சிதறல்கள்
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது, புதன் கிடைத்தாலும் குஷ்பு போல் ஒருவர் வரவே மாட்டார்.
இனிய புதன் வணக்கம்..

———————————————————————————————————————————–
விஸ்வாசம் படத்தின் சண்டைக் காட்சி இணைய தளத்தில் லீக் – படக்குழுவினர் அதிர்ச்சி
இந்த அஜித்குமார் என்பவர் ஏதோ ஜெட்லி, புரூஸ்லி, ஜாக்கிசான் அளவிற்கு பறந்து பறந்து சண்டை போட்டவர் போலவும், அந்த காட்சிகள் லீக் ஆனதால் உலகமே பரபரப்பானது போலவும் பில்டப்.
ஒரு கன்றுகுட்டியினை மிக கஷ்டபட்டு அடக்கியவன் ஜல்லிகட்டு போட்டிக்குள் நுழைந்தால் எப்படி இருக்கும்?
அப்படித்தான் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் மிக சிரமபட்டு ஹாங்காங் அணியினை வென்ற இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்ள போகின்றது
அன்று 1953ல் கலைஞருக்கு நடந்தது விபத்தா இல்லை திட்டமிட்ட சதியா என இன்றுவரை தெரியாது
ஆனால் பயங்கர விபத்து, அவர் பிழைத்தாலும் அவரின் ஒரு கண் பார்வை பாதிக்கபட்டது, இறுதிவரை அது சரியாகவில்லை
ஒரு கண்ணுடனேத்தான் அவர் இறுதிவரை சமாளித்தார்
அதன் பின் 1967ல் மீண்டும் பயங்கர கார்விபத்தில் சிக்கினார், தப்பி பிழைத்தார்
ஏன் சொல்கின்றோம் என்றால், அன்று அவருக்கு விபத்தாகி உயிருக்கு ஆபத்தான நிலையிலும், ஏன் கண்ணே பறிபோன நிலையிலும் லாரி டிரைவரை பிடித்து திமுகவினர் சாத்தவில்லை, அடித்து நொறுக்கவில்லை
எத்தனையோ முறை ஆட்சிக்கு வந்தபின்னும் அந்த லாரி டிரைவர் யார் என அவர் தேடி திரியவில்லை, பழிவாங்க துடிக்கவில்லை
கலைஞரும் திமுகவினரும் அதை விபத்தாகவே கருதினர், கலைஞரின் பெருந்தன்மை அப்படி
அதுதான் கலைஞர்
அந்த கண்பார்வை பறிபோன நிலையில்தான் , இன்னொரு கண்ணையும் காப்பாற்ற கண் மருத்துவருடன் அவர் அடிக்கடி பேசும் நிலையில்தான் கண் சம்பந்தமான பிரச்சினைகளை அறிகின்றார்
எல்லா மக்களும் அச்சிகிச்சை பெற கண்ணொளி திட்டம் என்றொரு திட்டத்தை பின்பு அறிவிக்கின்றார். தனக்கு ஒரு கண் சென்ற நிலையிலும் மக்களின் கண்களை பற்றி சிந்தித்த மனம் அவருக்கு இருந்திருக்கின்றது
ஆனால் ஆட்டோ மோதியதற்காக தமிழிசை & கோ செய்யும் அலப்பறைகள் எல்லாம் மிக மிக கொடுமையானவை
இனி அவர்களுக்கு தேர்தலில் டெப்பாசிட்டும் போய், அபராதமும் விதிக்க வழிசெய்யும்
அஸ்திவாரம் இல்லா நிலையிலே இந்த ஆட்டம் என்றால் , கொஞ்சம் காலூன்றினால் என்ன ஆகும்?

—————————————————————————————————————————————
சில நடிகைகள் தான் சிலிக்கான் சிகிச்சை செய்து மார்பகத்தை பெரிதாக்குவார்கள் , அறுவை சிகிச்சை மூலம் இடுப்பை குறைப்பார்கள் என என செய்திகள் வரும்
இனி அங்கிள் சைமனை பற்றியும் அப்படி செய்திகள் வரலாம்.

—————————————————————————————————————————————–
மனிதர்களைப் போல ஆடு, மாடுகளை பேச வைக்க நித்தியானாந்தா நடவடிக்கை
முதலில் உங்கள் ஆசிரம பெண்களை சுதந்திரமாக பேசவிடுங்கள் சுவாமிஜி, ஆடுமாடுகளை பின்னர் பார்க்கலாம்
—————————————————————————————————————————————–