முறை சொல்லலாம்
எடப்பாடி குடுமி விஜிலென்ஸ் ஐஜியிடம் இருக்கின்றது, விஜிலென்ஸ் ஐஜி குடுமி டிஜிபியிடம் இருக்கின்றது
டிஜிபியின் குடுமி பழனிசாமியிடம் இருக்கின்றது
இவர்கள் எப்படி விசாரிப்பார்கள்? ஒருவரை ஒருவர் பார்த்து கவுண்டமணி ஸ்டைலில் சிரித்து கொண்டே இருப்பார்கள்
மூவரும் அவரவர் துறையில் உச்ச தலைவர்கள் என்றபின் தமிழக நிலை எப்படி இருக்கும்?
ஆளுநர் மிக அவசரமாக அறிக்கை தயாரித்து இந்த காமெடி ஆட்சியினை வீட்டுக்கு அனுப்பும் நேரமிது