சிதறல்கள்

வைரஸ் தாக்கிய போலியோ மருந்து: தயாரிப்பு நிறுவனம் மூடப்பட்டது; உரிமையாளர் கைது

தெலுங்கானா, டெல்லி போன்ற சில பகுதிகளில் போலியோ சொட்டுமருந்து கொடுக்கபட்ட குழந்தைகளுக்கு விசித்திர நோய் தாக்கியதால் மருந்து சோதிக்கபட்டது, அதில்தான் இந்த வைரஸ் இருப்பதை கண்டுபிடித்திருக்கின்றார்கள்

பச்சிளம் குழந்தைகளை போலியோவில் இருந்து காக்க கொடுக்கபடும் மருந்து உயிரை எடுப்பது பெரும் கொடுமை.

இந்த ஆலை எங்கே இயங்கி இருக்கின்றது என்றால் உபியில் இயங்கி இருக்கின்றது, இப்பொழுது சீல் வைத்திருக்கின்றார்கள்

அது என்ன பாவமோ, சாபமோ தெரியவில்லை. உபியில் இம்மாதிரி அடிக்கடி குழந்தைகள் உயிரோடு விளையாடுகின்றார்கள், கோரக்பூர் சம்பவம் எல்லாம் மறக்க கூடியது அல்ல‌

வெளியில் கொடுத்த மருந்துக்கே தரம் இப்படி என்றால் உபியில் மருந்துதரம் எப்படி இருந்திருக்கும்?

உபி குழந்தைகள் பரிதாபத்திற்குரியவர்கள்

அங்கு அவசிய தேவை நல்ல மருத்துவமனைகளும், குழந்தைகளுக்கான சிறப்பு நிலையங்களும் தரமான மருத்துவமுமே அன்றி ராமர் கோவில் அல்ல‌

இந்த பின் தங்கிய மாநிலத்தில் இருந்து கொண்டு அம்மாநில முதல்வரான யோகி கேரளா போன்ற மற்ற மாநிலங்களை பார்த்து உங்கள் மாநிலத்தில் கழிவறை சரியில்லை, இன்னும் நிறைய சரி இல்லை என்பதுதான் காமெடி

யோகி சாமியாராக இருக்கலாம், அதற்காக உபி குழந்தைகளை காக்க சாமியா வரும்?

[October 4, 2018 ]

============================================================================

தேர்தலுக்காக மட்டுமே அம்பேத்கரை நினைவில் வைக்கும் கட்சி காங்கிரஸ் – அமித் ஷா

ஆமாம், தேர்தலுக்கு கூட அம்பேத்காரை நினைக்காத கட்சி பாஜக.

[ October 5, 2018 ]

============================================================================

திருமுருகனை ஸ்டாலின் சந்தித்ததை சொன்னால் பல திமுகவினர் வந்து தளபதியின் ராஜதந்திரம் உனக்கு புரியாது என்று வரிந்து கட்டுகின்றார்கள்

தளபதியின் ராஜதந்திரம் பிரியாணி கடையிலும் இன்னும் சில இடங்களிலும் தெரிந்தது, திருமுருகன் காந்தி விவகாரம் அது அல்ல‌

திருமுருகன் அப்பட்டமான பிரிவினைவாதி, வெளிநாடுகளில் எல்லாம் அவர் இத்தேசம் பற்றி பேசிய மட்டமான விமர்சனங்கள் கொஞ்சமல்ல‌

அரசு மீதான விமர்சனம் என்பது வேறு, வெறுப்பினை கக்கி மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்ததுதல் வேறு

திருமுருகன் இரண்டாம் ரகம்

எங்கிருந்தார் இந்த திருமுருகன்?

2009 வரை அன்னார் எங்கிருந்தார் என்றே தெரியாது, முள்ளிவாய்க்கால் நடந்தமுடிந்தபொழுது பங்குனி 17 என கொடிபிடிக்க தொடங்கினார்

அதன் பின் முழுநேர வேலை திமுகவினையும் காங்கிரசையும் கரித்துகொட்டுவது சாபமிடுவது புலிகள் புகழ்பாடுவது என ஏக அழிச்சாட்டியம்

பின் புலிகள் கதை இனி எடுபடாது என்றவுடன் திடீர் சமூக போராளியானார், ஆனாலும் ஜெயா இருக்கும் வரை மனிதர் அமைதி

அதன் பின் ஏதாவது அரசை குறை சொல்லிகொண்டே இருந்தார், திடீரென நான் இரண்டாம் பெரியார் என்றார், இன்னும் ஏக அழிச்சாட்டியம்

இப்பொழுது தன் இந்திய தேசிய வெறுப்பினை பாஜக மேல் காட்டிகொண்டிருக்கின்றார், ஜெர்மனியில் மிக சர்ச்சையாக பேசிய சர்ச்சையில் சிக்கி சிறையில் இருந்து இப்பொழுது மருத்துவமனையில் கிடக்கின்றார்

இவரை காண சென்றிருக்கின்றார் ஸ்டாலின்

முதலாவது ஸ்டாலினிடம் சில கேள்விகள்

மிஸ்டர் ஸ்டாலின், ஈழமக்களை கொன்றது திமுக என சொல்லிகொண்டே இருப்பவர் திருமுருகன், அவரை நீங்கள் காண சென்றது ஏன்?

அவசரமாக பாஜகவிற்கு எதிரான கூட்டணிக்கு ஆள் திரட்டுவதாக கருதுகின்றீர்களா? அப்படியானால் அன்று ஈழபடுகொலை நடக்கும்பொழுது காங்கிரஸில் விடாபிடியாக இருந்தது ஏன்?

