சிதறல்கள்

சர்ச்சை பேச்சு பேசிய கருணாஸ் கைது

சினிமாவில் வசனம் பேசியது போல் பொதுகூட்டத்திலும் பேசிவிட்டார், சட்டையினை கழற்றிவிட்டு சண்டைக்கு வாடா என காவல்துறையினை அழைக்காமல் நிஜத்தில் உள்ளே சென்றுவிட்டார்

எனினும் அந்த கூட்டத்தின் எடப்பாடிக்கே தன் மீது பயம் என்றும், தன் மேல் கைவைத்தால் இன்னும் பல ரகசியங்களை வெளியிடுவேன் என மிரட்டினார்

அந்த ரகசியம் வருமா வராதா என தெரியாது, எனினும் கருணாஸ் அமைச்சராகி பழனிச்சாமியின் வலது பக்கம் அமர்ந்துவிட்டால் ரகசியம் இருப்பதாகவே அர்த்தம்

ஆம் இந்த பன்னீர்செல்வமும் ரகசியம் வெளியிடுவேன் என்றார் துணை முதல்வரானார்

விஜயபாஸ்கர் குட்கா ஊழலில் சிக்கியபின் ரகசியம் காக்கவே கட்சியில் முக்கிய பொறுப்பு அளிக்கபட்டது

இனி கருணாசும் சபாநாயகராகவோ இல்லை அமைச்சராகவோ ஆனாலும் ஆச்சரியமே இல்லை

அக்கட்சியின் நிலவரம் அப்படி

—————————————————————————————————————————————–

வேலூர் சிறைக்கு அனுப்பட்டார் கருணாஸ்

பின்னே பேசிய பேச்சுக்கு பாளையங்கோட்டைக்கும், நாகர்கோவிலுக்குமா அனுப்ப முடியும்???


இந்தி எதிர்ப்பு என அதை விரட்டி விட்டாலும் விட்டார்கள், இப்பொழுது மோடியினை பலர் இந்தியில் திட்டும் பொழுது ஒரு மண்ணும் புரியவில்லை

இது இந்தியினை விரட்டி விட்ட வீரமண் அல்லவா? பின்னர் ஏன் இந்தியிலே அவரை கலாய்க்கின்றார்கள்?

மேரா பிஎம் சோர் ஹே என்பதை தமிழ்படுத்தி ஒரு பயலும் சொல்வானா என்றால் இல்லை

இந்த விஷயத்தில் இந்தியினை எதிர்க்காத அயோக்கியர்களை கண்டிக்கின்றோம்

இனி தமிழிசை என்ன சொல்வார், “அட இந்தி பேசமாட்டேன் என சொன்னவனை எல்லாம் பேச வச்சிட்டார் பாத்தியா மோடி, என்னாமா சைஸ் போடுறார்..”


 

என்னதான் சர்ச்சை இருந்தாலும் பாஜக அரசின் சில முக்கிய சாதனைகளை சொல்லித்தான் ஆகவேண்டும்

நிச்சயம் தங்கநாற்கர சாலை திட்டம் அவர்களின் முத்தாய்ப்பு, நாட்டிற்கு மிக அவசியமான திட்டமும் கூட. அது வந்தபின் நாடுமுழுக்க சாலை பயணம் எளிதாயிற்று

சாகர்மாலா திட்டமும் வரவேற்கதக்கது

இந்த வரிசையில் பாஜக அரசின் மகத்தான திட்டம் பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டம், நேற்று மோடி அறிவித்திருக்கின்றார்

நிச்சயம் ஏழை மக்களுக்கு வரபிரசாதமான திட்டம், ஏன் அரசு மருத்துவமனைகளை பெரிதாக்கி தரமான மருத்துவர்களை நியமித்தால் என்ன? என ஆளாளுக்கு கிளம்புவார்கள்

அவர்கள் கிளம்பட்டும், எல்லா விஷயமும் சாத்தியமில்லை, ஆனானபட்ட அமெரிக்காவிலே தனியார் மருத்துவமனைகள் அதிகம்

மருத்துவ செலவுகள் மிகுந்துவிட்ட இக்காலத்தில் பல கோடி இந்திய மக்கள் பயன்பெறும் இந்த மகத்தான திட்டத்தை அறிவித்ததற்காக மோடியினை பாராட்டலாம்

இதை தமிழகத்தில் கலைஞர் செய்தார் என்பார்கள், அதற்கு முன்பே அமெரிக்காவில் ஓபாமா செய்தார்

சோவியத ரஷ்யாவும் கியூபாவும் எல்லா மக்களுக்கும் அதற்கு முன்பே இலவச மருத்துவம் கொடுத்திருந்ததால் காப்பீடு அவசியமில்லை

