சிதறல்கள்
செவ்வாய் கிழமை என்றால் இப்படித்தான் செக்க சிவந்து இருக்க வேண்டும்
செவ்வாய் கிழமையில் “செவ்வாய் நல்லாள்” தரும் அபூர்வ தரிசனம்..

“வெண்தாடி வேந்தர் மோடி” என்றவுடன் பகீரென்றது, ஆனால் உற்று பார்த்தால் “கதைகளின் கதை” என நிகழ்ச்சி பெயரை சொல்கின்றார்கள்
கதைதானே, வேறு எப்படி இருக்கும் இப்படித்தான் இருக்கும்
காமெடி கதை போல…
(ஆனாலும் வைகுண்டராஜன் அண்ணாச்சி தாதுமணல் உரிமத்திற்காக இப்படி மோடியினை வெண்தாடி வேந்தர் என்றெல்லாம் சொல்வது கொஞ்சம் ஓவர்தான்
ஒருவேளை லைசென்ஸ் கிடைத்துவிட்டால் அண்ணாச்சி டிவிக்கு மோடி தாடி வைத்த காந்தியாக தெரிவார் போல..)

அதிமுக தொண்டர்கள் கைகாட்டுபவரே பிரதமர் : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
மிஸ்டர் பழனிச்சாமி , மக்கள் கைகாட்ட வேண்டாமா?
எங்கே? மக்களை கைகாட்ட சொல்லுங்கள் பார்க்கலாம், உங்களை நோக்கி செருப்பைத்தான் காட்டுவார்கள் பரவாயில்லையா?.
“பங்கு, தமிழ்நாட்டில என்ன சத்தம்? அந்த ராசா ஏதோ குழப்பிட்டு இருக்காராம் என்னாச்சி?
பங்காளி, 4 நாளா பெட்ரோல் விலை அது இதுன்னு ஒரே சத்தம், என்ன செய்யலாம்னு யோசிக்கும் போது விநாயகர் கிடைத்தார். அதை வைத்து நமது கட்சிக்காரர்கள் விஷயத்தை திருப்பிவிட்டார்கள். எப்படி நமது ராஜதந்திரம்?
அட்டகாசமான திட்டம் அமித், இதற்குத்தான் தமிழகத்தில் அவர்களை வைத்திருக்கின்றோமா?
பின் ஆட்சியினை பிடிக்கவா வைத்திருக்கின்றோம், இவர்களால் நமக்கும், நமது அடிமை பழனிச்சாமிக்கும் எவ்வளவு அனுகூலம் தெரியுமா
அப்படியா?
பின்னே பெட்ரோல் விலை இன்று 85ஐ தாண்டிற்று, ஆனால் தமிழ்நாட்டில் பூரா பயலும் எச்.ராசா என்றே ஊளையிட்டுகொண்டிருக்கின்றான், அவரையோ அவர் ஆட்சி ஊழலையோ பெட்ரோல் விலையினையோ ஒரு பயலும் கண்டுகொள்ளவில்லை
ராமர், விநாயகர் என ஏகபட்ட தெய்வங்கள் இருப்பதன் மகத்துவம் இப்பொழுதுதான் நமக்கு புரிகின்றது பங்கு, ஓவ்வொரு தெய்வத்தையும் வைத்து ஒவ்வொரு அரசியல் செயலாம்
எப்படியோ பங்கு இந்த எச்.ராசாவுக்கும் தமிழிசைக்கும் பாரத ரத்னா கொடுத்துவிட வேண்டும். தமிழக மக்களை திசைதிருப்ப எப்படி எல்லாம் உழைக்கின்றார்கள்?, அந்த பாரத ரத்னாவினை இருவருக்கும் கொடுக்காவிட்டால் அந்த பாவம் நம்மை சும்மா விடாது, விடவே விடாது”

இப்பொழுதெல்லாம் திமுகவினருக்கு சிசிடிவியும் பாஜகவினருக்கு கேமராவும் மகா அலர்ஜி
இப்பொழுதெல்லாம் கேமராவினை கண்டால் கொஞ்சமும் அச்சமின்றி வந்து நிற்பது பழனிசாமி & கோ
ஆம், எல்லாவற்றையும் துறந்த ஜென் நிலைக்கு சென்றுவிட்டார்கள்
திமுக ஆட்சிக்கு வந்தால் மக்களின் நிம்மதி போய்விடும் : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
அதிமுக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதா செத்ததற்கே கமிஷன் வைத்து விசாரிக்கின்றார்கள், இதை விட என்ன கொடுமை வேண்டும்
மிஸ்டர் பழனிச்சாமி, திமுக ஆட்சியில் நிம்மதி எப்படி பறிபோகும்? இப்பொழுது நிம்மதியாக இருந்தால்தானே பறிபோகும்?
மக்கள் உயிராவது இந்த ஆட்சியில் மிஞ்சுமா என கடும் கவலையில் இருக்கும்பொழுது முதல்வருக்கு காமெடி வருகின்றது
நிச்சயம் திமுக ஆட்சி இந்த ஆட்சியினை விட மகா சிறப்பானதாகவே அமையும்
இதனை விட மோசமான ஆட்சியினை கொடுக்க செத்து போன இடி அமீனாலும் முடியாது என்பதால் நீங்கள் தைரியமாக வீட்டுக்கு செல்லலாம் பழனிச்சாமி