எல்லோருக்கும் தெரியும் திமுகவால் யுத்தத்தை நிறுத்தமுடியாது என்று, ஆயினும் எதிர்ப்பை தெரிவிக்க வெளிவந்தீர்களா? ஆட்சி இழந்தீர்களா

இல்லை

ஆக அன்று காங்கிரசுடன் பதவியில் இருக்க திருமுருகனை கண்டுகொள்ளா திமுக, இன்று பாஜகவினை எதிர்க்க ஓடிவந்ந்து அவரை அரவணைக்கின்றதா?

பதவி ஒன்றிற்காக கட்சி நடத்துபவரா நீங்கள், இதற்காகவா இயக்கம் நடத்தபடுகின்றது? கொஞ்சமேனும் வெட்கமில்லை, மானமில்லை

ஏம்பா திருமுருகா

ஊரெல்லாம் பிரபாகரனின் மகன் பாலசந்திரனை கொல்ல துணைபோன திமுக என ஒப்பாரி வைத்த நீயா ஸ்டாலினை சந்திப்பது?

ஆக உனக்கும் கொஞ்சமும் வெட்கமும் மானமும் அறவே இல்லையா?

ஆக இரு மானங்கெட்டவர்கள் சந்தித்ததெல்லாம் அரசியல் கணக்கா?

இந்த சந்திப்பு சொல்லும் நீதி எதுவென்றால், திமுக ஆட்சி முக்கியம் என்றால் காங்கிரசிடம் இருக்கும் ஈழத்தில் யார் செத்தாலும் சரி

ஆனால் ஆட்சிக்கு வரவேண்டும் என்றாலும் யார் காலையும் பிடிக்கும், அது திமுகவினை ஈழதுரோகி என விமர்சித்தாலும் சரி. இது திமுகவின் ராஜதந்திரம் எனப்படும்

வெளிநாட்டில் இந்தியாவின் ஒருமைபாட்டுக்கு குழிபறிக்கும் ஒரு துரோகியினை ஓடி சென்று சந்தித்து தான் ஒரு தேசவிரோதி என அமைதியாக ஒப்புகொள்கின்றார் ஸ்டாலின், இதுவும் அவரின் ராஜதந்திரம்

[ October 5, 2018 ]

============================================================================

“பங்கு டெல்லிக்கு யார் வந்திருக்கா?

புட்டீனாம் ரஷ்யாவில் இருந்து வந்திருக்கார்

இந்த ஜெயக்குமார் ரஷ்ய‌ லெனின், ஸ்டாலின் மாதிரி தமிழ்நாட்டில் பழனிச்சாமி, பன்னீர்னு சொல்லியிருந்தா மனுஷன் நம்மள பாக்க ஓடிவந்திருப்பார். ஆனா இவர் சே, காஸ்ட்ரோன்னு சொல்லிவிட்டார் பங்கு.

ஆமா பங்கு, அடுத்த கூட்டத்தில நான் லெனின் நீங்க ஸ்டாலின்னு சொல்ல சொல்லிருவோம், அப்புறம் புட்டீன் கண்டிப்பா பார்க்க‌ வருவாரு”

[ October 5, 2018 ]

============================================================================

திருமுருகன் காந்தியின் கருத்து சுதந்திரம் காக்கபட வெண்டும் என்றே ஸ்டாலின் அவரை சந்தித்தார் : உபிக்கள்

முன்பு திமுக தலைவர் பதவி பற்றி குஷ்பு கருத்து சொன்னபொழுது அவர் வீடு தாக்கபட்டபொழுது இந்த ஸ்டாலின் என்ன கருத்துரிமையினை காத்தார் என கேட்டால் உபிக்களுக்கு கோபம் வருகின்றது

[ October 5, 2018 ]

============================================================================

முதல்வர் பழனிச்சாமியுடன் பொன் ராதா கிருஷ்ணன் மரியாதை நிமித்தமான சந்திப்பு

அதாவது பழனிச்சாமியிடம் “மரியாதையாக இந்த விஷயங்களை செய்துவிடுங்கள், இல்லையென்றால்….” என பொன்னார் சொல்வதுதான் மரியாதை நிமித்தமான சந்திப்பு.

[ October 5, 2018 ]

============================================================================

பார்ப்பதற்கு காஷ்மீரிய தீவிரவாதி போலவே இருக்கும் இந்த நபர் யார் என உற்றுபார்த்தால் இது சின்ன மாங்காய் அன்புமணி

ஏன் இப்படி ஆகிவிட்டார்? கேட்டால் காடுவெட்டி குருவினை பிரிந்த சோகம் என்பார்

ஆனால் அதைவிட சோகம் அடுத்த வன்னியர் சங்க தலைவர் யார் என்பதை நியமிப்பதில் லவ்பெல்லுக்கு இருக்கலாம், மிக சவாலான விஷயம் அது

 [ October 5, 2018 ]
Image may contain: one or more people, people standing, shoes and outdoor
=========================================================================

ஓ.பன்னீர்செல்வம் என்னை ரகசியமாக சந்தித்தார் : டிடிவி தினகரன்

ஒரு யோக்கியன் ஒரு கட்டபஞ்சாயத்து மொள்ளமாரியினை ரகசியமாக சந்தித்தால் அதுதான் ஆச்சர்யமான செய்தி

இரு அயோக்கிய மொள்ளைமாரிகள் பகிரங்கமாக சந்தித்தால் என்ன? ரகசியமாய் சந்தித்தால் என்ன?

நாட்டுக்கு தேவையான மகா நல்ல விஷயமா பேசிவிட போகின்றார்கள்???

[ October 5, 2018 ]
============================================================================