ஓபாமா கேர், கலைஞர் காப்பீட்டு திட்டம் என தனிபட்ட விளம்பரம் செய்தார்கள், ஆனால் மோடி “பிரதமர் காப்பீட்டு திட்டம்” என செய்திருக்கின்றார். அப்படித்தான் செய்யவும் வேண்டும், பாராட்டுக்கள

இதை எல்லாம் தமிழக பாஜகவினர் எடுத்து சொல்ல வேண்டும், ஒவ்வொரு தமிழனும் இதனால் பயன்பெறுவான் என மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்

அவர்களோ கருணாஸ் பின்னால் ஓடுகின்றார்கள், பிள்ளையார் சிலைபின்னால் ஓடுகின்றார்கள், வாய்ப்பு கிடைத்தால் பிரியாணி அண்டா தேடி ஓடுகின்றார்கள்

இதெல்லாம் அக்கட்சிக்கு நல்லதல்ல‌

தேசமே பிரதமரின் காப்பீடு திட்டத்தை கொண்டாடும் பொழுது, காஷ்மீர் தீவிரவாதிகளே நமக்கும் காப்பீடு உண்டா? என மனம் உருகி நிற்கும்பொழுது தமிழக பாஜகவிடமிருந்து மட்டும் சத்தமே இல்லை

அது வரவும் வராது.

Image may contain: 1 person, text
—————————————————————————————————————————————–
“தோன்றிற் குஷ்புகாலத்து தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று”
—————————————————————————————————————————————–

“செக்க சிவந்த வானம் ” படத்தின் இரண்டாம் டிரைலர் வந்திருக்கின்றது, என்ன பேசுகின்றார்கள் என பார்த்தால் அதிர்ச்சி வருகின்றது

“பெரியவருக்கு பிறகு அந்த இடம் யாருக்கு?” என அணல் பறக்கின்றது

இது என்ன வசனம் என யோசித்தால் கலைஞர் சமாதி வந்து போகின்றது, அப்படியே இந்த சிம்பு அரவிந்த்சாமி விஜய் சேதுபதி எல்லாம் மோதுவதை பார்த்தால் அழகிரி கனிமொழி முகமெல்லாம் வருகின்றது

படத்தின் அடிதடி காட்சிகளை பார்க்கும் பொழுது மதுரை சம்பவங்களும் நினைவுக்கு வருகின்றன.

படத்தின் பெயர் “செக்க சிவந்த வான”மாம், வானம் எப்பொழுது சிவக்கும்? சூரியன் உதிக்கும் பொழுதும் அடையும் பொழுதும் சிவக்கும்

ஆக உதயசூரியன்

சந்தேகமில்லை, கலைஞருக்கு பின்னரான திமுகவின் கதையினை மையமாக வைத்து மணிரத்னம் இந்த படத்தை தீட்டி இருக்கலாம்


நிலாவிற்கு 2025ல்குள் சுற்றுபயணிகளை அழைத்து செல்ல அமெரிக்க ஐரோப்பிய நிறுவணங்கள் இலக்கு வைத்து செயல்படுகின்றன‌

இங்கோ சாய்பாபா தெரிகின்றார் , இன்னும் யாரோ தெரிகின்றார் என ஏக அழிச்சாட்டியம்

உருப்படும் வழி இருப்பதாக கொஞ்சமும் தெரியவில்லை.. நிலாவிற்கு சென்றாலும் அங்கும் ஆசிரமம்தான் அமைப்பார்கள் போல..


தேசியமும் தெய்வீகமும் கண்கள் என சொன்ன தேவர் அய்யாவினை விழுந்து விழுந்து கும்பிடுங்கள்

ஆனால் வோட்டினை மட்டும் ராமசந்திரனுக்காக போட்டுவிட்டு கருணாஸ் போன்றோரை வளர்த்துவிடுங்கள்

தேவர் என்ன தமிழக கட்சிகளுக்கு வாக்களிக்க சொன்னாரா? இல்லை திராவிட கும்பலுக்கு பல்லாக்கு தூக்க சொன்னாரா?

தேவரை கும்பிடுவார்களாம், ஆனால் அவர் சொன்ன தேசிய அரசியலை மட்டும் பின் தொடராமல் தேவர் வாழ்க என சொல்லிகொண்டே அதிமுகவிற்கு வோட்டு அழிப்பார்களாம், இனி தினகரனுக்காம்

ஏதும் சொன்னால் பசும்பொன் சிங்கம்.. என கிளம்புவார்கள். அவர் சொன்ன நல்ல விஷயத்தை பின்பற்றுவார்களா என்றால் சுத்தமாக இல்லை


முன்பொரு காலத்தில் தெற்கு திசை ஆண்ட மன்னர் அவர்தான், நிச்சயம் அவர்தான்

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக இருந்த ஒரே தமிழன்

தென்னக விளையாட்டு போட்டிகளுக்கும் தடகள போட்டி, கபடி போட்டிகளுக்கும் அவர் உதவியதையும் , விளையாட்டை வளர்த்த விஷயங்களையும் சொல்லியே ஆக வேண்டும்

குறிப்பாக கைபந்து விளையாட்டு.

எல்லாவற்றிற்கும் மேலாக அவரின் சயமதொண்டு வாழ்த்துகுரியது, தமிழகத்தின் பிராதன ஆலயங்களை எல்லாம் சீரமனைக்க உதவினார், அதில் குறிப்பிடதக்கது தென்காசி ஆலயம்

திருச்செந்தூர் பகுதியில் அவரின் கல்விபணியும் கொஞ்சமல்ல, மிகபெரும் சாதனை அது. நடத்திய கல்லூரிகள் ஏராளம்

ஆதித்தனாருக்கு பின் தினதந்தியினை தூக்கி நிறுத்தியவர் சிவந்தி ஆதித்தன் என்பதில் மாற்றுகருத்தில்லை, அதன் திராவிட ஆதரவினை இறுதிவரை நிலை நிறுத்தியவர். அவருக்கு பின் காட்சிகள் மாறி இருக்கலாம்

இன்று அவருக்கு பிறந்த‌ நாள், அஞ்சலிகள்.

தமிழக பத்திரிகை உலகில் தவிர்க்கவே முடியாதவர் சிவந்தி ஆதித்தன்

Image may contain: 1 person, selfie and closeup
—————————————————————————————————————————————–

எப்படி போபர்ஸ் சர்ச்சையில் ராஜிவ் மேல் துளியும் குற்றம் இல்லையோ அப்படி இந்த ரபேல் சர்ச்சையில் மோடியினை சாடுவதும் அபத்தம்

சிக்கல் எங்கோ இருக்கின்றது

உண்மையில் மோடி அரசு செய்த தவறு இந்த காங்கிரஸ் அரசினை அப்படியே பின்பற்றி நாசமாய் போவது, ரபேலும் அப்படித்தான்

மற்ற நாடுகளின் விமான படைக்கும் இந்திய விமான படைக்கும் வித்தியாசம் உண்டு, நமது விமானபடை இயமலை மேல் பறக்க வேண்டும், சியாச்சினில் பறக்க வேண்டும், ராஜஸ்தான் பாலை நிலத்தின் மேல் புழுதி காற்றில் பறக்க வேண்டும், கடல் மேல் பறக்க வேண்டும் என ஏகபட்ட நிர்பந்தங்கள்

இதற்கு முன்னரும் பிரான்ஸ் விமானங்கள் இந்திய விமானபடையில் உண்டு, மிராஜ் , ஜாகுவார் ரக விமானம் அவை, கார்கில் யுத்தத்தில் மிராஜ் விமானமே மானம் காத்தது சந்தேகமில்லை

ஆனால் இன்னும் நவீனபடுத்துகின்றோம் என்றுதான் இந்த காங்கிரஸ் அரசு ரபேல் பக்கம் சென்றது, அதன் பின் ஆட்சி மாறி வீட்டுக்கும் சென்றது

பின் வந்த மோடி அரசு என்ன செய்திருக்கலாம்? இந்த ரபேலை நிறுத்திவிட்டு பேசாமல் வேறு நல்ல நவீன விமானங்களை வாங்கி இருக்கலாம் அதனைத்தான் இவர்கள் செய்யவில்லை

மாறாக ரபேலைத்தான் வாங்குவோம் என ஒற்றைகாலில் நின்றார்கள், சிக்கினார்கள்

இதற்கெல்லாம் ஒன்றுதான் தீர்வு

கிரையோஜெனிக் எந்திரம் வரை செய்து, விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் திட்டம் வரை வெற்றிபெற்ற இந்தியா ஏன் சொந்தமாக நவீன ஜெட் விமானங்களை செய்ய கூடாது?

சீனா செய்யவில்லையா? இஸ்ரேல் செய்யவில்லையா? நாம் ஏன் செய்ய கூடாது

அட ஈரானே சமீபத்தில் செய்துகாட்டியது.

அதை இந்தியா செய்யாத பட்சத்தில் இப்படித்தான் சர்ச்சைகள் வரும், நாட்டின் பாதுகாப்பில் சந்தேகம் எழும்

நவீன விமானங்களை நாமே தயாரிக்க வேண்டும், ஏன் சொந்தமாக ஏவுகனை தயாரிக்கவில்லையா?

அதை செய்யாமல் பல்லாயிரம் கோடிகளில் இறக்குமதி செய்தால் இடைதரகர்கள் புகுந்து குழப்பத்தான் செய்வார்கள், இது உலக யதார்த்தம்

ரபேல் எனும் யூத வார்த்தைக்கு “காப்பாற்ற வருபவன்” என பொருள்படும், அப்படி ரபேல் இந்த காங்கிரசை காப்பாற்ற இந்தியா வந்திருக்கலாம்.